2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 10
2 மைதானங்களில் அன்னியர் அமைந்திருந்த பீடங்களையும் கோயில்களையும் அவர்கள் இடித்து விட்டார்கள்.
3 கடவுளின் ஆலயம் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு வேறொரு பீடத்தைச் செய்தார்கள்@ நெருப்புக் கற்களினின்று நெருப்பு உண்டாக்கி, இரண்டாண்டுகளுக்குப் பிறகு பலிகளை ஒப்புக் கொடுத்தார்கள்@ சாம்பிராணியும் விளக்குகளும், பலிக்குத் தேவையான அப்பங்களும் வைத்தார்கள்.
4 இவை யாவும் செய்த பிறகு தரையில் நெடுங்கிடையாய் விழுந்து, இனி மேல் தாங்கள் இவ்விதத் துன்பங்களில் அகப்படாதபடிக்கும், ஆனால் தாங்கள் பாவம் செய்யும் போது அவராலேயே இரக்கத்தோடு தண்டிக்கப்படும் படியாகவும், கொடியவரும் கடவுளைப் பழிப்பவருமான மனிதருக்குத் தாங்கள் கையளிக்கப்படாதபடிக்கும் ஆண்டவரை மன்றாடினார்கள்.
5 கடவுள் ஆலயம் அன்னியரால் தீட்டுப்படுத்தப் பட்ட காஸ்லேயு மாதத்தின் இருபத்தைந்தாம் நாளிலேயே அது தூய்மைப்படுத்தப் பெற்றது.
6 முன்பு மலைகளிலும் குகைகளிலும் மிருகங்களைப் போல வாழ்ந்த போது, கூடாரத் திருவிழாவைக் கொண்டாடியதை நினைத்துக் கொண்டு, அத்திருவிழாவை அவர்கள் எட்டு நாட்களாக மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.
7 எனவே, தம்முடைய இடத்தைத் தூய்மைப் படுத்தும்படி தயவு செய்தவருக்குத் தழைகளால் அலங்கரிக்கப்பட்ட கழிகளையும் பச்சைக்கிளைகளையும் குருத்துகளையும் எடுத்து வந்தார்கள்.
8 ஆண்டுதோறும் அந்நாட்களைக் கொண்டாட, யூத இனம் முழுமைக்கும் பொதுவான கட்டளையும் உத்தரவும் பிறப்பித்தார்கள்.
9 மகா அந்தியோக்கஸ் என்று அழைக்கப்பட்ட அவ்வரசனுடைய மரணம் இவ்வாறு இருந்தது.
10 இப்போது பாவியான அந்தியோக்கஸ் புதல்வன் எயுபாத்தோர் காலத்தில் நடந்தவற்றையும், போர்களில் நிகழ்ந்த துன்பங்களையும் சுருக்கமாய்ச் சொல்வோம்.
11 ஏனென்றால், இவன் ஆட்சியை ஏற்றுக் கொண்ட போது, பெனிசியா, சீரியா நாடுகளின் படைத் தலைவனான லிசியாஸ் என்பவனை ஆட்சிக் காரியங்களின் தலைவனாக நியமித்தான்.
12 யூதருக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை முன்னிட்டு, அவர்களை நீதியாய் நடத்தவும் அவர்களோடு சமாதானமாய் வாழவும் மாசேர் என்று அழைக்கப்பட்ட தோலெமேயுஸ் தீர்மானித்தான்.
13 இதைப்பற்றி எயுபாத்தோரிடம் நண்பரால் குற்றம் சாட்டப்பட்டமையாலும், பிலோமேத்தோர் தன்னிடம் ஒப்புவித்திருந்த சீப்புருஸ் நாட்டை விட்டு விட்டமையாலும், மகா அந்தியோக்கஸ் என்பவனோடு சேர்ந்து கொண்டு பிலோமேத்தோரிடமிருந்து அகன்று போனமையாலும் தான் துரோகி என்று அழைக்கப் படுவதைக் கேள்விப் பட்டமையால், அவன் நஞ்சுண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.
