ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.047.திருஆவடுதுறை
6.047.திருஆவடுதுறை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
2554 | திருவேயென் செல்வமே தேனே வானோர் உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின் கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் |
6.047.1 |
நல்லூழே! என் செல்வமே! வானோர்க்குப் புகழ் உண்டாக ஆற்றலை அருளும் ஞானமே! அடியார்க்குத்திருக்காட்சி வழங்கும் பெரிய சோதியே! என் கற்பகமாகவும் உறவாகவும், உடலாகவும் உள்ளமாகவும் உள்ளத்தின் உணர்வாகவும் கண்ணாகவும் கண்ணின் கருமணியாகவும் கருமணியின் பாவையாகவும் செயற்படும் ஆவடுதுறையிலுள்ள தேவர் தலைவனே! வடிவு புலப்படாத என் வல்வினை நோய் என்னைத் தாக்காதபடி காப்பாயாக.
2555 | மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின் ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன் மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய் |
6.047.2 |
திருவைந்தெழுத்தை என் நாவிலிருந்து நீக்கேன், திருவருள்களை என் நெஞ்சினால் மறவேன். எண்ணினால் எம்பெருமான் திருவடிகளையே எண்ணுவதல்லால் பிற தெய்வங்களை எண்ணா நாயேன் அத்தெய்வங்களை என் நெஞ்சில் ஏலேன். என்மேல் நீ செய்யும் செயல்களைக் கண்டு வேதனைப் பட்டு நானும் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக.
2556 | வரையார் மடமங்கை பங்கா கங்கை உரையா உயிர்போகப் பெறுவே னாகில் கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் கரையா அடியேனை அஞ்சே லென்னாய் |
6.047.3 |
பார்வதி பாகனே! கங்கையைச் சடையில் தரித்தமணவாளா! உன் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே உயிர் நீங்கப் பெறுவேனாயின் மிக்க நோய்கள் எத்தனையும் என்னை அடைந்து என் செய்ய முடியும்? கரைந்து நினைந்து உருகிக் கண்ணீர் வடித்துக் காதலித்து உன் திருவடிகளே துதிக்கும் அன்பர்களுக்கு அரசே! ஆவடுதுறை உறையும் அமரர் ஏறே! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக.
2557 | சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங் நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும் அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் |
6.047.4 |
ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே! ஆரவாரித்த அசுரர்களின் மும்மதில்களும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்து, பார்வதியை அஞ்சுமாறு பார்த்துக் கரிய பெண் யானையைத் தழுவி ஓடிய யானையின் தோலை உரித்தவனே! முழு எலும்புக்கூட்டை அணிந்தவனே! எங்கள் தலைவனே! பூமிக்குப் பாரமாய், நில்லாத உயிரை உடலில் நிலை நிறுத்த உடலைப் பாதுகாக்கும் கீழ்மகனாகிய அடியேன் அலுத்து விட்டேன். அடியேனை அஞ்சேல் என்று காப்பாயாக.
2558 | நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி துறவாத துன்பந் துறந்தேன் தன்னைச் உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட அறவா அடியேனை அஞ்சே லென்னாய் |
6.047.5 |
நீரில் மூழ்கிப் பின் நறிய சிறந்த மலர்களைப் பறித்து உன் திருவடிகளிலே இட்டு, உன்னைத் துதித்து வாழ்த்தித் துன்பங்களைப் போக்கிய அடியேனை, இவ்வுலகில் ஊழ்வினை வந்து யாது செய்ய இயலும்? தேவர்களிடத்து உறவு பூண்டு அவர்கள் வேண்டியதனால் கடல் நஞ்சினை உண்டு அவர்களைப் பாதுகாத்த அறவோனாகிய ஆவடுதுறை அமரர் ஏறே! அடியேனை அஞ்சேல் என்பாயாக.
2559 | கோன்நா ரணன் அங்கந் தோள்மேற் கொண்டு கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக் நானார் உமக்கோர் வினைக்கே டனேன் ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய் |
6.047.6 |
அரசனாகிய நாராயணனுடைய முழு எலும்புக் கூட்டைத் தோள் மேல் தரித்துப் பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்தி யானைத் தோலைப் போர்த்துக் கங்காள வேடம் தரித்தவராய், எங்கும் உலவுபவரே! அடியேன் உமக்கு என்ன உரிமை உடையேன்? வினையாகிய கேட்டினை உடைய எமக்கு எல்லா நல்வினையும் தீவினையும் ஆகிய ஆவடுதுறைத் தேவர் தலைவனே! அடியேனை அஞ்சேல் என்பாயாக.
