சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 35
2 தன் குற்றம் வெளியாகாது, வெறுப்புக்குள்ளாகாது என்று நினைத்து வீண் நம்பிக்கை கொள்கிறான்.
3 அவன் பேசுவதெல்லாம் கொடுமையும் வஞ்சகமுமே: நல்லறிவு கொண்டு நன்மை செய்வதை நிறுத்தி விட்டான்.
4 தூங்கும் போது கூட அவன் நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் அக்கிரமமே: நெறிகெட்ட வழியில் அவன் நடக்கிறான்@ தீய வழியை விட்டு அவன் விலகுவதில்லை.
5 ஆண்டவரே, உமது அருளன்பு வானங்கள் வரைக்கும் உயர்ந்துள்ளது: உமது சொல்லுறுதி மேகங்களையே எட்டுகிறது.
6 உம்முடைய நீதி மிக உயர்ந்த மலைகள் போல உயர்ந்துள்ளன@ உம் நியாயத் தீர்ப்புகள் அடி காணாத கடல் போல் ஆழ்ந்துள்ளன: ஆண்டவரே, மனிதர்களையும் விலங்குகளையும் நீர் காப்பாற்றுகிறீர்.
7 இறைவா, உமதருள் எவ்வளவு உயிர்மதிப்புள்ளது! மனுமக்கள் உம் இறக்கைகளின் நிழலில் வந்து அடைக்கலம் புகுகின்றனர்.
8 உமது வீட்டில் உள்ள செழுமையால் அவர்கள் நிறைவு கொள்கின்றனர்: உம் பேரின்ப நீரோடையில் அவர்களது தாகத்தைத் தணிக்கின்றீர்.
9 ஏனெனில், உயிர்தரும் ஊற்று உம்மிடமே உள்ளது: உமது ஒளியிலே நாங்கள் ஒளி காண்போம்.
10 உம்மை வணங்குபவர்களுக்கு உமது இரக்கத்தையும், செம்மையான நெஞ்சினர்க்கு உமது நேர்மையையும் காண்பித்தருளும் .
11 செருக்குள்ளவன் என்னை நசுக்க விடாதேயும்: பாவியின் கையில் நான் அகப்பட விடாதேயும்.
12 தீமை செய்தவர்கள் இதோ அழிந்து போயினர், வீழ்த்தப்பட்டார்கள்: அவர்கள் மீண்டும் எழப்போவதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, உமது, அவன், ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், விடாதேயும், ஆண்டவரே, பாவியின், திருவிவிலியம், ஆன்மிகம், கொண்டு