ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.051.திருவீழிமிழலை
6.051.திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
2594 | கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் மயிலாடு துறையுளார் மாகா ளத்தார் அயில்வாய சூலமுங் காபா லமும் வெயிலாய சோதி விளங்கு நீற்றார் |
6.051.1 |
திருமாலுக்குச் சக்கரம் ஈந்த பெருமானார், கூரிய நுனியினை உடைய சூலமும் மண்டையோடும் விளங்கும் திருக் கைகளை உடையவராய், காளையை இவர்ந்து வெயில்போல ஒளி வீசும் நீற்றினைப் பூசிக் கயிலை மலை, நாகை குடந்தைக் காரோணங்கள், கந்தமாதனம், காளத்தி, மயிலாடுதுறை, உஞ்சைனி இரும்பை அம்பர் மாகாளங்கள், வக்கரை இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2595 | யூதியணி பொன்னிறத்தர் பூண நூலர் கேதிசரம் மேவினார் கேதா ரத்தார் மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார் வேதிகுடி யுள்ளார் மீயச் சூரார் |
6.051.2 |
கெடிலக்கரையிலுள்ள அதிகை வீரத்தானப் பெருமான் பெருமான் பெருந்துயரைத் தீர்த்து என்னை வாழச் செய்தவராய்ப் பொன்னார் மேனியில் நீறு பூசி, பூணூல் தரித்து, கோபம் மிக்க பாம்பினை அணிந்து, காதில் வெண்குழையை இட்டு, எல்லோருக்கும் நன்மை செய்பவராய், கேதீச்சரம், கேதாரம், மழு ஏந்தும் மழபாடி, வேதிகுடி, மீயச்சூர், இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2596 | அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார் உண்ணா ழிகையார் உமையா ளோடும் பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த |
6.051.3 |
இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை, ஆரூர், அளப்பூர், அந்தணர்கள் மிக்க வைகல், மாடக் கோயிலின் மூலத்தானம், ஒற்றியூர், பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம், ஏமகூடம், பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார்.
2597 | வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார் வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி |
6.051.4 |
வேதம் ஓதும் நாவினராய், முன்பு வெண்கோட்டுக் கருங்களிறு ஒன்றை அது பேரொலி செய்யுமாறு பற்றி அதன் தோலை உரித்துப் போர்த்திய கோபமுற்ற வடிவினைப் பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி அஞ்சுமாறு காட்டி, வெண்காடு, செங் காட்டங்குடி, வெண்ணி, வேட்களம், வண்டுகள் பண்பாடும் பழனம், பராய்த்துறை, சிராப்பள்ளி இவற்றில் தங்கிய பெருமான் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2598 | புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சிமேற் கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார் விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ |
6.051.5 |
தம்மைச் சுற்றிப் பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கூத்து நிகழ்த்தும் பெருமான், புலித்தோலை உடுத்துக் கச்சிமேற்றளி, குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பம், கழுமலம் இவற்றில் வீடுகள் தோறும் பிச்சைக்கு உலவும், முழு எலும்புக் கூட்டைத் தோளில் அணிந்த, வடிவத்தாராய், மலர் மாலையை அணிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் காளை வடிவம் எழுதப்பட்ட கொடியோடும் செல்வம் மிகும் வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2599 | பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார் இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார் கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார் விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த |
6.051.6 |
கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான், அவ்வூர் மூலத்தானம், அரதைப்பெரும்பாழி, இரும்புதல், இரும்பூளை, இன்னம்பர், ஈங் கோய்மலை, கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார்.
2600 | மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் கறைக்காட்டுங் கண்டனார் காபா லிய்யார் பறைக்காட்டுங் குழிவிழிகண் பல்பேய் சூழப் மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார் |
6.051.7 |
பழையனூர் ஆலங்காட்டுப் பெருமானார் மண்டை ஓட்டினை ஏந்திப் பறையைப்போல குழிந்த விழிகளை உடைய பேய்கள் பல சூழ, நீலகண்டராய், மார்க்கண்டேயனுக்குத் துன்பம் தரவந்த காலன் அழியுமாறு அவனை ஒறுத்து, மறைக்காடு, வலிவலம், வாய்மூர், வாழ்கொளிபுத்தூர், உஞ்சேனி இரும்பை அம்பர் மாகாளங்கள், கற்குடி, விற்குடி, கானப்பேர் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2601 | அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார் தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார் நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர் வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார் |
6.051.8 |
பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி, வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2602 | கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார் தண்டலையார் தலையாலங் காட்டி லுள்ளார் வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் வெண்டலைகைக் கொண்ட விகிர்த வேடர் |
6.051.9 |
வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திய, உலகத்தார் கொள்ளும் வேடங்களிலிருந்து வேறுபட்ட வேடத்தை உடைய பெருமானார், கொண்டல், கொண்டீச்சரம், கோவலூர் வீரட்டம், சோலைகள் சூழ்ந்த தலையாலங்காடு, தலைச்சங்காடு, காவிரி வண்டலொடு மணலைக் கரையில் சேர்க்கும் திருவலஞ்சுழி, வைகல் மாடக்கோயில் ஆகிய தலங்களில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2603 | அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார் புரிச்சந்தி ரத்துள்ளார் போகத் துள்ளார் எரிச்சந்தி வேட்கு மிடத்தார் ஏம விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர் |
6.051.10 |
திருமால் பிரமன், இந்திரன் என்பவர்களுக்குக் காண்டற்கு அரியராய் உள்ளாராய், உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பாராய், இமவான் மகளாகிய பார்வதியிடத்து விருப்பமுடையவராய், மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும் வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவராய், தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவராய், உள்ளங்கையை விரித்து அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவராய்ச் சிவபெருமான், அரிச்சந்திரம், அம்பர்மாகாளம், புரிச்சந்திரம், ஏமகூடம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2604 | புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார் தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப் மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர் |
6.051.11 |
ஒளிவீசும் சடைமுடி உடையவராய், காளையை வாகனமாக உடையவராய், வலிமை மிக்க தன் ஆற்றலை நினைத்துக் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய மலைகளை ஒத்த தலைகளையும் தோள்களையும் தாள்களையும் பொற்கழலணிந்த தம் திருவடியின் ஒரு விரலை ஊன்றி மலையின் கீழ் நொறுங்குமாறு செய்து பின் அவனுக்கு அருள் செய்த உலக நாயகர், புன்கூர், புறம் பயம், புத்தூர், பூவணம், புலிவலம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விருப்புற்று வந்தடைந்தார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.051.திருவீழிமிழலை , விரும்பி, மிழலையே, மேவி, னாரே, இவற்றில், வந்தடைந்தார், தங்கி, பெருமானார், உடைய, வீழிமிழலையை, பெருமான், தங்கித், திருவீழிமிழலையை, மிக்க, வேதம், திருமுறை, யுள்ளார், உடையவராய், திருவீழிமிழலை, வண்டுகள், பூதங்கள், காட்டி, ஏமகூடம், அடைந்தார், பதிகங்கள், சோலைகள், அணிந்த, ஆறாம், அயவந்தி, வேடர்வீழி, வாய்மூர், இரும்பூளை, மூலத்தானம், தேவாரப், சூழ்ந்த, ஆரூர், காபா, மாகா, காளையை, கயிலை, அம்பர், மாகாளங்கள், காளத்தி, திருச்சிற்றம்பலம், தேவர்கள், இரும்பை, யேத்தவீழி, மாடக், என்னை, அந்தணர்கள், வைகல்