சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 25
2 சகோதர ஒற்றுமை, பிறரன்பு, ஒருவரோடொருவர் ஒத்து வாழும் கணவன் மனைவியர்.
3 மூன்று வித மனிதரை என் ஆன்மா பகைத்தது@ அவர்களுடைய ஆன்மாவைப் பற்றி எனக்கு மிகவும் வெறுப்பு உண்டு.
4 அவர்கள் யாரென்றால்: செருக்குடைய வறியவன், பொய்காரச் செல்வன், பேதையும் மதியற்றவனுமான முதியவன்.
5 உன் இளவயதில் நீ சேகரியாததை எவ்விதம் உன் முதுமையில் காணப்போகிறாய்?
6 நரைத்தோருடைய தீர்மானம் எத்துணைச் சிறந்தது! பெரியோரின் அறிவுரையை அறிவதும் எத்துணைச் சிறந்தது!
7 வயதில் முதிர்ந்தோருக்கு ஞானமும், தலைமை வாய்ந்தோருக்கு அறிவும் அறிவுரையும் எவ்வளவோ அழகுள்ளவை!
8 தேர்ந்த பட்டறிவு முதியவர்களுடைய முடி@ தெய்வ பயமோ அவர்களுடைய மாட்சி.
9 என் அறிவால் நன்மையான காரியங்களாக மதிக்கப்பட்டவை ஒன்பது@ பத்தாவதைப் பற்றியோ மனிதருக்கு என் நாவினால் சொல்லுவேன்.
10 தன் மக்களால் மகிழ்ச்சியடையும் மனிதன் பேறுபெற்றவன்@ தன் பகைவருடைய அழிவைக் காண்பவன் பேறுபெற்றவன்@
11 அறிவுள்ள பெண்ணோடு வாழ்பவன், தன் நாவினால் தவறாதவன், தகாதவர்களைத் தன் உதவியாகக் கொள்ளாதவன்- இவர்கள் பேறுபெற்றோர்@
12 உண்மையான நண்பனைக் கண்டுகொண்டவன், செவி கொடுத்தவனுக்கு நீதியைப் போதிப்பவன்- இவர்கள் பேறுபெற்றோர்.
13 ஆயினும், ஞானத்தையும் அறிவையும் கண்டவன் எவ்வளவோ மேலானவன் எனினும், தெய்வ பயமுள்ளவனை விட அவன் மேலானவன் அல்லன்.
14 தெய்வ பயம் மற்ற யாவற்றையும் விட மேலானது.
15 தெய்வ பயம் உடைய மனிதன் பேறு பெற்றவன்@ அதனை உடையவன் எவனுக்கு ஒப்பிடப்படுவான்?
16 தெய்வ பயமோ அவருடைய அன்பின் தொடக்கம். ஆனால், விசுவாசத்தின் தொடக்கமும் அதனுடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
17 எல்லா வருத்தமும் இதயத்தைத் துன்புறுத்தும். பெண்ணின் கெட்ட குணமோ கொடிய கெடுதியை உண்டாக்கும். எல்லாக் கெடுதியும் பெண்ணின் கெட்ட குணத்தாலேயாம்.
18 எந்த வருத்தமும் இதய வருத்தத்திற்கு நிகராகாது.
19 எந்தக் கெட்ட குணமும் பெண்ணின் கெட்ட குணத்திற்கு ஒப்பாகாது.
20 எவ்விதத் துன்பமும் நம் பகைவரால் நமக்கு உண்டாகும் துன்பத்திற்குச் சமமாகாது.
21 எந்தப் பழியும் நம் பகைவர் வாங்கும் பழிக்கும் நிகராகாது.
22 நாகப் பாம்பின் தலையை விடக் கெடுதியான தலை ஒன்றுமில்லை என்பது போல,
23 பெண்ணின் கோபத்தை மிஞ்சிய கோபம் இல்லை. கெட்ட குணமுள்ள பெண்ணுடன் வாழ்வதை விடச் சிங்கத்துடனும் பூத நாகத்துடனும் வாழலாம்.
24 பெண்ணின் கெட்ட குணம் அவள் முகத்தை வேறுபடுத்துகிறது@ கரடியைப் போல் அவள் பார்வையை மறைக்கின்றது@ காக்கை போலக் கருநிறமாய்க் காண்பிக்கின்றது.
25 அவள் கணவன் அயலாரிடம் முறையிடுகிறான்@ அவர்கள் சொல்வதைக் கேட்டு அதிகமாய் வருத்தப்படுகிறான்.
26 பெண்ணின் கெட்ட குணத்திற்கு முன்பாக எல்லாக் கெட்ட குணங்களும் இலகுவானவை. பாவிகளுடைய கதி அவள் மேல் விழும்.
27 மணல் மேட்டில் நடக்க முதியவனுடைய கால்களுக்கு எப்படியோ, அப்படியே அமைதியுள்ள கணவனுக்கு வாயாடிப் பெண்ணுடன் வாழ்வது கடினமாய் இருக்கும்.
28 பெண்ணின் அழகைப் பாராதே@ அழகின் பொருட்டுப் பெண்ணை விரும்பாதே.
29 பெண்ணின் கோபம், அவமரியாதை, அதனால் உண்டாகும் வெட்கக்கேடு- இவை பெரியவை.
30 பெண்ணுக்கு அதிகாரமிருந்தால் தன் கணவனுக்கு விரோதியாவாள்.
31 கெட்ட பெண் மன வருத்தத்திற்கும், கவலை தோய்ந்த முகத்திற்கும், இதயக் கொடுந் துன்பத்திற்கும் காரணமாய் இருக்கிறாள்.
32 தன் கணவனை மகிழ்விக்காத பெண் சோர்ந்த கைகளைப் போலவும், வலுவற்ற முழங்கால்களைப் போலவும் இருக்கிறாள்.
33 பெண்ணால் பாவம் பிறந்தது. அவளால் நாம் எல்லோரும் சாகிறோம்.
34 தண்ணீருக்குத் துவாரம் எவ்வளவு சொற்பமாயிருந்தாலும், விட்டு வைக்காதே. அது போலவே, கெட்ட குணமுள்ள பெண்ணுக்குச் சிறிதேனும் அதிகாரம் கொடாதே.
35 அவள் உன் கைக்கு அடங்காவிட்டால், உன் பகைவர் முன்பாக உன்னை வெட்கத்திற்கு உள்ளாக்குவாள்.
36 அவளால் உனக்கு ஒருபோதும் தீங்கு நேராதபடி உன் வசத்தினின்று அவளைத் தறித்துவிடு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, கெட்ட, பெண்ணின், தெய்வ, அவள், ஏற்பாடு, பழைய, சீராக், ஆகமம், முன்பாக, குணத்திற்கு, உண்டாகும், எல்லாக், பகைவர், நிகராகாது, பெண்ணுடன், இருக்கிறாள், போலவும், அவளால், பெண், கணவனுக்கு, குணமுள்ள, வருத்தமும், கோபம், பேறுபெற்றவன்@, உண்டு, கணவன், அவர்களுடைய, மூன்று, அதிகாரம், திருவிவிலியம், ஆன்மிகம், எத்துணைச், சிறந்தது, இவர்கள், மேலானவன், மனிதன், நாவினால், எவ்வளவோ, பயமோ, பயம்