யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 சதுரமாக வெட்டப்பட்ட கற்களால் அதைக் கட்டினான். அதன் மதில்களின் அகலம் எழுபது முழம்@ உயரம் முப்பது முழம்@ அதன் கொத்தளங்களோ நூறு முழ உயரமாக இருந்தன.
3 அந்தக் கொத்தளங்கள் இருபதடிச் சம சதுரமாய் இருந்தன, அவற்றின் உயரத்திற்கு ஏற்றவாறு கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
4 அர்பக்சாத் தன் படை வலிமையினாலும் தேர்களின் சிறப்பினாலும் தான் ஆற்றல் படைத்தவன் என்று பெருமை பாராட்டி வந்தான்.
5 தனது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், நினிவே மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அசீரிய அரசன். நபுக்கோதனசார் அர்பக்சாத்தோடு போர் தொடுத்தான்.
6 யூப்ரடீஸ், திக்ரீஸ், யாதாசோன் என்ற நதிகளின் தீரத்தில் எலிக்கியரின் அரசன் எரியோக்குக்குச் சொந்தமாயிருந்த ராகுவா என்ற பரந்த வெளியில் அவனை வென்றான்.
7 அதனால், நபுக்கோதனசாரின் அரசு புகழ் பெறவே, அவன் செருக்குற்றான். மேலும், சிலியா, தமாஸ்கு, லீபான் என்ற நாடுகளின் எல்லா குடிகளுக்கும்.
8 கார்மேல், கேதார் என்ற நாடுகளின் மக்களுக்கும், சமாரியாவிலும், யோர்தானுக்கு.
9 அக்கரை தொடங்கி யெருசேலம் வரையுள்ள எல்லாருக்கும், எத்தியோப்பியாவின் எல்லை வரை உள்ள எஸ்ஸே நாட்டுக் குடிகளுக்கும்.
10 தூதுவர்களை அனுப்பினான்.
11 அம்மக்களோ வந்தவர்களை ஒருமுகமாய் வரவேற்று உபசரிக்காது வெறுங்கையராய் அனுப்பி வைத்தனர்.
12 எனவே அரசன் நபுக்கோதனசார் அவ்வெல்லா நாடுகளின் மேலும் கடும் சினம் கொண்டான். "அவ்வெல்லா நாட்டவர்களையும் பழிவாங்குவேன்" என்று தன் அரியணையின் மேலும் அரசின் மேலும் ஆணையிட்டுக் கூறினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, மேலும், அரசன், பழைய, நாடுகளின், யூதித், ஆகமம், அவ்வெல்லா, நபுக்கோதனசார், குடிகளுக்கும், அர்பக்சாத், திருவிவிலியம், ஆன்மிகம், முழம்@, இருந்தன