இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.051.திருக்களர்
2.051.திருக்களர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - களர்முளையீசுவரர்.
தேவியார் - அழகேசுவரியம்மை.
2015 | நீரு
ளார்கயல் வாவி சூழ்பொழில் தேரினார் மறுகில் ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஆரநின் றவனே |
2.051. 1 |
நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பானே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.
2016 | தோளின்
மேலொளி நீறு தாங்கிய தாளினார் வளருந் வேளி னேர்விச யற்க ருள்புரி ஆளுகந் தவனே |
2.051. 2 |
தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடிபோற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.
2017 | பாட வல்லநன்
மைந்த ரோடு சேடர்வாழ் பொழில்சூழ் நீட வல்ல நிமல னேயடி ஆடவல் லவனே |
2.051. 3 |
பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாட வீடுகளைக்கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.
2018 | அம்பி
னேர்தடங் கண்ணி னாருடன் செம்பொ னார் பொழில் என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா கன்பு செய்தவனே |
2.051. 4 |
வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாட மாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.
2019 | கொங்கு
லாமலர்ச் சோலை வண்டினங் தெங்கு பைங்கமுகம் மங்கை தன்னொடுங் கூடிய மண தங்கை யிற்படையாய் |
2.051. 5 |
தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மது உண்டு இசை பாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.
2020 | கோல
மாமயில் ஆலக் கொண்டல்கள் சேலிளங் கயலார் நீலம் மேவிய கண்ட னேநிமிர் ஆல நீழலுளார் |
2.051. 6 |
அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2021 | தம்ப
லம்மறி யாத வர்மதில் திண்பலங் கெடுத்தாய் வம்ப லர்மலர் தூவி நின்னடி அம்பலத் துறைவாய் |
2.051. 7 |
தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத் தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப்பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2022 | குன்ற
டுத்தநன் மாளி கைக்கொடி சென்ற டுத்துயர்வான் நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் அன்றடர்த் துகந்தாய் |
2.051. 8 |
மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள்,நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள் வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2023 | பண்ணி
யாழ்பயில் கின்ற மங்கையர் தெண்ணி லாமதியம் உண்ணி லாவிய வொருவ னேயிரு அண்ண லாயவெம்மான் |
2.051. 9 |
யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தௌந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி,திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.
2024 | பாக்கி
யம்பல செய்த பத்தர்கள் தீக்கியல் குணத்தார் வாக்கின் நான்மறை யோதி னாயமண் ஆக்கி நின்றவனே |
2.051. 10 |
நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பினரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்கு பவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2025 | இந்து
வந்தெழு மாட வீதியெ செந்து நேர்மொழியார் அந்தி யன்னதொர் மேனி யானை பந்தன் சொல்லிவை |
2.051. 11 |
திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத் தவம் சித்திக்கும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.051.திருக்களர் , திருக்களருள், கருளாயே, அடைந்தார்க், உன்னை, விளங்கும், அருள், அடைந்தார்க்கு, புரிவாயாக, அருள்புரிவாயாக, பொழில், நீண்ட, உடைய, அழகிய, எழுந்தருளிய, திருமுறை, பெருமானே, திருக்களர், வானவர், நின், நின்ற, தூவி, உயர்ந்த, இரண்டாம், திகழ்கின்ற, தேவாரப், மங்கையர், செந்து, அந்தி, அமரர், பாடல்கள், பணிகள், செய்த, பத்தர்கள், கூடிய, பதிகங்கள், கொண்டு, வாழும், அடைந்த, எழுந்தருளியவனே, திருவடி, போற்ற, கொண்ட, சூழ்ந்த, இறைவனே, சூழ்ந்து, திருவடிகளைப், அன்பர்க்கு, போற்றி, மேனி, அடைந்தவர்க்கு, திருச்சிற்றம்பலம், கெண்டி