சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 36
2 ஏனென்றால், அவர்கள் விரைவில் புல்லைப் போல் உலர்ந்து போவார்கள்: புற்பூண்டுகளைப் போல வாடிப் போவார்கள்.
3 ஆண்டவர் மீது நம்பிக்கை வை, நன்மை செய்: புனித நாட்டில் எவ்விதக் கவலையின்றி இருப்பாய்.
4 ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு: அப்போது உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார்.
5 உன் வாழ்வின் முடிவை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு@ அவர் பேரில் நம்பிக்கை வைத்திரு: அவரே எல்லாம் செய்வார்.
6 உனது நேர்மை ஒளிபோல எழும்பச் செய்வார்: உனது மாசின்மை பட்டப்பகல் போல விளங்கச் செய்வார்.
7 ஆண்டவரில் மன அமைதிகொள்@ அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே@ அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
8 கோபத்தை விட்டு விடு@ சினத்தைக் கைவிடு: எரிச்சல்படாதே@ அதுவே பாவத்திற்கு வழியாகும்.
9 ஏனென்றால், தீமை செய்வோர் நாசமாவார்கள்: ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
10 இன்னும் சிறிதுகாலம்@ தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்: அவன் இருந்த இடத்தைத் தேடுவாய்@ ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான்.
11 சாந்தமுள்ளோர் புனித நாட்டை உரிமைப்படுத்திக் கொள்வார்கள்: அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர்.
12 நீதிமானுக்கு விரோதமாகப் பாவி சதித்திட்டமிடுகிறான்: அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான்.
13 ஆண்டவரோ அவனைப் பார்த்து நகைக்கிறார்: அவனது அழிவுக்காலம் நெருங்குவதை அவர் காண்கிறார்.
14 ஏழை எளியவரை விழத்தாட்டி, நேரிய பாதையில் நடப்பவர்களைத் தொலைக்க, தீயோர் பட்டயத்தை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகிறார்கள்.
15 ஆனால் அவர்களது பட்டயம் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் ஒடிந்து போகும்.
16 தீயோருடைய திரளான செல்வத்தை விட, நல்லவருடைய சிறிதளவு பொருள் மேலானது.
17 ஏனெனில், பாவிகளின் வலிமை நிலைகுலைந்து போகும்: ஆண்டவர் நீதிமான்களை நிலை நிறுத்துவார்.
18 நீதிமான்களுடைய வாழ்நாட்களைக் குறித்து ஆண்டவர் கருத்தாய் இருக்கிறார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றென்றும் நிற்கும்.
19 அழிவின் காலத்தில் அவர்கள் வெட்கிப் போக மாட்டார்கள்: பஞ்ச காலத்திலோ அவர்கள் நிறைவு கொள்வார்கள்.
20 ஆனால் தீயோர் அழிவுறுவர்@ ஆண்டவருடைய எதிரிகள் செழிப்பான புல்வெளி உலர்வது போல் ஒழிந்துபோவர்: புகை போல் மறைந்தொழிவர்.
21 தீயோர் கடன் வாங்கினால், திருப்பிக் கொடுப்பதில்லை: நல்லவரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.
22 ஆண்டவர் யாருக்குத் தம் ஆசியை அருள்கிறாரோ அவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: யாரைச் சபிக்கிறாரோ அவர்கள் அழிந்து போவார்.
23 ஒருவனுடைய வாழ்வின் நெறி உறுதி பெறுவது ஆண்டவராலே: அவனுடைய வாழ்வை அவர் உகந்ததென ஏற்கிறார்.
24 அப்போது அவன் கீழே விழுந்தாலும் அப்படியே குப்புறக் கிடக்கமாட்டான்: ஏனெனில் ஆண்டவர் அவனது கையைத் தாங்கிக் கொள்கிறார்.
25 இளைஞனாய் இருந்திருக்கிறேன்@ இதோ முதிர் பருவம் அடைந்துள்ளேன்: நல்லவன் கைவிடப்பட்டதை நான் எந்நாளும் கண்டதில்லை@ அவனுடைய மக்கள் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
26 எப்போதும் அவன் இரக்கப்படுகிறான், கடன் கொடுக்கிறான்: ஆகவே அவன் மக்கள் ஆசி பெறுவர்.
27 தீமையை விலக்கு, நன்மை செய்: அப்போது என்றென்றும் வாழ்வாய்.
28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர்.
29 நல்லவர்களோ புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: என்றென்றும் அதில் வாழ்வர்.
30 நீதிமானின் வாயிலிருந்து ஞானம் வெளிப்படும்: அவனது நாவு நேரியதை எடுத்துரைக்கும்.
31 கடவுளுடைய திருச்சட்டம் அவன் நெஞ்சில் பதிந்துள்ளது: அவனுடைய பாதங்கள் தடுமாறுவதில்லை.
32 தீயவன் நீதிமான் மேலேயே கண்ணாயிருக்கிறான்: அவனைக் கொன்றுவிடப் பார்க்கிறான்.
33 ஆனால் ஆண்டவர் அவனைத் தீயவனின் கையில் சிக்கவிட மாட்டார்: நியாயத் தீர்ப்பு நிகழும் போது தண்டனைகளாக விட மாட்டார்.
34 ஆண்டவர் மீது நம்பிக்கை வை@ அவர் காட்டிய வழியில் நட: அப்போது நீ புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி உன்னை உயர்த்துவார்@ தீயோர் அழிவுறுவதைப் பார்த்து மகிழ்வாய்.
35 தீயவன் செருக்கித் திரிவதை நான் பார்த்தேன்: செழித்தோங்கும் கேதுரு மரம் போல் சிறந்தோங்குவதைக் கண்டேன்.
36 அவ்வழியே மீண்டும் சென்றேன்@ அவன் இருக்கிற இடம் தெரியவில்லை: தேடிப் பார்த்தேன், காணவில்லை.
37 நல்லவனைக் கவனித்துப் பார்@ நீதிமானை எண்ணிப் பார்: அமைதியை விரும்புகிறவனுக்கு சந்ததியிராமல் போகாது.
38 பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும்.
39 நல்லவர்களுக்கு ஈடேற்றம் ஆண்டவரிடமிருந்தே வரும்: துன்ப வேளையில் அவர்களுக்குப் புகலிடம் அவரே.
40 ஆண்டவர் அவர்களுக்குத் துணை நின்று விடுதலையளிக்கிறார்@ தீயோரின் கையினின்று விடுவித்துக் காப்பாற்றுகிறார்: ஏனெனில், அவர்கள் அவரிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஆண்டவர், அவன், புனித, அவர், நாட்டை, நம்பிக்கை, ஏற்பாடு, போல், தீயோர், அப்போது, பழைய, ஏனெனில், பார்த்து, கொள்வார்கள், அவனது, நான், மக்கள், அவனுடைய, என்றென்றும், சங்கீதங்கள், தீயவன், செய்வார், பார்த்துப், ஆண்டவரில், உரிமையாக்கிக்கொள்வர், கடன், எரிச்சல், தீமை, கொள்ளாதே, திருவிவிலியம், பார்த்தேன், தீயோரின், மாட்டார், வேரோடு, போகும், ஆன்மிகம், ஏனென்றால், உரிமையாக்கிக், செய், உனது, வாழ்வின், நன்மை, மீது, அவனைப், போவார்கள், இடம், இருந்த, அவரே