இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.083.திருக்கொச்சைவயம்
2.083.திருக்கொச்சைவயம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
2367 | நீலநன்
மாமிடற்ற னிறைவன் சினத்தன் சேலன கண்ணிவண்ண மொருகூறுருக்கொள் வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை சாலநல் வேலையோசை தருமாட வீதி |
2.083. 1 |
நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின் ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும் மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும்.
2368 | விடையுடை
யப்பனொப்பி னடமாட வல்ல சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் |
2.083. 2 |
விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும், ஒப்பற்ற நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும், சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகியவற்றைப் பொருந்தச் சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரைமலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சை வயமாகும்.
2369 | படவர
வாடுமுன்கை யுடையா னிடும்பை இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன் நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல |
2.083. 3 |
படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம், மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப்பறவைகள் வேதங்களை ஓதுவதுமாகிய கொச்சை வயமாகும்.
2370 | எண்டிசை
பாலரெங்கு மிகலிப் புகுந்து பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன |
2.083. 4 |
எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு விளக்குகளை வரிசையாக ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவபிரானது பதி, செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும்.
2371 | பனிவளர்
மாமலைக்கு மருகன் குபேர இனியன வல்லவற்றை யினிதாக நல்கும் முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து |
2.083. 5 |
பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின் மருமகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக் கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சை வயமாகும்.
2372 | புலியதள்
கோவணங்க ளுடையாடை யாக நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு |
2.083. 6 |
புலித்தோலையும் கோவணத்தையும், தான் பெற்றுடைய ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப் பொழுதில் உலகை நலிவு செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும்.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 2.083.7 |
2373 | மழைமுகில்
போலுமேனி யடல்வா ளரக்கன் பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொ இழைவள ரல்குன்மாத ரிசைபாடி யாட குழைதரு கண்ணிவிண்ணில் வருவார் கடங்க |
2.083. 8 |
மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றியவனும், பேய்களோடு உடனாடி மகிழ்பவனும் ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல்குலை உடைய மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத்தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும்.
2374 | வண்டமர்
பங்கயத்து வளர்வானும் வைய கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து புண் ரி கங்களோடு குமுதம் மலர்ந்து |
2.083. 9 |
வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும் பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய் நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ணவும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள் வயலிடையே மலரும் கொச்சைவயமாகும்.
2375 | கையினி
லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல பையுடை நாகவாயில் எயிறார மிக்க செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து |
2.083. 10 |
கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும் அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும், புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளையாடவல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டருளும் பரமனாகிய திருச்சிற்றம்பலம் சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம் மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும்.
2376 | இறைவனை
ஒப்பிலாத வொளிமேனி யானை மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும் |
2.083. 11 |
எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி மயமான திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக் கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறைவற்ற ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப் பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞான வடிவினராய் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.083.திருக்கொச்சைவயம் , கொச்சை, வயமே, பதிதான், கொச்சைவயமாகும், ஆகிய, கொண்ட, சிவபிரானது, வளர்கின்ற, திருமுறை, அழகிய, உடைய, தலம், விளங்கும், வயமாகும், இனிதாக, நிறைந்து, திருச்சிற்றம்பலம், சிவபிரான், திருக்கொச்சைவயம், பொருந்திய, மறைத்து, இரண்டாம், இனியன, எங்கும், தேவாரப், வயல்களில், ஏற்று, இறைவன், விருந்த, தாமரை, நடுவே, மலர்கள், குரவம், மன்னி, பறந்து, மழைமுகில், கலிகெட, செய்து, செய்யும், உயர்ந்த, வாளை, புகுந்து, விகிர்தத், துருக்கொள், விமலன், திங்கள், வல்ல, ஒப்பற்ற, விளையாடும், ஒலியும், ஆடும், சோதி, மறையோர்க, வண்டுகள், உண்டு, சிந்தை, பதிகங்கள், கையில், மிக்க, நிறைந்த, சூழ்ந்ததும், பொன்னி