14 கோர்ஜியாஸ் என்பவன் அவ்விடங்களில் தலைவனாய் இருந்த போது அன்னியரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அடிக்கடி யூதரோடு போர் செய்தான்.
15 தகுதியான கோட்டைகளை வசப்படுத்தியிருந்த யூதரோ யெருசலேமினின்று துரத்தப்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு எதிர்த்துச் சண்டையிட முயன்றார்கள்.
16 மக்கபேயுசுடன் இருந்தவர்கள் ஆண்டவர் தங்களுக்குத் துணைவராயிருக்க மன்றாடி, இதுமேயருடைய கோட்டைகளைத் தாக்கினார்கள்.
17 மிக்க வீரத்தோடு போர்செய்து கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார்கள்@ எதிர்ப்பட்டவர்களைக் கொன்றார்கள்@ இருபதினாயிரம் பேர்களுக்குக் குறையாமல் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
18 எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்த வலிமை மிக்க இரண்டு கோபுரங்களுக்குச் சிலர் ஓடின போது, சீமோன், சூசை, சக்கேயுஸ் என்பவர்களையும்,
19 அவர்களுடன் இருந்த பலரையும் வேண்டிய அளவு விட்டு விட்டு, மக்கபேயுஸ் தாம் அதிகமாகத் தேவைப்பட்ட போர்களுக்காகப் புறப்பட்டார்.
20 சீமோனுடன் இருந்தவர்கள் பண ஆசையினால் தூண்டப்பட்டு, கோபுரங்களில் இருந்த சிலரால் கைவசப்படுத்தப்பட்டார்கள்@ எழுபதினாயிரம் திராக்மா நாணயங்களைப் பெற்றுக் கொண்டு, சிலரைத் தப்பி ஓடும் படி விட்டு விட்டார்கள்.
21 நடந்தது மக்கபேயுசுக்கு அறிவிக்கப்படவே, அவர் மக்களில் முக்கியமானவர்களைக் கூட்டி, பகைவர்களைத் தப்பி ஓடச்செய்து, பணத்துக்காகத் தங்கள் சகோதரர்களை விற்றார்களென்று அவர்கள் மேல் குற்றம் சாட்டினார்.
22 இவ்வாறு துரோகிகளாக மாறியவர்களைக் கொன்றார்@ உடனே இரு கோபுரங்களையும் பிடித்துக்கொண்டார்.
23 ஆயுதங்களினாலும் கைகளினாலும் அனைத்திலும் வெற்றி கண்டு, இரண்டு கோட்டைகளிலும் இருபதினாயிரம் பேர்களுக்கு அதிகமாய்க் கொன்றார்.
24 முன்பு யூதரால், முறியடிக்கப்பட்ட திமோத்தேயுஸ் என்பவன் அன்னியர்களின் சேனைகளைச் சேர்த்து, ஆசியாவின் குதிரைப் படைகளுடன், யூதேயா நாட்டை ஆயுதங்களால் பிடித்துக் கொள்பவன் போல வந்தான்.
25 மக்கபேயுசும் அவருடன் இருந்தவர்களும் அவன் நெருங்கி வந்த போது தலையில் மண்ணைத் தூவிக் கொண்டும், இடையில் தவச்சட்டை தரித்துக் கொண்டும், ஆண்டவரை மன்றாடினார்கள்.
26 பீடத்தடியில் நெடுங்கிடையாக விழுந்து, தங்கள் மீது தயவாய் இருக்கவும், தங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருக்கவும், கட்டளை சொல்வது போன்று பகைவரைப் பகைக்கவும் வேண்டிக் கொண்டார்கள்.
27 இவ்வாறு மன்றாடின பிறகு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நகரத்திலிருந்து நெடுந்தூரம் சென்று, பகைவர்களின் அருகில் வந்து தங்கினார்கள்.
28 சூரியன் உதயமான போது இரு திறத்தாரும் போர்தொடுத்தார்கள். இவர்கள் தங்கள் வலிமையோடு, வெற்றிக்கும் அனுகூலத்துக்கும் உறைவிடமான ஆண்டவரை உறுதியாய் நம்பினார்கள்@ அவர்களோ தம் திறனையே படைத்தலைவனாக நம்பினார்கள்.