2560 | உழையுரித்த மானுரிதோ லாடை யானே கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை |
6.047.7 |
அகவிக்கொண்டு மயில்கள் ஆடும் ஆவடுதுறைத் தேவர் தலைவனே! மானை உரித்து அதன் தோலை ஆடையாக உடையவனே! பார்வதியின் தலைவனே! தேவர் தலைவனே! மூங்கிற் கோல் சுட்டும் ஆழத்தையும் கடந்த ஆழத்தை உடைய கடலின் நஞ்சினை உண்ட நீலகண்டனே! கயிலாய மலையில் உறைபவனே! உன் அடியவர் பிழைகளைப் பொறுப்பதும் உன் கடமை அன்றோ? உன்பால் பேரருள் உண்டு அன்றோ?.
2561 | உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ கலந்தார் மனங்கவருங் காத லானே மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் |
6.047.8 |
ஆவடுதுறைத் தேவர் தலைவனே! இறந்தவ ருடைய தலையோட்டைக் கையில் ஏந்தித் தேவர் உலகில் பிச்சை ஏற்பானே! உன்பால் அன்பால் கலந்தவர்களுடைய உள்ளத்தைக் கவரும் அன்புடையாய்! கையில் தீ கொழுந்துவிட்டு எரியுமாறு வைத் திருப்பவனே! தலைவனே! உண்மையாகத் தூய்மைஅற்ற இவ்வுடலில் ஏற்பட்ட மயக்கங்களில் விழுந்து அழுந்தி ஒவ்வொருநாளும் வருந்தும் அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வாயாக.
2562 | பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங் எல்லாரு மென்தன்னை யிகழ்வர் போலும் கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய் |
6.047.9 |
ஆவடுதுறைத் தேவர் தலைவனே! பல் நிறைந்த வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திக் காளையை இவர்ந்து ஊர் ஊராகப் பிச்சை எடுப்பவனே! பார்வதியும் நீயும் சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்புகிறீர். நீங்கள் இருவீரும் என்னை ஆட் கொள்ளக் கருதவில்லையென்றால் மக்களெல்லாரும் அடியேனை இகழ்ந்து கூறுவர். அறிவற்ற பரு உடல்களை உடைய சமணர் புத்தர் ஆகிய பயனற்றவர் தொடர்பை நீக்கிவிட்ட அடியேனை அஞ்சேல் என்பாயாக.
2563 | துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன் பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற் செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச் அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் |
6.047.10 |
ஆவடுதுறைத் தேவர் பெருமானே! துறந்தவர் செல்லும் தூய நெறியிலே வாழ்கின்றேன் அல்லேன். உனக்கு இணையான மாலைகளைச் சூட்டும் தூய்மை உடையேன் அல்லேன். உன் திருவருளைப் பற்றிப் பேசியும் அப்படிப் பேசாத நாள்களைப் பயனற்ற நாள்களாகக் கணக்கிட்டும் வாழ்கின்றேன். செறிவாகப் பொருந்திய மதில்களை உடைய இலங்கை அரசனாகிய இராவணனைச் செறிவான கயிலை மலைக்கீழ் நசுக்கிப் பின் அவனுக்கு அருளிய உன் செயல்களை எல்லாம் அறிந்த அடியேனை அஞ்சேல் என்பாயாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.047.திருஆவடுதுறை , அடியேனை, தலைவனே, தேவர், ரேறே, டுறையுறையும், லென்னாய்ஆவடுதண், அஞ்சேல், அஞ்சே, ஆவடுதுறைத், கையில், உடைய, திருமுறை, உறையும், என்பாயாக, திருஆவடுதுறை, மண்டையோட்டைக், அரசனாகிய, நஞ்சினை, உண்டு, கையி, உடையேன், அல்லேன், பெருமானே, உன்பா, உன்பால், பிச்சை, பின், அன்றோ, வாழ்கின்றேன், ஆகிய, ஆவடுதுறை, காப்பாயாக, எண்ணா, ஆவடுதுறையில், செல்வமே, திருச்சிற்றம்பலம், ஆறாம், தேவாரப், பதிகங்கள், அருளுவாயாக, கண்ணீர், எங்கள், தோலை, முழு, தீயில், அமரர், நின்கழலே, என்னை, செய்ய, அடியேன்