ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.046.திருஆவடுதுறை
6.046.திருஆவடுதுறை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
2543 | நம்பனை நால்வேதங் கரைகண் டானை கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக் செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் அம்பொன்னை யாவடுதண் டுறையுள் மேய |
6.046.1 |
நம்மால் விரும்பப்படுபவனாய், நான்கு வேதங்களையும் கரை கண்டவனாய், ஞானப் பெருங்கடலாய், நன்மையாய், ஏகம்பனாய், கல்லாலின் கீழ் இருந்தானாய், கற்பகமாய், அடியார்களுக்கு அருள் செய்வானாய், செம்பொன், பவளம், முத்துத்திரள் திங்கள், ஞாயிறு, தீ இவற்றை ஒப்பானாய், நீராய், செல்வமாய் உள்ள, ஆவடுதுறையிலுள்ள சிவபெருமான் திருவடிகளை அடியேன் அடைந்து தீவினையிலிருந்து பிழைத்தேன்.
2544 | மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் என்னானை யெந்தை பெருமான் தன்னை அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.2 |
மின்னாய், மின்னிடையே சேரும் இடியாய், வெண்முகிலாய், மழைபெய்யும் கார்முகிலாய்ச் சுதந்திரனாய், தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனாய்ப் பல்லுயிர்க்கும் தாயாய்த் தந்தையாய் எனக்கு உரிய எந்தையாய்ப் பெரிய உலகங்களும் உலகங்களின் தொகுப்பாகிய அண்டங்களுமாய்ச் செவ்வான் போன்ற நிறத்தினனாய், ஆவடுதுறையுள்மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே.
2545 | பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச் வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.3 |
அடியார் உள்ளத்தே பரவினவனாய்ப் பவளக் கொழுந்தாய், மாணிக்கக் கொத்தாய்த் தன்னை அடைவதற்குத்தானே பற்றுக்கோடாகிய வழியாய்ச் சொற்பொருளின் உணர்வாய், வித்தாய், முளையாய், முளைகளின் கிளையாய், வேராய்ப் பயனாய், ஊழ்வினை வயத்தால் வந்த அதன் கொடிய தொடர்பான துயரங்களைத் தீர்க்கும் தலைவனாய், ஆவடுதுறை மேய அத்தனாய் உள்ள அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2546 | பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப் ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங் தோணியைத் தொண்டனேன் தூய சோதிச் ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.4 |
பிறைதவழ் செஞ்சடையனாய்த் தன்பால் பெரும் பற்றுக் கொண்ட அடியவரை வீட்டுலகத்திற்கு ஏற்றும் ஏணியாய்த் துயர்க் கடல் சுழியில் அகப்பட்டு வருந்தும் அடியேனை ஏறி அக்கரை அடைய உதவிச்சேர்க்கும் தோணியாய், தூய ஒளி வீசும் வெள்ளிய காதணி அணிந்தவனாய், ஒளிவீசும் பொற்காசின் மாற்றினை அளக்கும் உரையாணியாய் ஆவடுதுறையில் மேவிய அரனடியே தொண்டனாகிய அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2547 | ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப் திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித் அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.5 |
ஒப்பற்ற மாணிக்கமாய், உலகுக்கு உறுதியாய், உதயமலையின் உச்சியாய், இடியாய், பெரிய இரத்தினமாய், பஞ்சகவ்ய அபிடேகப் பிரியனாய், தூயனாய், ஆன்மாக்களின் தலைவனாய்ப் பவளக்குன்றாய், செல்வம் நல்கும் சிந்தாமணியாய்த் தேன் கரும்பு இவற்றின் இனிப்பாய், ஒளிவீசும் கிட்டுதற்கு அரிய மாணிக்கமாய், ஆவடுதுறைமேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2548 | ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக் நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.6 |
