சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 29
2 ஆண்டவராகிய என் இறைவா, உம்மை நேக்கிக் கூவினேன்: எனக்கு நலம் அளித்தீர்.
3 ஆண்டவரே, கீழுலகினின்று என் ஆன்மாவை வெளியேற்றினீர்: பாதாளப் படுகுழிக்குச் செல்பவர்களிடையினின்று என்னைக் காத்தீர்.
4 புனிதர்களே, ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவர் எத்துணை பரிசுத்தர் என்பதை நினைத்துப் போற்றுங்கள்.
5 ஏனெனில், அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுமட்டுமே, அவரது தயவோ வாழ் நாள் முழுவதும் நீடிக்கும்: மாலையில் அழுகை என்றால், காலையில் உண்டாவது அக்களிப்பு!
6 எந்நாளும் அசைவுறேன்~ என்று மன உறுதியோடு சொன்னேன்.
7 ஆண்டவரே, நீர் உம் தயவு காட்டிய போது எனக்குப் பெருமையும் வலிமையும் தந்தீர்: ஆனால் உமது முகத்தை நீர் மறைத்துக் கொண்ட போது கலக்கமுற்றேன்.
8 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்: என் இறைவனின் இரக்கத்தை நான் மன்றாடுகிறேன் .
9 நான் உயிரிழப்பதால் கிடைக்கும் பயன் என்ன? நான் குழியில் இறங்குவதால் பயன் என்ன? தூசியானது உம்மைப் போற்றுமா? அல்லது உமது வாக்குறுதியைப் புகழ்ந்தேத்துமா?~ என்று வேண்டுகிறேன்.
10 ஆண்டவரே, எனக்குச் செவிசாய்த்தருளும், என்மீதிரங்கும்: ஆண்டவரே, எனக்குத் துணைசெய்யும்.
11 என் அழுகையைக் களிநடனமாக மாற்றினீர்: என் சாக்குத் துணியைக் களைந்து விட்டு, மகிழ்ச்சி உடையால் என்னை உடுத்தினீர்.
12 இதனால், என் ஆன்மா மவுனத்தைக் கலைத்து உம்மைப் புகழ்ந்து பாடும்: ஆண்டவராகிய என் இறைவா, என்றென்றும் உம்மைப் போற்றுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஆண்டவரே, ஏற்பாடு, உம்மைப், பழைய, சங்கீதங்கள், நீர், நான், போது, அவரது, உமது, பயன், உம்மை, என்ன, எனக்கு, ஆன்மிகம், திருவிவிலியம், ஏனெனில், என்னைக், ஆண்டவராகிய, இறைவா