சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 பிள்ளைகளே, உங்கள் தந்தையின் அறிவுரைகளைக் கேட்டு, நீங்கள் மீட்பு அடையும் பொருட்டு அவைகளின்படி நடந்து வாருங்கள்.
3 ஏனென்றால் ஆண்டவர், பிள்ளைகள் தந்தையை மதிக்க வேண்டும் என்றும், தாயின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் நியமித்திருக்கிறார்.
4 கடவுளை நேசிக்கிறவன் தன் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதல்லாமலும் அவைகளை விலக்குவான்@ ஆதலால் அவன் மன்றாட்டும் கேட்கப்படும்.
5 தன் தாயை மதிக்கிறவன் செல்வங்களைச் சேர்த்தவன் (போல வாழ்வான்).
6 தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும்.
7 தன் தந்தையை மதிக்கிறவன் நெடுங்காலம் வாழ்வான். தன் தந்தைக்குக் கீழ்ப்படிகிறவன் தாய்க்கு உதவுவான்.
8 தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்@ தன்னைப் பெற்றவர்களுக்குத் தலைவர்களுக்குச் செய்வது போல் ஊழியம் செய்வான்.
9 செயலிலும் சொல்லிலும் பொறுமையிலும் உன் தந்தைக்கு மரியாதை செய்.
10 அதனால் உனக்கு அவனுடைய ஆசி கிடைக்கும். அவன் ஆசியும் உன் வாழ்நாள் வரை உன்னோடு இருக்கும்.
11 தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும். தாயின் சாபமோ பிள்ளைகளுடைய குடும்பங்களின் அடித்தளத்தைப் பிடுங்கி விடும்.
12 உன் தந்தைக்கு உண்டாகும் நிந்தைகளால் நீ பெருமை கொள்ளாதே. ஏனென்றால், அவன் துன்பம் உனக்குப் பெருமையன்று. ஏனென்றால், தந்தைக்கு உண்டாகும் மாட்சிமை பிள்ளையினுடைய மகிமை@
13 தந்தைக்கு உண்டாகும் நிந்தையோ பிள்ளைக்கு அவமானம்.
14 மகனே, உன் தந்தையின் முதுமையில் அவனை ஆதரி. அவன் வாழ்நாளில் அவனை மனம் நோகச் செய்யாதே.
15 அவன் அறிவு குறைந்ததாயின் மன்னித்துக் கொள். உன் விவேகத்தை முன்னிட்டு அவனை நிந்தியாதே. ஏனென்றால், தந்தைக்குக் காண்பிக்கப்படும் இரக்கம் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.
16 உன் தாயின் குற்றத்தைச் சகிப்பதனால் உனக்கு நன்மை ஏற்படும்.
17 ஏனென்றால், நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்@ உன் துன்ப நாட்களில் ஆதரிக்கப்படுவாய்@ கதிரவன் முன் பனி கரைந்து போவது போல உன் பாவங்களும் கரைந்து போகும்.
18 தன் தந்தையைப் புறக்கணிப்பவன் எவ்வளவோ நிந்தைக்குரியவன். தன் தாயை மனம் நோகச் செய்கிறவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.
19 மகனே, உன் செயல்களைச் சாந்த குணத்தோடு செய்வாயாகில் மனிதரால் அதிக மேன்மையாய் நேசிக்கப்படுவாய்.
20 எவ்வளவுக்கு நீ பெரியவனாய் இருக்கிறாயோ அவ்வளவுக்கு அனைத்திலும் உன்னைத் தாழ்த்து. அப்போது கடவுள் முன் இரக்கத்தைக் காண்பாய்.
21 ஏனென்றால், கடவுள் ஒருவரே மிக வல்லமையுள்ளவர். அவர் தாழ்ச்சியுள்ளவர்களால் மாட்சிப்படுத்தப் படுகிறார்.
22 உன் நிலைக்கு மேலான காரியங்களை நீ தேடாதே. உன் ஆற்றலுக்கு அதிகமானவைகளை நீ கண்டறிய நாடாதே. ஆனால், கடவுள் உனக்குக் கற்பித்திருப்பதை எப்போதும் நினைத்துக் கொள். அவர் செயல்களில் பலவற்றைச் சோதிக்காதே.
23 ஏனென்றால், மறைவான காரியங்களை உன் கண்களால் காணத் தேவையில்லை.
24 தேவையற்ற காரியங்களைப் பற்றி வீணாய் யோசனை செய்யாதே. அவர் படைப்புகளில் பலவற்றை ஆராய ஆசை கொள்ளாதே.
25 ஏனென்றால், மனித அறிவுக்கு எட்டாத காரியங்கள் பல உனக்குக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
26 அவைகளின் ஆராய்ச்சி பலரை மயக்கி அவர்கள் புத்தியைக் கெடுத்தது.
27 கடுமையான நெஞ்சம் இறுதிக் காலத்தில் கெடுதிக்கு உள்ளாக்கும். ஆபத்தை நேசிக்கிறவன் அதிலேயே அழிவான்.
28 இரு நெறிகளில் செல்லும் மனம் வெற்றி அடையாது. தீநெறியாளனுக்கு அவைகளினால் ஆபத்து உண்டாகும்.
29 அக்கிரம மனமுள்ளவன் வருந்துவான். அவன் பாவத்தின் மேல் பாவம் கட்டிக் கொள்வான்.
30 அகந்தையுள்ளவர்களுடைய கூட்டத்திற்குத் திருத்தம் உண்டாகாது. ஏனென்றால், பாவம் ஒரு செடி போல அவர்கள் அறியாமலே அவர்களிடம் வேரூன்றும்.
31 ஞானியின் நடத்தை அவன் ஞானத்தால் அறியப்படும். நற்குணமுள்ளவனின் செவி ஞானம் உணர்த்துவதை வெகு ஆவலோடு கேட்கும்.
32 ஞானமும் அறிவுமுள்ள மனதுடையவன் பாவங்களினின்று தன்னைக் காப்பான்@ நீதியின் செயல்களால் வெற்றி அடைவான்.
33 எரிகிற நெருப்பைத் தண்ணீர் அவிக்கின்றது.
34 தருமம் பாவத்தைத் தவிர்க்கும். சம்பாவனை அளிக்கும் கடவுள் அதைக் கண்ணோக்குகிறார்@ வருங்காலத்தில் அதை நினைத்துக் கொள்கிறார். அவன் ஆபத்தில் விழும் நேரத்தில் அதைத் தனக்கு ஓர் ஆதரவாகக் காண்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனென்றால், அவன், ஏற்பாடு, கடவுள், தந்தைக்கு, பழைய, உண்டாகும், அவர், மனம், சீராக், அவனை, மதிக்கிறவன், தாயின், தந்தையின், தந்தையை, ஆகமம், செய்யாதே, பாவம், நோகச், வெற்றி, நினைத்துக், உனக்குக், கரைந்து, முன், காரியங்களை, கொள், அடைவான், வேண்டும், என்றும், பிள்ளைகள், ஆன்மிகம், திருவிவிலியம், நேசிக்கிறவன், கேட்கப்படும், உனக்கு, கொள்ளாதே, தந்தைக்குக், வாழ்வான், தாயை, மகனே