சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 24
2 உன்னத ஆண்டவரை வாழ்த்தும் சபைகளில் தன் வாய் திறக்கும்@ அவருடைய வல்லமையின் முன்பாக மேன்மைப்படுத்தப்படும்.
3 மக்கள் நடுவில் மகிமைப்படுத்தப்படும்@ அதன் புனித மேன்மையைக் கண்டுபிடிக்கிறவர்கள் வியப்படைவார்கள்.
4 தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுடைய கூட்டத்தில் அது புகழ்ச்சிபெறும். பேறு பெற்றவர் நடுவில் ஆசி பெற்று அதுவே சொல்வதாவது:
5 உன்னத கடவுள் வாயினின்று நான் புறப்பட்டேன். நானே படைப்புகளுக்கெல்லாம் முன்பே படைக்கப்பட்டேன்.
6 வானங்களில் மங்காத ஒளி உதிக்கும்படி செய்தது நானே. மண்ணுலகம் முழுவதையும் மேகத்தைப் போல மூடினதும் நானே.
7 நான் வான மண்டலங்களில் தங்கியிருந்தேன். என் அரியணை மேகத் தூணின் மேல் நிறுவப்பட்டிருக்கின்றது.
8 நான் வான மண்டலங்களைத் தனியே சுற்றி வந்தேன்@ பாதாளத்தின் ஆழத்தை ஊடுருவினேன்@ கடலின் அலைகள் மேல் உலாவினேன்.
9 மண்ணுலகம் முழுவதும் நான் நின்றேன்@ எல்லா மக்களிடத்திலும்,
10 எல்லா இனத்தாரிடத்திலும் மேன்மையடைந்தேன்.
11 பெரியோர், சிறியோர் அனைவரின் இதயங்களையும் என் பலத்தால் கீழ்ப்படுத்தினேன்@ அவர்களிடத்தில் இளைப்பாற்றியைத் தேடினேன்@ ஆண்டவருடைய உரிமையில் தங்கியிருப்பேன்.
12 அப்போது எல்லாம் படைப்பவர் எனக்குத் தம் கட்டளைகளைத் திருவுளம்பற்றினார்@ என்னைப் படைத்தவர் என் கூடாரத்தில் இளைப்பாறினார்.
13 அவர் என்னை நோக்கி: யாக்கோபிடம் வாழ்ந்திரு@ இஸ்ராயேலைச் சொந்தமாக்கிக்கொள்@ தேர்ந்து கொள்ளப்பட்ட என்னுடையவர்களிடம் வேரூன்று என்றார்.
14 தொடக்கத்திலும் உலகத்திற்கு முன்னும் நான் படைக்கப்பட்டேன்@ எக்காலமும் இருப்பேன்@ புனித உறைவிடத்தில் அவர்முன் பணி செய்தேன்.
15 ஆதலால், சீயோனில் உறுதிப்படுத்தப்பட்டேன்@ புனித நகரிலும் இளைப்பாறினேன்@ யெருசலேமில் என் அதிகாரம் சென்றது.
16 மாட்சிப்படுத்தப்பட்ட குடிகளிடத்தில் நான் வேரூன்றினேன். என் கடவுளின் உரிமை என் உடைமை. புனிதருடைய கூட்டத்தில் என் உறைவிடம்.
17 லிபானில் கேதுரு என்னும் மரத்தைப்போல நான் உயர்த்தப்பட்டேன்@ சீயோன் மலையில் சிப்பிரேஸ் என்னும் மரத்தைப் போல் ஆனேன்.
18 காதேஸ் பனைமரத்தைப்போல் உயர்த்தப்பட்டேன். யெரிக்கோ ரோசாத் தோட்டம் போல் ஆனேன்.
19 சமவெளியிலுள்ள அழகான ஒலிவமரம் போலவும், மைதானங்களில் தண்ணீரருகேயுள்ள பிளாத்தான் மரத்தைப் போலவும் உயர்த்தப்பட்டேன்.
20 நறுமணம் கமழும் இலவங்கப்பட்டை போலும், பரிமளத் தைலம் போலும் வாசனை வீசினேன்@ விலையுயர்ந்த வெள்ளைப் போளம் போல வாசனையின் இன்பத்தைத் தந்தேன்.
21 நறுமணப் பன்னீர் போலும், பரிமளப் பிசின் போலும், கோமேதகம் போலும், வெள்ளைப் போளம் போலும், சாம்பிராணித் துளி போலும், காயப்படாத லிபானைப் போலும் என் உறைவிடத்தைக் கமழச் செய்தேன். என் நறுமணம் கலப்பில்லாத பரிமளத் தைலம் போன்றது.
22 தைலம் தரும் தெரேபிந்து மரம் போல என் கிளைகளை விரித்தேன். என் கிளைகள் மகிமையும் நன்மையும் பொருந்தியவை.
23 கொடிமுந்திரிச் செடி போல வாசனையின் இன்பத்தை வீசச் செய்தேன். என்னுடைய மலர்களோ பெருமையினுடையவும் நன்மதிப்பினுடையவும் கனிகள்.
24 நான் அரிய அன்பினுடையவும் அச்சத்தினுடையவும் அறிவினுடையவும் புனித தெய்வ நம்பிக்கையினுடையவும் தாயாய் இருக்கிறேன்.
25 நன்னெறியினுடையவும் உண்மையினுடையவும் அழகெல்லாம் என்னிடம் உண்டு. வாழ்வினுடையவும் புண்ணியத்தினுடையவும் முழு நம்பிக்கை என்னிடமே உள்ளது.
