முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.045.திருப்பழையனூர் - திரு ஆலங்காடு
1.045.திருப்பழையனூர் - திரு ஆலங்காடு
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர்.
தேவியார் - வண்டார்குழலியம்மை.
481 |
துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.1 |
உறங்கும்போது கனவிடை வருபவரும், தம்மைத் தொழுமாறு செய்பவரும், முனைப்புக் காலத்து மறைந்து, அன்பு செய்யும் காலத்து என் நெஞ்சம் புகுந்து நின்று, நினையுமாறு செய்பவரும் ஆகிய இறைவர், முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித் தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார்.
482 |
கேடும்பிறவியு மாக்கினாருங் வீடுமாநெறி விளம்பினாரெம் காடுஞ்சுடலையுங் கைக்கொண்டெல்லிக் டாடும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.2 |
பிறப்பு இறப்புக்களை உயிர்கட்குத் தந்தருளியவரும், அழிவற்ற வீட்டு நெறியை அடைதற்குரிய நெறிகளை உயிர்கட்கு விளம்பியவரும் ஆகிய நம்மின் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், இடுபாடு சுடலை ஆகியவற்றை இடமாகக் கொண்டு இராப்போதில் பேய்க்கணங்களோடு நடனமாடும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
483 |
கந்தங்கமழ்கொன்றைக்
கண்ணிசூடிக் வெந்தபொடிநீற்றை விளங்கப்பூசும் கொந்தண்பொழிற்சோலை யரவிற்றோன்றிக் தந்தண்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.3 |
மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடிக் கனலிடை நின்று ஆடி சுடுகாட்டில் வெந்த சாம்பலை உடல் முழுதும் விளங்கப் பூசும் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் பாம்பின் படம் போலக் காந்தள் மலர் மலரும் அழகிய குளிர்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
484 |
பாலமதிசென்னி படரச்சூடி காலனுயிர்செற்ற காலனாய கோலம்பொழிற்சோலைப் பெடையோடாடி ஆலும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.4 |
இளம்பிறையை முடிமீது பொருந்தச் சூடி, தனக்கு வரும் பழியை நினையாத காலனது உயிரைச் செற்ற காலகாலராய இறைவர் அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் இள மயில்கள்பெண் மயில்களோடு கூடிக் களித்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
485 |
ஈர்க்கும்புனல்சூடி
யிளவெண்திங்கள் பார்க்குமரவம்பூண் டாடிவேடம் கார்க்கொள்கொடிமுல்லை குருந்தமேறிக் தார்க்கும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.5 |
ஈர்த்துச் செல்லுதலில் வலிய கங்கை நீரை முடிமிசைத் தாங்கி, இளம்பிறையை விழுங்க அதனது வளர்ச்சி பார்த்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு, நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில் தோன்றி அருள்புரிபவர், கார்காலத்தே மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரங்களில் ஏறிப் படர அம்மலர்களில் உள்ள தேனை உண்ணவரும் கரிய வண்டுகள் மலரை மொய்த்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
486 |
பறையுஞ்சிறுகுழலும் யாழும்பூதம் மறையும்பலபாடி மயானத்துறையும் பிறையும்பெரும்புனல்சேர் சடையினாரும் டறையும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.6 |
பறை, சிறுகுழல், யாழ் முதலிய கருவிகளைப் பூதங்கள் ஒலிக்க வேதங்களைப் பாடிக் கொண்டு மயானத்தில் உறையும் மைந்தராய், பிறை, பெருகி வரும் கங்கை ஆகியவற்றை அணிந்த சடை முடியினர் ஆகிய சிவபெருமான் பெடைகளோடு கூடிய ஆண் வண்டுகள் ஒலிக்கும்சோலைகள் சூழ்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
487 |
நுணங்குமறைபாடி யாடிவேடம் இணங்குமலைமகளோ டிருகூறொன்றா வணங்குஞ்சிறுத்தொண்டர் வைகலேத்தும் டணங்கும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.7 |
