யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 அவர்கள் அவனிடம் போய் அவனை நோக்கி, "எங்கள் மேல் தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம். நாங்கள் அடிமைப்பட்டுச் சாவதை விட, உயிரோடு மாமன்னர் நபுக்கோதனசாருக்கு ஊழியம் புரிவதும் உமக்குக் கீழ்ப்படிவதுமே நலம்.
3 இதோ, எம் நகர்களும் எங்கள் உடைமைகளும்- மலைகள், குன்றுகள், காடுகள், மாடுகள், செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, ஒட்டகம் முதலிய எமது செல்வமும்,
4 எம் குடும்பங்களின் சொத்துகளுமாகிய, இவையாவற்றையும் உமது கையில் ஒப்படைக்கிறோம்.
5 நாங்களும் எம் புதல்வர்களும் உமக்கு அடிமைகளே.
6 நீர் சமாதானத் தலைவராக எம்மிடம் வந்து உமது விருப்பப்படியே எம்மை நடத்தும் என்றனர்.
7 அப்பொழுது அவன் மிகுந்த ஆற்றலோடு குதிரைப்படையுடன், மலைகளின்று இறங்கி வந்து எல்லா நகர்களையும், நாட்டில் வாழ்ந்து வந்த யாவரையும் தனக்கு அடிமைப் படுத்தினான்.
8 மேலும் அவன் கைப்பற்றியிருந்த ஒவ்வொரு நகரிலுமிருந்தும் ஆற்றல் படைத்தோரையும் போரிடக் கூடியவர்களையும் ஒரு துணைப்படையாகச் சேர்த்துக் கொண்டான்.
9 அந்நாடுகளில் எத்தகைய அச்சம் நிலவினதென்றால், நகர்வாழ் எல்லா மக்கள் தலைவர்களும், பெரியோர்களும் மக்களோடு சேர்ந்து, ஒலொபெர்னெசைச் சந்திக்கச் சென்றனர்.
10 முடிகளை அணிந்து கையில் தீவட்டி ஏந்தி, குழல் ஊதி, மேளம் கொட்டிக் கூத்தாடி அவனை வரவேற்கச் சென்றனர்.
11 அவர்கள் இவ்வாறெல்லாம் செய்தும் அவனது கல் நெஞ்சத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை.
12 ஏனெனில், அவன் அவர்கள் நகர்களை அழித்துச் சிலைத்தோப்புகளைப் பாழாக்கினான்.
13 காரணம் என்னவெனில், அரசன் நபுக்கோதனசார், "நீ எந்தெந்த இனத்தாரைத் தோற்கடித்துச் சிறைப்படுத்துவாயோ, அவ்வினத்தார் வழிபடும் தெய்வங்களையும் அழித்துப் போடு" என்று ஒலொபெர்னெசுக்குக் கட்டளையிட்டிருந்தான். மக்கள் தன்னை மட்டுமே கடவுள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசனின் எண்ணம்.
14 அதன் பின் ஒலொபெர்னெஸ், சோபாவின் சீரியாவையும், அப்பாமேயா, மெசொபொத்தேமியா ஆகிய நாடுகள் அனைத்தையும் கடந்து, காபாவா நாட்டில் குடியிருந்த இதுமேயரிடம் வந்து சேர்ந்தான்.
15 அவர்களின் நகர்களைக் கைப்பற்றி, முப்பது நாட்கள் அங்கே தங்கியிருந்தான். அப்பொழுது தன் படைகள் முழுவதும் ஒன்று கூடும்படி கட்டளையிட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, எல்லா, யூதித், வந்து, அவன், அப்பொழுது, ஆகமம், கையில், சென்றனர், மக்கள், உமது, நாட்டில், தலைவர்களும், ஆன்மிகம், திருவிவிலியம், சீரியா, முதலிய, ", அவனை, எங்கள்