சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 51
2 எந்நேரமும் தீமையானதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்: சதி செய்பவனே, உன் நா கூரிய கத்தி போன்றது.
3 நன்மை செய்வதை விடத் தீமை செய்யவே நீ விரும்புகிறாய்: நீதியானதைப் பேசுவதை விடப் பொய் பேசுவதையே விரும்புகிறாய்.
4 கபடமுள்ள நாவே, நீ தீமை விளைவிக்கும் பேச்சை எப்போதும் விரும்புகிறாய்.
5 ஆகவே கடவுள் உன்னைத் தொலைத்து விடுவார்@ என்றென்றும் உன்னை அகற்றிவிடுவார்: கூடாரத்தினின்று உன்னை வெளியேற்றுவார், வாழ்வோர் பூமியினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார்.
6 நீதிமான்கள் இதைப் பார்த்து அச்சமுறுவர்: அப்போது அவனைப் பார்த்து நகைத்திடுவர்.
7 இதோ கடவுளைத் தன் அடைக்கலமாகக் கொள்ளாத மனிதன்! தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை நம்பி வாழ்ந்தவன், செய்த அக்கிரமத்தைக் குறித்துப் பெருமை பாராட்டியவன்" என்று நகைப்பர்.
8 நானோ செழித்து வளரும் ஒலிவ மரத்தைப் போல் இறைவன் இல்லத்தில் விளங்குகிறேன்: கடவுளுடைய இரக்கத்தை என்றென்றும் நம்பியுள்ளேன்.
9 இப்படி எனக்குச் செய்ததால் உம்மை என்றென்றும் போற்றுவேன்: உமது திருப்பெயர் நன்மையானது@ அதை உம் புனிதர் முன்னிலையில் சாற்றுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, தீமை, பழைய, என்றென்றும், சங்கீதங்கள், உன்னை, விரும்புகிறாய், பார்த்து, செய்வதில், திருவிவிலியம், ஆன்மிகம், பெருமை