ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.052.திருவீழிமிழலை
6.052.திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
2605 | கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண் பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா னான்காண் மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண் விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண் |
6.052.1 |
திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்ற விமானத்தை உடைய குளிர்ந்த வீழிமிழலையில் உள்ள பெருமான், கண்ணாய் கண்ணினது ஒளிசேர்தலால் உண்டாகும் காணுதல் தொழிலாய்ப் பாட்டின்கண் உள்ள இசையாகிய இலக்கியத்தில் வைத்துக் காட்டப்படுகின்ற பண்ணாய், அப்பண்களின் உட்பிரிவுகளாய்ப் பழமாய்ச் சுவையாய்ப் பயன்தருகின்றவனாய், மண், நீர், தீ எல்லாவற்றையும் அசைக்கும் காற்று, நீர் உட்கொண்ட மேகம் சேரும் வானம் என்ற ஐம்பூதங்களாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய் உள்ளான்.
2606 | ஆலைப் படுகரும்பின் சாறு போல சீல முடையடியார் சிந்தை யான்காண் பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண் வேலை விடமுண்ட மிடற்றி னான்காண் |
6.052.2 |
விண்ணிழி தண் வீழிமிழலையான் ஆலையினின்றும் ஒழுகுகின்ற கரும்பின் சாறு போலத்தித் திக்கும் திருவைந் தெழுத்தைத் தனக்குப் பெயராக உடையவனாய், நற்பண்புடைய அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவனாய், வானில் திரியும் மும் மதில்களையும் தீக்கு இரையாக்கிய வில்லை உடையவனாய், பால், தயிர், நெய் இவற்றால் அபிடேகிக்கப்படுபவனாய், பண்டரங்கக் கூத்தாடுபவனாய், சாம்பலை உடல் முழுதும் பூசியவடிவினனாய்ப் பிச்சை எடுப்பவனாய், கடல் விடம் உண்டதால் நீலகண்டனாய் உள்ளான்.
2607 | தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண் கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண் எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண் விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண் |
6.052.3 |
விண்ணிழிதண் வீழிமிழலையான் தண்மை வெம்மை என்ற இரு திறமும் உடையவனாய்த் திருமாலுக்குச் சக்கரத்தை அருளியவனாய், மூன்று கண்களை உடையவனாய், காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காமன் உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணனாய், என் உள்ளத்தில் இருந்த சமண சமயப் பற்றினைநீக்கி என்னை ஆட்கொண்டவனாய், பிரமன் திருமால் இருவருக்கும் தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கியவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு உள்ளான்.
2608 | காதிசைந்த சங்கக் குழையி னான்காண் மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண் ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண் |
6.052.4 |
விண்இழி தண் வீழிமிழலையான்காதில் சங்கக் குழை அணிந்தவனாய்ப் பொன்மலை போன்ற உருவத்தானாய்ப் பார்வதியின் மேம்பட்ட தவத்தைச் சோதித்தவனாய், வலிய பன்றியின் வெள்ளிய கொம்பினை அணியாக அணிந்தவனாய், எல்லாவற்றிற்கும் முற்பட்டவனாய், அண்டங்களையும் கடந்து பரந்தவனாய், ஐந்தலைப்பாம்பினைத் தன் வில்லுக்கு நாணாகக் கொண்டவனாய், வேதம் ஓதுபவனாய், வேத நெறியை உலகிற்கு உபதேசித்தவனாய் உள்ளான்.
2609 | நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண் கையின்மழு வாளொடுமா னேந்தி னான்காண் செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண் வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண் |
6.052.5 |
விண்இழி தண்வீழிமிழலையான்நெய், பால், இளநீர் இவற்றால் அபிடேகிக்கப்பட்டவனாய், நித்திய கல்யாணனாகக் காட்சி வழங்குகின்றவனாய், கைகளில் மழுவும் மானும் ஏந்தியவனாய்க் காலன் உயிரைத்தன் காலால் போக்கியவனாய்ச் சிவந்த அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய்ச் செஞ்சடைமேல் வெண்பிறையைச் சேர்த்தியவனாய், சூடான தீயில் கூத்தாடுபவனாய் உள்ளான்.
2610 | கண்துஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக் வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம் பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண் வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண் |
6.052.6 |
விண்இழிதண் வீழிமிழலையான்எப்பொழுதும் அறிதுயில் கொள்ளும் திருமால் தனக்குச் சக்கராயுதம் வேண்டுமென்று செந்தாமரை போன்ற தன் கண் ஒன்றனைக் குறைந்த மலராகக் கொண்டு அருச்சித்த அதனைக்கண்டு அவனுக்குச் சக்கரம் அருளியவனாய், வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை, வன்னி, ஊமத்தை என்னும் இவற்றை ஆகாய கங்கையோடு சடையில் மறைத்த பெரியதேவனாய், பண்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய், மேம்பட்டவனாய், உயர்ந்த இடத்தில் இருப்பவனாய்ப் பிறையைப் பாம்போடு சடையில் வைத்தவனாய், அடியார் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றான்.
