இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.050.திருஆமாத்தூர்
2.050.திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர்.
தேவியார் - அழகியநாயகியம்மை.
2004 | குன்ற
வார்சிலை நாண ராவரி வென்றவா றெங்ஙனே தென்ற லார்மணி மாட மாளிகை அன்றில் வந்தணையும் |
2.050. 1 |
தென்றல் ஆர்கின்ற அழகிய மாட மாளிகைகளின் சூளிகைக்கு மேலாக நீண்டுயர்ந்த பனை மரத்தில் அன்றில் பறவை வந்து தங்கி மகிழும் ஆமாத்தூர் இறைவனே! விடைமீது ஏறிவரும் வேதியனே! மேருமலையை நீண்ட வில்லாகவும் வரிகளைஉடைய பாம்பை நாணாகவும், மிக்க எரியை அம்பாகவும், காற்றை ஈர்க்காகவும் கொண்டு முப்புரங்களை வென்றது எவ்வாறு?.
2005 | பரவி
வானவர் தான வர்பல வெருவ வுண்டுகந்த கரவின் மாமணி பொன்கொ ழித்திழி அருவி வந்தலைக்கும் |
2.050. 2 |
மறைவில்லாமல் சிறந்த மணிகளையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு, தன்பால் வீழ்ந்த சந்தனம் கரிய அகில் ஆகியவற்றை அடித்துக்கொண்டு வரும் பம்பையாற்று நீர் ஒழுக்கு வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே! விண்ணவனே! தேவர்களும் அசுரர்களும் கலங்கும்படித் தோன்றிய கரியவிடத்தைக் கண்டு வெருவிப்பரவ அவ்விடத்தை நீர் உண்டு மகிழ்ந்த கருணைக்குக் காரணம் யாதோ?
2006 | நீண்ட
வார்சடை தாழ நேரிழை மாண்ட வார்சுடலை பூண்ட கேழன் மருப்ப ராவிரி ஆண்ட நாயகனே |
2.050. 3 |
பன்றிக் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றை மலர் மாலை, ஒளியும் வரியும் பொருந்திய ஆமை ஓடு ஆகியவற்றை அணிகலனாகப் பூண்டு ஆட்கொள்ளும் தலைவனே! ஆமாத்தூர் இறைவனே! நீண்ட சடை அவிழ்ந்து தொங்க, உமையம்மை பாட, திருநீற்றை மெய்யில்பூசித் திருமால் பிரமன் முதலானோர் மாண்ட கடைஊழியில் நீண்ட சுடலையில் நடமாடும் மாட்சிக்குக் காரணம் யாதோ?
2007 | சேலின்
நேரன கண்ணி வெண்ணகை தேல மாதவ பாலி னேர் மொழி மங்கை மார்நட ஆலை சூழ்கழனி |
2.050. 4 |
பாலையொத்த இனிய மொழிபேசும் மங்கையர் நடனம் ஆடி இன்னிசைபாட, கரும்பு ஆலைகள் சூழ்ந்த வயல் வளம் உடைய நீண்ட பதியான ஆமாத்தூர் அம்மானே! சேல்போன்ற கண்ணையும் வெண்ணகையையும் மான்போன்ற விழியையும் உடைய அழகிய உமையவளைப் பாகமாக வைத்துக் கொண்டு இயன்ற பெரியதவத்தை மேற்கொண்டுள்ள உன் வேடம் பொருந்துமாறு எங்ஙனம்?
2008 |
தொண்டர் வந்து வணங்கி மாமலர் உண்டியால் வருந்த வண்ட லார்கழ னிக்க லந்தும அண்டவாணர் தொழும் |
2.050. 5 |
வண்டல் மண்பொருந்திய வயல்களில் நெற்பயிரோடு கலந்து மலர்ந்துள்ள தாமரைகள் மாதர்களின் ஒளிபொருந்திய முகத்தைப் போலப் பூக்கும் ஆமாத்தூரில் அண்டங்களில் வாழும் தேவர் முதலியோரால் வணங்கப்பெறும் இறைவனே! மாமலர் தூவி நின் திருவடிகளை வணங்கிப் போற்றும் தொண்டர்கள் உணவின்மையால் வருந்தவும்,அதற்கு இரங்காததற்குக் காரணம் யாதோ?
2009 | ஓதி
யாரண மாயநுண் பொருள் நீதி யாலநீழல் சோதி யேசுட ரேசுரும்பமர் ஆதியே யரனே |
2.050. 6 |
சோதியே! சுடரே! வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் விளங்கும் முதல்வனே! அரனே! ஆமாத்தூர் இறைவனே! வேதங்களை ஓதி அவற்றின் நுண் பொருள்அறியாது மயங்கிய சனகாதியர் அன்று ஐயம் கேட்க அவர் கட்கு ஞானமார்க்கத்தை முறையோடு ஆல் நிழலிலிருந்து உரைத்தருளிய உன் தகைமைக்குக் காரணம் யாதோ?
