சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 23
2 ஏனென்றால், கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே: ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே.
3 ஆண்டவரது மலை மீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?
4 மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன், பயனற்றதில் மனத்தை செலுத்தாதவன்: தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன் .
5 இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்: இவனே தன்னைக் காக்கும் ஆண்டவரிடம் மீட்பு அடைவான்.
6 இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே: யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே.
7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்@ பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்!
8 மாட்சி மிகு மன்னர் இவர் யாரோ?~ ~வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்: போரில் வல்லவரான ஆண்டவரே இவர்!~
9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்@ பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்!
10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?~ சோனைகளின் ஆண்டவரே இவர்: மாட்சிமிகு மன்னர் இவரே!~
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, மன்னர், ஏற்பாடு, இவர், பழைய, மாட்சிமிகு, சங்கீதங்கள், மீது, ஆண்டவரே, கதவுகளே, உயர்ந்து, நில்லுங்கள், நுழையட்டும், யாரோ, பழங்காலக், உள்ளே, உங்கள், நிலை, அதில், ஆன்மிகம், திருவிவிலியம், அவரே, யார், நிலைகளை, வாயில்களே, ஆண்டவரிடம், இவனே, உயர்த்துங்கள்@