காளை வாகனனாய், எண்தோளனாய், இரவில் கூத்து நிகழ்த்துபவனாய், அழித்தற் கடவுளாய்க் கூற்றுவனை உதைத்தவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சுண்ட நீலகண்டனாய்த் திருநீறு அணிந்தவனாய், நீண்ட பாம்பு ஒன்றனை இடையில் இறுகக் கட்டியவனாய், நீண்ட சடையில் கங்கை சூடியாய், ஆவடுதுறை மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2549 | கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக் செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத் எம்மானை என்மனமே கோயி லாக அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.7 |
துதிக்கையை உடைய தோலாத மத யானைத் தோலை உரித்தவனாய்க் கடல், மலை, மேகம், ஆகாயம் இவையாவும் ஆனவனாய்ச் செம்பவளமும் வெண்முத்தும் போன்றவனாய்த் திங்கள் சூரியன் தீ என்ற முச்சுடராய், எம் தலைவனாய், என் மனத்தையே இருப்பிடமாகக் கொண்டிருப்பது போல எலும்பும் உருகும் அடியவர்களுக்கும் தலைவனாய், ஆவடுதுறையுள் மேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2550 | மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த பையா டரவமதி யுடனே வைத்த ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.8 |
வாய்மை வடிவினனாய், வஞ்சகக் கலப்பு இல்லாதவனாய், வெற்றிடமாய், குளிர்ந்த நிழலாய்த் தீ ஏந்திய கையனாய்க் காமன் உடலை எரித்த கண்ணனாய், முக்கண்ணனாய், பட மெடுத்தாடும் பாம்பையும் பிறையையும் சேர்த்து வைத்த சடையனாய்ப் புலித்தோல் ஆடையனாய், எல்லாருக்கும் தலைவனாய் ஆவடுதுறை மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2551 | வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச் மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.9 |
வேண்டுதல் வேண்டாமை இலானாய், அருச்சுனனை முன்னொரு காலத்தில் வருந்தச் செய்த வேடனாய்த் தூண்டாமலே ஒளிவீசும் சோதியாய்ச் சூலப்படையானாய், கூற்றுவன் வாழ்நாள் கழியுமாறு உதைத்த வலியவனாய், மக்களும் தேவரும் வணங்கித் துதிக்கும் தலைவனாய், ஆவடுதுறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2552 | பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப் கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக் செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத் அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.10 |
பந்தினைப் பொருந்திய மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனாய்ப் பாடலும் ஆடலும் பயின்றவனாய்க் கொத்தாகப் பூக்கும் நறிய கொன்றை மாலையை அணிந்தவனாய், அழகிய நீலகண்டனாய்த் தமிழும் வடமொழியும் ஆகிய மேம்பட்டவனாய், மார்பில் வெள்ளிய பூணூல் அணிந்த அந்தணனாய், ஆவடு துறைமேவிய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
2553 | தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத் பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப் நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய |
6.046.11 |
கடலில் தோன்றிய விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் தரித்தவனாய்த் தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனாய், அவனுடைய செருக்கைப் போக்கியவனாய்ச் சடையில் பிறை சூடியாய்ப் பெரிய வலிமையால் கயிலையைப் பெயர்த்த இராவணனை நெரித்தவனாய்ப் பார்வதி பாகனாய்க் கீழ் மகனான அடியேனுடைய உடலில் ஏற்பட்ட நோயை நீக்கிய ஆவடுதுறை மேவிய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.046.திருஆவடுதுறை , அடிநாயேன், அடைந்துய்ந், தேனே, அடைந்து, மேயஅரனடியே, டுறையுள், ஆவடுதண், உய்ந்தேன், அரனடியே, தலைவனாய், பெரிய, அடியே, ஆவடுதுறை, அரன், அணிந்தவனாய், ஒளிவீசும், திருஆவடுதுறை, திருமுறை, மாணிக்கமாய், மேவிய, கடலில், உடைய, ஆவடுதுறையுள், வேண்டாமை, பார்வதி, சடையில், நீண்ட, வெள்ளிய, தோன்றிய, நீலகண்டனாய்த், நஞ்சுண்ட, அடியார், பவளத்தைத், முத்தைத்திங்களை, ஞாயிற்றைத், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், ஆறாம், தேவாரப், கீழ், திங்கள், பவளக், பிறைதவழ்செஞ், சடையி, சொற்பொருளின், தன்னை, உள்ள, இடியாய், கடல்