சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 49
2 எல்லாருடைய வாயிலும் தேனைப் போலவும், மது பருகும் விருந்தில் இன்னிசை போலவும் அவருடைய ஞாபகம் இனிப்பாய் இருக்கின்றது.
3 மக்கள் தவம் செய்யும்படி அவர் தெய்வச் செயலால் நியமிக்கப்பட்டார்@ அக்கிரமத்தின் அநியாயங்களை நீக்கினார்.
4 ஆண்டவர் பக்கம் தம் இதயத்தைச் செலுத்தினார்@ பாவிகளுடைய நாட்களில் பக்தியை உறுதிப்படுத்தினார்.
5 தாவீது, எசெக்கியாஸ், யோசியாஸ் இவர்களைத் தவிர மற்ற எல்லாரும் பாவத்தைக் கட்டிக்கொண்டார்கள்.
6 ஏனென்றால், யூதாவின் அரசர்கள் உன்னத கடவுளுடைய கட்டளையை மீறி நடந்தார்கள்.
7 ஏனென்றால், தங்கள் நாட்டை மற்றவர்களுக்கும், தங்கள் மகிமையைப் புறவினத்தாருக்கும் கொடுத்து விட்டார்கள்.
8 பரிசுத்தரின் தேர்ந்து கொள்ளப்பட்ட நகரத்தைச் சுட்டெரித்தார்கள்@ எரெமியாஸ் சொல்லியபடி, அதன் வீதிகளைப் பாலைவனமாக்கினார்கள்.
9 தாய் வயிற்றிலேயே இறைவாக்கினராக அர்ச்சிக்கப்பட்டு, இடிக்கவும் எடுக்கவும் அழிக்கவும் திரும்பக் கட்டவும், புதுப்பிக்கவும் நியமிக்கப்பட்ட அவரைக் கொடுமையாய் நடத்தினார்கள்.
10 எசெக்கியேல் பத்திசுவாலகரின் இரதத்தில் தமக்குக் காண்பிக்கப்பட்ட மகிமையின் காட்சியைக் கண்டார்.
11 ஏனென்றால், மழையில் பகைவர்களை நினைவு கூர்ந்து கொண்டார்@ செம்மையான வழி காட்டினவர்களுக்கு உதவி செய்தார்.
12 பன்னிரு இறைவாக்கினர்களுடைய எலும்புகளும் தங்கள் கல்லறையில் வளர்ந்து வரும். ஏனென்றால், அவர்கள் யாக்கோபைத் திடப்படுத்தினார்கள்@ உறுதியான விசுவாசத்தால் தங்களையே காத்துக் கொண்டார்கள்.
13 ஜெரோபாபேலை எப்படிப் புகழ்ந்து கொண்டாடுவோம்? ஏனென்றால், வலக்கையில் மோதிரத்தைப் போல் அவர் இருக்கிறார்.
14 இவ்வாறே, யோசதெக் புதல்வர் யேசுவும் அல்லரோ? அவர்கள் தங்கள் நாட்களில் ஆலயத்தைக் கட்டினார்கள். ஆண்டவருடைய நித்திய மகிமைக்குப் புகழ்ச்சியாக அவருக்குப் புனித ஆலயத்தை எழுப்பினார்கள்.
15 நெகேமியாசும் வெகு காலங்களுக்கு நினைவில் இருப்பார். ஏனென்றால், அவர் வீழ்த்தப்பட்ட சுவர்களை நமக்கு எழுப்பித் தந்தார். கதவுகளையும் பூட்டுகளையும் போட்டார்@ நம் வீடுகளைக் கட்டினார்.
16 ஏனோக் என்பவரைப் போலப் பிறந்தவன் மண்ணுலகில் எவனும் இல்லை. ஏனென்றால், அவர் மண்ணுலகினின்று எடுத்துக்கொள்ளப்பட்டார்.
17 மனிதனாய்ப் பிறந்து, சகோதரருடைய தலைவராகவும், மக்களுடைய ஆதரவாகவும், சகோதரரை நடத்துபவராகவும், மக்களுடைய உறுதித் துணையாகவும் இருந்த சூசையைப் போலப் பிறந்தவன் ஒருவனும் உலகில் இல்லை.
18 அவருடைய எலும்புகள் காப்பாற்றப்பட்டன@ சாவுக்குப் பின்னும் இறைவாக்குகளை உரைத்தன.
19 சேத்தும் சேமும் மனிதரிடத்தில் மகிமை அடைந்தார்கள். தொடக்கத்தில் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக ஆதாம் இருந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனென்றால், ஏற்பாடு, பழைய, அவர், தங்கள், சீராக், ஆகமம், இல்லை, மக்களுடைய, நாட்களில், பிறந்தவன், போலப், போலவும், புனித, திருவிவிலியம், ஆன்மிகம், நினைவு, இருக்கின்றது, அவருடைய