சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 30
2 என் பக்கம் செவிசாய்த்தருளும், என்னை விடுவிக்க விரைந்தருளும்@ எனக்கு அடைக்கலந்தரும் பாறையாயிரும்: கோட்டை போலிருந்து என்னைக் காப்பாற்றும்.
3 ஏனெனில், நீர் எனக்குக் கற்கோட்டையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்: உம் பெயரின் பொருட்டு என்னை வழி நடத்தியருள்வீர், நல்வழி காட்டுவீர்.
4 என்னைப் பிடிக்க மறைவாக விரித்துள்ள கண்ணியினின்று என்னைத் தப்புவித்தருள்வீர்: ஏனெனில், நீர் எனக்கு அடைக்கலமாயுள்ளீர்.
5 உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்: ஆண்டவரே, வார்த்தையில் தவறாத இறைவா, நீர் என்னை மீட்டருள்வீர்.
6 வெறும் சிலைகளை வணங்குகிறவர்களை நீர் வெறுக்கிறீர்: நானோ ஆண்டவரில் நம்பிக்கை வைக்கிறேன்.
7 உம் அருளன்பை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: ஏனெனில், துயர் மிக்க என் நிலையப் பார்த்து என் நெருக்கடியில் எனக்கு உதவி செய்தீர்.
8 எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை: எதிரியின் நெருக்கடியில்லாத இடத்தில் என்னை நிலை நிறுத்தினீர்.
9 ஆண்டவரே, என் மேல் இரக்கமாயிரும்@ ஏனெனில், நான் துன்ப நெருக்கடியில் அகப்பட்டிருக்கிறேன்: என் கண்கள் வருத்தத்தால் பலவீனமடைகின்றன, என் உயிரும் உடலும் அப்படியே.
10 வருத்ததிலேயே என் வாழ்நாள் கடந்துசெல்கின்றது@ பெருமூச்சு விடுதலே என் வாழ்க்கையாயிருக்கின்றது: துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது, என் எலும்புகளும் தேய்ந்து போகின்றன.
11 என் எதிரிகள் அனைவருடையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்@ என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்: எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவனானேன்@ வெளியே என்னைக் காண்கின்றவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்.
12 இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்: உடைந்துபோன மட்கலத்தைப் போலானேன்.
13 பலர் என்னை இழித்துப் பேசுவது என்காதில் விழுந்தது@ எப்பக்கமும் அச்சம் என்னைச் சூழ்கிறது: பலரும் எனக்கெதிராய்ச் சதிசெய்து என் உயிரைப் பறிக்க எண்ணினர்.
14 ஆனால் ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்: ~நீரே என் கடவுள்~ என்றேன்.
15 என் கதி உம் கையில் உள்ளது: என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் என்னை விடுவித்தருளும்.
16 கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்: உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்.
17 ஆண்டவரே, உம்மைக் கூவியழைத்தேன், நான் ஏமாற்றமடைய விடாதேயும்: தீயோர் ஏமாற்றமடைவார்களாக, கீழுலகில் விழுந்து வாயடைத்துப் போவார்களாக.
18 பொய் சொல்லும் வாய் பேச்சற்றுப் போவதாக: செருக்கும் புறக்கணிப்பும் கொண்டு நீதிமானுக்கு எதிராக ஆணவச் சொல் பேசும் நாவு அசைவற்றுப் போவதாக.
19 ஆண்டவரே, உம்மை அஞ்சுவோர்க்கு நீர் சேர்த்து வைத்திருக்கும் அருள் எத்துணை மிக்கது!
20 உம்மை நாடி வருவோர்க்கு அனைவர் முன்னிலையிலும் நீர் காட்டும் அருள் எத்துணை மிகுதியானது! எதிரிகளுடைய சதிகளினின்று உம்முடைய திருமுகத்தின் ஆதரவால் அவர்களைப் பாதுகாக்கின்றீர்: தீ நாவுகளுடைய பேச்சுக்கு இரையாகாதபடி அவர்களை உம் கூடாரத்தில் ஒளித்துக் காக்கின்றீர்.
21 ஆண்டவர் வாழ்த்துப் பெறுவாராக: ஏனெனில், அரண்கொண்ட நகரத்தில் என் மீது தம் வியப்புக்குரிய இரக்கத்தைக் காட்டியுள்ளார்.
22 நானோ, "உம் திருமுன்னிலையிலிருந்து தள்ளிவிடப்பட்டேன்!" என்று அச்சம் மேலிட்டவனாய்ச் சொல்லலானேன்: நீரோ என் வேண்டுதலின் குரலைக் கேட்கலானீர்@ நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட போது எனக்குச் செவிகொடுத்தீர்.
23 ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அன்பு காட்டுங்கள்: விசுவாசமுள்ளவர்களை ஆண்டவர் பாதுகாக்கிறார்@ செருக்குற்று நடப்பவர்களுக்கு அவர் நிறைவான தண்டனை அளிக்கின்றார்.
24 ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே, மனத்திடன் கொள்ளுங்கள்: உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, என்னை, நீர், நான், ஆண்டவரே, ஏனெனில், ஏற்பாடு, பழைய, எனக்கு, உம்மை, ஆண்டவர், கையில், சங்கீதங்கள், எதிரியின், அச்சம், போவதாக, அருள், ", மீது, எத்துணை, நெருக்கடியில், எனக்குக், உம்முடைய, விடாதேயும், ஆன்மிகம், திருவிவிலியம், விடுவித்தருளும், என்னைக், நம்பிக்கை, நானோ, என்னைத், வைக்கிறேன்