நுட்பமான ஒலிக் கூறுகளை உடைய வேதங்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல்வேறு திருவுருவங்களைக் கொள்பவரும், தம்மோடு இணைந்த பார்வதி தேவியுடன் இருவேறு உருவுடைய ஓருருவாக இசைந்தவரும், ஆகிய பெருமானார் தம்மை வணங்கும் அடக்கமுடைய தொண்டர்கள் நாள்தோறும் பாடும் வாழ்த்துக்களைக் கேட்டு தெய்வத் தன்மை மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
488 |
கணையும்வரிசிலையு மெரியுங்கூடிக் இணையிலெயின்மூன்று மெரித்திட்டாரெம் பிணையுஞ்சிறுமறியுங் கலையுமெல்லாங் தணையும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.8 |
அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர், பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
489 |
கவிழமலைதரளக் கடகக்கையா பவழநுனைவிரலாற் பையவூன்றிப் தவழுங்கொடிமுல்லை புறவஞ்சேர தவிழும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.9 |
கயிலை மலை நிலை குலையுமாறு முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால் எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம் போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபிரானார். முல்லைக்கொடிகள் முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து படர நறவக் கொடிகள் மலர்களைப் பூத்து விரிந்து நிற்கும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
490 |
பகலுமிரவுஞ்சேர் பண்பினாரும் திகலுமிருவர்க்கு மெரியாய்த்தோன்றி புகலும்வழிபாடு வல்லார்க்கென்றுந் அகலும்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.10 |
பகல் இரவு போன்ற வெண்மை கருமை நிறங்களைக் கொண்ட நான்முகனும் திருமாலும் தங்களிடையே உள்ள உறவு முறையையும் கருதாது யார் தலைவர் என்பதில் மாறுபட்டு நிற்க அவ்விருவர்க்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவரும் ஆகம நூல்கள் புகலும் வழிபாடுகளில் தலை நிற்கும் அடியவர்க்குத் தீயன போக்கி அருள்புரிபவரும் ஆகிய பெருமான் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
491 |
போழம்பலபேசிப் போதுசாற்றித் வேழம்வருமளவும் வெயிலேதுற்றித் கேழல்வினைபோகக் கேட்பிப்பாருங் ஆழ்வர்பழையனூ ராலங்காட்டெம் |
1.045.11 |
மாறுபட்ட சொற்களைப் பேசியும், காலத்துக்கு ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச் சொல்லியும் திரியும் புறச்சமயத்தவரும், நன்மையல்லாதவற்றை உபதேசங்களாகக் கூறுபவரும், யானைத் தீ வரும் அளவும் வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச் சாராது தம்மைச் சார்ந்த அடியவர்களைப் பற்றிய வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச் செய்பவராகிய அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
492 |
சாந்தங்கமழ்மறுகிற் சண்பைஞான ஆந்தண்பழையனூ ராலங்காட்டெம் வேந்தனருளாலே விரித்தபாட சேர்ந்தவிடமெல்லாந் தீர்த்தமாகச் |
1.045.12 |
சந்தனம் கமழும் திருவீதிகளை உடைய சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் அழகிய தண்ணிய ஆலங்காட்டு வேந்தனாக விளங்கும் அவ்விறைவன் திருவருளாலே போற்றி விரித்தோதிய இத்திருப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் சேர்ந்த இடங்களெல்லாம் புனிதமானவைகளாகப் பொருந்தப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.045.திருப்பழையனூர் - திரு ஆலங்காடு , ராலங்காட்டெம், அடிகளே, அடிகள், ஆவார், பழையனூரைச், திருவாலங்காட்டு, ஆலங்காட்டு, ஆகிய, திருமுறை, இறைவர், திருப்பழையனூர், ஆலங்காடு, வரும், திரு, அழகிய, பல்வேறு, பயின்றாரும், தோன்றி, கூடிக், ஆரவாரிக்கும், கங்கை, வேதங்களைப், ஆகியன, கொண்டும், நிற்கும், திரிவாரும், திரியும், உடைய, அணிந்த, உள்ள, வண்டுகள், இளம்பிறையை, பாடிக், கொடிகள், மலர், நின்று, உறையும், கேடிலா, விகிர்தனார், காலத்து, செய்பவரும், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், அழிவற்ற, வேறுபட்ட, கமழும், பொழில்களிலும், சோலைகளிலும், நூல்கள், கொண்டு, இயல்பினராகிய, சிவபிரான், ஆகியவற்றை, மலரும்