2010 | மங்கை வாணுதன்
மான்ம னத்திடை கங்கையா ளிருந்த பங்க யமது வுண்டு வண்டிசை வங்கையா லதிர்க்கும் |
2.050. 7 |
தாமரை மலரிலுள்ள தேனை உண்டு வண்டுகள் இசைபாடப் பெரிய மயில்கள் நடனம் ஆட, விண் மேகங்களாகிய முழவை அழகிய கையால் ஒலிக்கும் இயற்கை அழகுடைய ஆமாத்தூர் அம்மானே! மங்கையாகிய ஒளிநுதலை உடைய மான்போன்ற பார்வதிதேவி வாடி ஊட மணம் கமழும் சடையில் கங்கையாளை வைத்துள்ளதன் காரணம் யாதோ?
2011 | நின்ற
டர்த்திடு மைம்பு லன்னிலை வென்றடர்த் தொருபான் குன்றெ டுத்தநி சாச ரன்திரள் அன்றடர்த் துகந்தார் |
2.050. 8 |
அன்று கயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் திரண்ட இருபதுதோள்களும் நெரியுமாறு அடர்த்துப் பின் அவன்பால் கருணை காட்டியவனே! ஆமாத்தூர் இறைவனே! மாறிநின்று மயக்கும் ஐம்புலன்களை மனத்தால் வென்று அவித்தும் ஒருபாகத்தே இளம்பெண்ணை விரும்பி ஏற்றுள்ளது யாது காரணத்தாலோ?
2012 | செய்ய
தாமரை மேலி ருந்தவ வெய்ய வாரழலாய் தைய லாளொடு பிச்சைக் கிச்சை டைய மேற்றுகந்தார் |
2.050. 9 |
உமையம்மையோடு பிச்சையேற்பதற்கு இச்சையுடையராய் விளங்கும், தோலாடையை இடையில் கட்டிய வேடம் மேற்கொண்டு மாதரார் இல்லங்களில் ஐயம் ஏற்று உகந்தவனே! ஆமாத்தூர் இறைவனே! செந்தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியையும் அடியையும்தேட அவர்கட்கு ஒளிக்கும் வகையில் கொடிய அழலுருவாய் நிமிர்ந்த வெற்றிக்குக் காரணம் யாதோ?
2013 | புத்தர்
புன்சம ணாதர் பொய்ம்மொழி பத்தர் பேணநின்ற முத்தை வென்ற முறுவ லாளுமை அத்தனே யரியார் |
2.050. 10 |
முத்தைவென்ற முறுவலை உடைய உமையம்மை பங்கனே! என்று தேவர்கள் பரவிப் போற்றும் தலைவனே! காண்டற்கு அரியவனே! ஆமாத்தூர் இறைவனே! புத்தர்களும் புல்லிய சமணர்களாகிய அறிவிலிகளும் பொய்ம் மொழியும் நூல்களைப் பிடித்துக் கொண்டு பழிக்கவும், அவற்றைப் பொருட்படுத்தாது பத்தர்களால் விரும்பப்படும் மேலாந்தன்மை உடையன் அதற்குக் காரணம் யாதோ?
2014 | வாடல்
வெண்டலை மாலை யார்த்தும ஆடன் மேயதென்னென் கோட னாக மரும்பு பைம்பொழிற் பாடல் பத்தும்வல்லார் |
2.050. 11 |
தசைவாடிய வெண்டலை மாலையைக் கட்டிக் கொண்டு நள்ளிருளில் எரிஏந்தி ஆடுவதன் காரணம் யாதோ என்று ஆமாத்தூர் இறைவனைக் காந்தள் நாகம் போல அலரும் பசிய பொழில் சூழ்ந்த கொச்சை வயத்தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மேலான வீட்டுலகம் அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.050.திருஆமாத்தூர் , ஆமாத்தூர், ரம்மானே, ஆமாத்தூ, காரணம், யாதோ, இறைவனே, நீண்ட, கொண்டு, உடைய, கொன்றை, அன்று, தாமரை, திருஆமாத்தூர், திருமுறை, அழகிய, வந்து, அம்மானே, போற்றும், மாமலர், மான்போன்ற, வேடம், தூவி, தென்னைகொலாம், விளங்கும், பங்க, வெண்டலை, கொச்சை, வாடி, ஐயம், வண்டுகள், இரண்டாம், கேட்க, மங்கை, நீர், உண்டு, பதிகங்கள், ஆகியவற்றை, விண்ணவனே, வேதியனே, திருச்சிற்றம்பலம், தேவாரப், மாண்ட, அன்றில், நடனம், திருமால், உமையம்மை, மாலை, தலைவனே, சூழ்ந்த