29 சண்டை வலுத்த போது விண்ணில் ஒளி பொருந்திய ஐந்து வீரர் பொற்கடிவாளம் பூட்டிய குதிரைகள் மேல் இருந்து யூதர்களை நடத்துகிறவர்களாகப் பகைவருக்குத் தோன்றினார்கள்.
30 அவர்களில் இருவர் மக்கபேயுசைத் தங்கள் நடுவில் வைத்துக் கொண்டு, ஆயுதங்களால் தடுத்து அவருக்கு ஆபத்து நேராதபடி காப்பாற்றினார்கள். பகைவர் மீதோ அம்புகளையும் எரிபடைகளையும் ஏவ, அதனால் அவர்கள் கண் குருடாகி மயங்கிக் கலக்கமுற்று விழுந்தார்கள்.
31 இருபதினாயிரத்து ஐந்நூறு பேரும், அறுநூறு குதிரை வீரரும் கொல்லப்பட்டார்கள்.
32 திமோத்தேயுசோ, கேரேயாஸ் என்பவன் கீழ் இருந்த வலுப்படுத்தப்பட்ட கோட்டையாகிய காசாராவுக்கு ஓடிப்போனான்.
33 மக்கபேயுசும் அவருடன் இருந்தவர்களும் மகிழ்ச்சி கொண்டு, கோட்டையை நான்கு நாட்களாக முற்றுகையிட்டார்கள்.
34 ஆனால், உள்ளேயிருந்தவர்கள் கோட்டையின் வலிமையை நம்பி, இழிவான வார்த்தைகளைக் கூறிப் பழித்துக் கொண்டிருந்தார்கள்.
35 ஆனால், ஐந்தாம் நாள் உதயமான போது, மக்கபேயுசுடன் இருந்தவர்களில் இருபது வாலிபர் கடவுளைப் பழித்ததை முன்னிட்டு மனங் குமுறித் துணிவுடன் மதிலை அணுகி சீற்றமுள்ள மனத்தோடு அதன் மேல் ஏறினார்கள்.
36 மற்றவர்களும் அவ்விதமாகவே ஏறி, கோபுரங்களையும் வாயில்களையும் கொளுத்தவும், (கடவுளைப்) பழித்தவர்களை உயிரோடு சுட்டெரிக்கவும் தொடங்கினார்கள்.
37 இரண்டு நாள் வரையிலும் அயராது கோட்டையைக் கொள்ளையடித்து, ஒளிந்து கொண்டிருந்த திமோத்தேயுசை ஓரிடத்தில் கண்டு கொன்று விட்டார்கள். அவன் சகோதரன் கேரேயாசையும் அப்பொல்லோபானசையும் கொன்றார்கள்.
38 இதன் பின் இஸ்ராயேலிடையே பெரியன புரிந்து அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த ஆண்டவரை இன்னிசைகளாலும் வாழ்த்துகளாலும் போற்றினார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, போது, கொண்டு, தங்கள், ஏற்பாடு, மேல், இருந்த, விட்டு, பிறகு, ஆண்டவரை, பழைய, அவன், இரண்டு, விட்டார்கள், இவ்வாறு, அந்தியோக்கஸ், மக்கபே, கடவுளைப், ஆகமம், அவருடன், என்பவன், தாங்கள், பிடித்துக், தப்பி, இருபதினாயிரம், வேண்டிய, கோபுரங்களையும், மக்கபேயுசும், கொண்டும், இருந்தவர்களும், இருக்கவும், மிக்க, உதயமான, கண்டு, ஆயுதங்களால், நாள், ஏற்றுக், ஆலயம், விழுந்து, கடவுள், ஆண்டவர், திருவிவிலியம், ஆன்மிகம், மன்றாடினார்கள், முன்பு, நாட்டை, மக்கபேயுசுடன், குற்றம், முன்னிட்டு, நாட்களாக, அழைக்கப்பட்ட, இருந்தவர்கள்