திமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 2
2 சாட்சிகள் பலர் முன்னிலையில் நீர் என்னிடமிருந்து கேட்டறிந்த போதனையை மற்றவர்களுக்குப் போதிக்கக் கூடியவர்களும் நம்பிக்கைக்குரியவர்களுமான ஆட்களிடம் ஒப்படையும்.
3 கிறிஸ்து இயேசுவின் நல்ல வீரனைப்போல் நீரும் துன்பத்தில் பங்குக் கொள்ளும்.
4 படையில் சேர்ந்துகொண்ட எவனும் அன்றாட வாழ்க்கை அலுவல்களில் ஈடுபடுவதில்லை தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்கு உகந்தவனாய் இருக்கவேண்டுமென்றோ?
5 மேலும், பந்தய விளையாட்டுகளில் கலந்துகொள்பவன் ஒழுங்குகளைப் பின்பற்றினாலன்றி வெற்றி வாகையைச் சூட மாட்டான்.
6 விளைச்சலின் பலனை முதன்முதல் பெற வேண்டியவன் பாடுபட்டு உழைக்கும் குடியானவனே.
7 நான் சொல்லுகிறதை எண்ணிப்பாரும். இதையெல்லாம் நீர் நன்றாயுணர ஆண்டவர் உமக்கு அருள் செய்வார்.
8 இயேசு கிறிஸ்துவை நினைவில் வையும். அவர் தாவீதின் மரபில் தோன்றி, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
9 இதுவே நான் கூறும் நற்செய்தி. இந்த நற்செய்தியின் பொருட்டே நான் குற்றவாளியைப் போல விலங்கிடப்படும் அளவுக்குத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளுடைய வார்த்தைக்கு விலங்கெதுவுமில்லை.
10 தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பையும் முடிவில்லா மகிமையையும் பெறவேண்டுமென்று அவர்களுக்காக நான் இவையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.
11 உண்மையான வார்த்தை இது. ~அவரோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.
12 நிலைத்து நின்றால், அவரோடு அரசாள்வோம். நாம் அவரை மறுதலித்தால். அவரும் நம்மை மறுதலிப்பார்.
13 நாம் அவருக்கு உண்மையாயில்லாவிடினும், அவரது வாக்குறுதி பொய்க்காது@ அவர் தம்மையே மறுதலிக்க முடியாது.~
14 இவற்றை அவர்களுக்கு நினைவூட்டும், வெறும் சொற்களைப்பற்றிச் சண்டையிடுவதை நிறுத்தும்படி கடவுள் முன்னிலையிலும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளும். அப்படிச் சண்டையிடுவது பயனற்றது. அதைக் கேட்போருக்கும் அது கேட்டையே விளைவிக்கும்.
15 கடவுளால் ஏற்கப்படத்தக்கவராய் விளங்கவும். நாணித் தலைகுணியவேண்டிய செயலில் ஈடுபடாத வேலையாளாய் இருக்கவும், நெறிபிறழாது உண்மையின் வார்த்தையைப் போதிப்பவராய் இருக்கவும் முயற்சி செய்யும்.
16 இலௌகீக வீண் பேச்சை விலக்கும். அப்படிப் பேசுபவர்கள் அவபக்தியில் மேன்மேலும் ஆழ்ந்து போவார்கள்.
17 அவர்களுடைய பேச்சு புற்று நோயெனப் புரையோடிப் பரவும். இமெனேயுவும் பிலேத்தும் இத்தகையவர்கள்.
18 உயிர்த்தெழுதல் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு இவர்கள் உண்மையை விட்டுவிலகி, சிலருடைய விசுவாசத்தையே தகர்த்துவிடுகிறார்கள்.
19 ஆயினும், கடவுளிட்ட உறுதியான அடித்தளம் நிலையாய் நிற்கிறது. அதன்மேல் ~ஆண்டவர் தம்மவரை அறிவார்~ என்றும், ~ஆண்டவருடைய பெயரை உச்சரிப்பவன் எவனும் அநீதியினின்று விலகி நிற்பானாக~ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
20 ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்கள் வெள்ளிப்பாத்திரங்கள் மட்டுமா உள்ளன? மரப்பாத்திரங்களும் மட் பாத்திரங்களும் உள்ளன அல்லவா? சிலவற்றை மதிப்புயர்ந்தவையாகவும், சிலவற்றை மதிப்பற்றவையாகவும், கருதுகிறோம்.
21 மேற்சொன்ன குற்றங்களை நீக்கி, ஒருவன் தன்னை மாசில்லாமல் காத்துக்கொண்டால் மதிப்புயர்ந்த பரிசுத்த பாத்திரம் ஆவான். தன் தலைவனுக்குப் பயனுள்ளவனும் எத்தகைய நற்பணியும் புரியத் தக்கவனுமாயிருப்பான்.
22 இளமைக்குரிய இச்சைகளைத் தவிர்த்து விடும். நீதி, விசுவாசம், அன்பு இவற்றைத் தேடும். தூய உள்ளத்தோடு ஆண்டவரைத் தொழுவாருடன் சமாதானத்தை நாடும், அறிவில்லா மூட ஆராய்ச்சிகளைத் தள்ளி விடும்.
23 இவை பூசல்களைத் தான் விளைவிக்குமென நீர் அறிவீரன்றோ?
24 ஆண்டவருடைய ஊழியன் பூசல் விளைவிப்பவனாய் இருத்தல் ஆகாது. எல்லாருக்கும் இனியவனாகவும், போதிக்க வல்லவனாகவும், துன்பத்தில் பொறுமையுள்ளவனாகவும் இருக்கவேண்டும்.
25 தன்னை எதிர்ப்பவர்களைச் சாந்தத்தோடு கடிந்து கொள்ளவேண்டும், ஏனெனில், கடவுள் அவர்களுக்கு மனந்திரும்பும் அருளைத் தந்து அவர்கள் உண்மையைக் காணச் செய்யக் கூடும்.
26 பேயின் வலையில் சிக்குண்டு அதன் விருப்பத்திற்கு அடிமைகளாயிருந்த அவர்கள் இவ்வாறு தெளிவடைந்து அவ்வலையினின்று விடுதலை பெறக்கூடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம் - புதிய ஏற்பாடு, ஏற்பாடு, நான், நீர், கிறிஸ்து, நிருபம், தன்னை, எழுதிய, இரண்டாவது, திமோத்தேயுவுக்கு, கடவுள், அவர்களுக்கு, என்றும், விடும், சிலவற்றை, நாம், இருக்கவும், கொள்ளும், ஆன்மிகம், திருவிவிலியம், இயேசுவிலுள்ள, துன்பத்தில், அவர், எவனும், அவரோடு