2611 | கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண் தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண் வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண் |
6.052.7 |
விண்இழிதண் வீழிமிழலையான் மலைபோல விளங்கிய தோள்களை உடைய சலந்தரன் என்ற அசுரனுடைய உடலைப்பிளந்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கிய கருணையாளனாய், வில் விளங்கும் தோளை உடைய அருச்சுனன் வலிமையைக் குறையச் செய்து வேடுவனாய் அவனோடு போர் செய்து தன் போர்த் திறமையைக் காட்டியவனாய், மாயையின் மேம்பட்டதாகிய உயிரினும் மேம்பட்ட பொருளாய் இருக்கின்றவனாய்ச் சதாசிவனாய், ஒப்பற்றவனாய், பார்வதியைத் தானும் விரும்பி அவளால் விரும்பப்படுபவனாய் இருப்பவனாவான்.
2612 | மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம் பொய்த்தவன் காண் புத்தன் மறவா தோடி உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் |
6.052.8 |
ஞானிகள் விரும்பிப்போற்றும் விண்இழிதண் வீழிமிழலையான் உண்மையான தவத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உள்பொருளாய் விளங்குபவனாய்த் தன் இடத்து விருப்பம் இல்லாத இரும்புபோன்ற கடிய மனத்தவர்களுக்குத் தன் உருவத்தைக் காட்டாது மறைந்தே இருப்பவனாய், சாக்கியநாயனார் மறவாமல் இடும் சிறு கற்களைப் புதிய மலர்களாக ஏற்பவனாய், தன்னைத் தியானித்தவர்களை உயர்கதிக்கண் செலுத்துபவனாய், உலகங்களை அழித்துப்படைத்துக் காக்கும் திறல் உடையோனாய் உள்ளான்.
2613 | சந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண் இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய் தான்காண் மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண் வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண் |
6.052.9 |
விண்இழிதண் வீழிமிழலையான்தக்கன் வேள்வியில் சந்திரனைத் திருவடியால் தேய்த்துத் தக்கனை வெகுண்டு எச்சன் தலையை நீக்கி இந்திரனுடைய தோள்களை ஒடித்துப்பின் அவர்களுக்கு அருள் செய்தவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், தன்னை விருப்போடு நினைப்பவர்களுக்கு அன்பனாய், மந்திரமும் வேதப்பொருளும் ஆயினானாய்ப் பிரமனும் திருமாலும் மேலும் கீழும் அறியாவண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவனாய் உள்ளான்.
2614 | ஈங்கைப்பே ரீமவனத் திருக்கின்றான்காண் ஓங்குமலைக் கரையன்றன் பாவையோடும் கோங்குமலர்க்கொன்றையந்தார்க் கண்ணி யான்காண் வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண் |
6.052.10 |
விண்இழிதண் வீழிமிழலையான்இண்டங் கொடிகள் அடர்ந்த சுடுகாட்டில் இருப்பவனாய், எங்கள் தலைவனாய், யானைத்தோலைப் போர்த்தியவனாய்ப் பார்வதியோடு ஒரே உருவமாய் நின்றவனாய், ஓங்காரவடிவினனாய், கோங்கு கொன்றை ஆகிய மாலையை உடையவனாய்க் காளை எழுதிய கொடியை உடையவனாய், வேங்கைத்தோலை மேலாடையாகக் கொண்டவனாய் உள்ளான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.052.திருவீழிமிழலை , மிழலை, யானே, தண்வீழி, உள்ளான், விண்இழிதண், காட்சி, னான்காண்விண்ணிழி, உடைய, உடையவனாய், வீழிமிழலையான், திருமுறை, இருப்பவனாய், திருவீழிமிழலை, நிற்கின், வன்னி, கொண்டவனாய், மேம்பட்ட, காட்டி, விண்இழி, ஆறாம், சடையில், சந்திரனைத், திருவடியால், விரும்பி, செய்து, சங்கக், தோள்களை, கொன்றை, திருமால், சாறு, பதிகங்கள், திருச்சிற்றம்பலம், மேம்பட்டவனாய், உள்ள, நீர், உள்ளத்தில், தேவாரப், கண்ணி, அருளியவனாய், கூத்தாடுபவனாய், இவற்றால், பால், கொண்டு