சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 52
2 வானினின்று கடவுள் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாவது உண்டா எனப் பார்க்கின்றார்.
3 எல்லாரும் நெறி தவறிப் போயினர்@ ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை, ஒருவன் கூட இல்லை.
4 தீமை செய்கிறவர்கள் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் கடவுளின் பெயரைக் கூவி அழைப்பதில்லை@ இவர்கள் நல்லறிவு பெறமாட்டார்களா?
5 அச்சம் கொள்ளத் தேவையில்லாத இடத்தில் இவர்கள் அச்சத்தால் நடுநடுங்கினார்கள்@ ஏனெனில், என்னைத் தாக்கினவர்களின் எலும்புகளை இறைவன் நொறுக்கிவிட்டார்: அவர்கள் சிதறுண்டு போயினர்@ ஏனெனில் கடவுள் அவர்களை விரட்டிவிட்டார்.
6 சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதே! கடவுள் தம் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் போது யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, கடவுள், சங்கீதங்கள், இவர்கள், இல்லை, ஏனெனில், இஸ்ராயேல், மக்களுக்கு, நன்மை, திருவிவிலியம், ஆன்மிகம், பார்க்கின்றார், போயினர்@