இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.084.திருநனிபள்ளி
2.084.திருநனிபள்ளி
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர்.
தேவியார் - பர்வதராசபுத்திரி.
2377 | காரைகள்
கூகைமுல்லை களவாகை யீகை சூரைகள் பம்மிவிம்மு சுட கா டமர்ந்த தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் |
2.084. 1 |
நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச் சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய, சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும்.
2378 | சடையிடைப்
புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை |
2.084. 2 |
சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம் வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீநிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும்.
2379 | பெறுமலர்
கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு |
2.084. 3 |
அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத் தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய நனிபள்ளியாகும்.
2380 | குளிர்தரு
கங்கைதங்கு சடைமா டிலங்கு ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு |
2.084. 4 |
குளிர்ந்த கங்கை தங்கிய சடையின்கண் விளங்கிய தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை ஒருபாகமாக உடைய பெருமான் உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த, கொம்பு என்னும் இசைக்கருவியின் பாடல்களோடு குயில் கூவும் இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய சோலைகளில் வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும்.
2381 | தோடொரு
காதனாகி யொருகா திலங்கு காடிட மாகநின்று கனலாடும் எந்தை வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு |
2.084. 5 |
ஒருகாதில் தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி, வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதிமுறையிது என்று தெரிந்து நீராடி மணம் பொருந்திய நீரை விரலால் தௌத்து அர்க்கியம்தர, ஒலியோடு பெருவெள்ளமாய்ப் பெருகி நாடுமுழுதும் பரவி வரும் காவிரியின் கரையில் விளங்கும் நனிபள்ளியாகும்.
2382 | மேகமொ
டோடுதிங்கண் மலரா அணிந்து ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு |
2.084. |
மேகங்களோடு ஓடும் திங்களைக் கண்ணியாகச் சூடி, மலைமகளை அழகிய பொன்மயமான திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய பெருமான் எழுந்தருளிய நகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும் மலையின்கண் உள்ள அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும் நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும் புரட்டியும் எற்றியும் ஓடிவரும் காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும்.
2383 | தகைமலி
தண்டுசூலம் அனலுமிழு நாகங் வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை |
2.084. 7 |
பெருமை பொருந்திய தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய், வகையாக அமைந்த வன்னி கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும் திருக்கூத்தியற்றிய பெருமான் உகந்த நகர், புகையாக எழுந்த மணத்துடன் மாலை புனைவார்கள் புகழும் ஓசையும், பணிந்து போற்றுவார் பாடும் பாடல் ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழபடப்பைகளை உடைய நனிபள்ளியாகும்.
2384 | வலமிகு
வாளன்வேலன் வளைவா ளெயிற்று டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் |
2.084. 8 |
வலிமை மிக்க வாள் வேல் ஆகியவற்றையும் வளைந்த ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன் உடல் வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர், கீழுலகிலும் மேலுலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்கின்ற நீதிவடிவினனாகிய அவனை நன்மைமிக்க தாண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும்.
2385 | நிறவுரு
வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற அறவுறு வேதநாவன் அயனோடுமாலு புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை நறவிரி போதுதாது புதுவாச நாறும் |
2.084. 9 |
நிறம் பொருந்தியதொரு எரிவடிவம் தோன்றித் தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாதவராய் அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும் முடி அடிகளைத் தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர், முல்லை நிலத்தில் விரிந்த முல்லை, மல்லிகை, அசோகு, புன்னை, கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் புத்த மலர்களில் புதுமணம் கமழும் நனிபள்ளியாகும்.
2386 | அனமிகு
செல்குசோறு கொணர்கென்று கையில் மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு |
2.084. 10 |
அன்னமாக, வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும், மனம் விரும்பிக் கஞ்சியைப் பனைமட்டையாலியன்ற மண்டையில் ஏற்றுண்டு தொண்டர்க்குரிய குணமின்றி நிற்கும் புத்தரும் கூறுவனவற்றைக் கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய நாவினை உடைய விடையூர்தியான் விரும்பிய நகர், தௌந்த ஞானமுடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைப் பரவிப் போற்றும் நனிபள்ளியாகும்.
2387 | கடல்வரை
யோதமல்கு கழிகானல் பானல் படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க |
2.084. 11 |
கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.084.திருநனிபள்ளி , நமர்காள், நனிபள்ளி, போலும், நனிபள்ளியாகும், நகர்தான், பெருமான், நகர், உடைய, உகந்த, மணம், பொருந்திய, எழுந்தருளிய, ஆகியவற்றை, பெருகி, கொண்டு, திருமுறை, விரலால், உண்டு, நின்று, திருநனிபள்ளி, முரல, நின்ற, எந்தை, முல்லை, மிக்க, அணிந்து, என்னும், ஒருகாதில், எந்தையாகிய, வளைந்த, ஆடும், சோலைகளில், புனைவார்கள், சீர்மை, திருவடிகளைப், அடிபரவல், புன்னை, கமழும், குணமின்றி, கையில், தொண்டர்நாளும், மதியா, வைத்த, ஆகியவற்றையும், சூடி, பாடல், ஓசையும், கொன்றை, உள்ள, தேன், செறிந்த, ஆகிய, விரும்பும், சிவபிரான், வாளைமீன்கள், சூழ்ந்த, வைகும், துவள, தேவாரப், இரண்டாம், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், கள்ளி, களவாகை, துள்ள, அமைந்த, வண்டுகள், நிறம், கூடி, குளிர்தரு, தானும், கேட்ட, தனது, அடியவர்கள், மாலை, வெள்ளம், தங்கிய, வாய், காதல், யிடமாய, குளிர்ந்த