26 என்னை நாடுகிறவர்கள் எல்லாரும் என்னிடம் வந்து சேருங்கள்@ என் கனிகளால் நிரப்பப்படுங்கள்.
27 என் அறிவு தேனை விட இனிப்பாய் இருக்கின்றது. என் உரிமை தேனையும் அதன் இனிய சுவையையும் விட மேலானதாய் இருக்கின்றது.
28 எக்காலத்துக்கும் என் நினைவு நிலைத்திருக்கும்.
29 என்னை உண்பவர்கள் இன்னமும் ஆவல் கொள்வார்கள். என்னை அருந்துகிறவர்கள் இன்னமும் தாகமாய் இருப்பார்கள்.
30 என்னைக் கேட்கிறவன் மோசம் போகமாட்டான். என்னைக் கொண்டு தங்கள் செயல்களைச் செய்கிறவர்கள் பாவம் செய்யமாட்டார்கள்.
31 என்னை மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்கள் நித்திய வாழ்வை அடைவார்கள்.
32 இவையெல்லாம் வாழ்க்கையின் நூல்@ உன்னத கடவுளின் உடன்படிக்கை@ உண்மையின் அறிவிப்பு.
33 மோயீசன் நீதிக் கட்டளைகளின் சட்டத்தையும், யாக்கோபு கோத்திரத்துக்கு உரிமையையும், இஸ்ராயேலர்க்கு வாக்குறுதிகளையும் கொடுத்தார்.
34 கடவுள் தம் ஊழியரான தாவீதுக்கு அவர் குடும்பத்தினின்று பேராற்றல் மிகுந்த அரசரை எழுப்பி, மகிமையின் அரியணையில் நிந்தியத்திற்கும் வீற்றிருக்கச் செய்வதாக வாக்குறுதி செய்தார்.
35 பீசோன் நதியைப் போலும், பலன் காலத்தில் திகிரிஸ் நதியைப் போலும், ஞானத்தை நிரப்புகிறார்.
36 அது அறுவடைக் காலத்தில் யோர்தான் நதியைப் போலப் பெருகும். அவர் எப்பிராத்தெஸ் நதியைப் போல் அறிவை நிரப்புகிறார்.
37 கொடிமுந்திரி விளைச்சல் காலத்தில் ஜெயோன் நதியைப் போல் ஒளியாகிய ஞானத்தை அனுப்பி உதவுகிறார்.
38 அதை முழுமையாக முதன் முதல் அறிந்தவர் அவர்தாம். அவரினும் சிறியோர் அதைக் கண்டுபிடியார்.
39 அதனுடைய எண்ணம் கடல்போலப் பரந்ததாய் இருக்கின்றது. அதனுடைய அறிவுரை ஆழ்ந்த பாதாளத்தைப் போல் இருக்கின்றது.
40 ஞானமாகிய நான் நதிகளை ஓடச்செய்தேன்.
41 நான் நதியினின்று ஓடும் தண்ணீர் நிறைந்த வாய்க்கால் போலும், நதியின் ஓடை போலும், தண்ணீர் கொண்டு போகப்படும் சுரங்கம் போலும் விண்ணினின்று புறப்பட்டேன்.
42 செடிகளுள்ள என் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவேன்@ என் வயலின் பயிர்களைத் தண்ணீரால் நிரப்புவேன் என்று சொன்னேன்.
43 உடனே என் வாய்க்காலில் நீர் பெருகினது. என்னுடைய நதி கடலைப் போல் ஆனது.
44 ஏனென்றால், என் போதனையை உதய காலத்து வெளிச்சம் போல் ஒளிர்வித்தேன்@ அதை எப்போதைக்கும் விரிவாய்ப் போதிப்பேன்.
45 பூமியின் திக்கு திசைகளெல்லாம் ஊடுருவி, துயில்கிறவர்களைச் சோதிப்பேன்@ ஆண்டவரை நம்புகிறவர்களை ஒளிர்விப்பேன்.
46 இன்னும் இறைவாக்குப்போலப் போதகத்தைப் பொழிவேன்: ஞானத்தைத் தேடுகிறவர்களுக்கு அதை அளிப்பேன்@ அவர்கள் சந்ததி யாருக்கும் புனித உலகம் வரைக்கும் அதை அளித்து வரத் தவறேன்.
47 நான் எனக்கு மட்டுமல்ல, உண்மையைத் தேடும் அனைவருக்காகவும் உழைத்தேனென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, போலும், நான், போல், புனித, என்னை, ஏற்பாடு, நதியைப், பழைய, இருக்கின்றது, தைலம், செய்தேன், நானே, சீராக், அவர், தண்ணீர், உன்னத, நடுவில், ஆகமம், காலத்தில், அதனுடைய, பரிமளத், நறுமணம், வெள்ளைப், என்னுடைய, என்னைக், கொண்டு, ஞானத்தை, இன்னமும், போலவும், வாசனையின், என்னிடம், நிரப்புகிறார், போளம், கடவுளின், ஆண்டவரை, தேர்ந்து, கூட்டத்தில், மேன்மைப்படுத்தப்படும், மகிமைப்படுத்தப்படும்@, திருவிவிலியம், ஆன்மிகம், அதிகாரம், கடவுள், புறப்பட்டேன், என்னும், மரத்தைப், ஆனேன், உரிமை, சிறியோர், மண்ணுலகம், மேல், எல்லா, உயர்த்தப்பட்டேன்