மத்தேயு நற்செய்திகள் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 23
2 "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோயீசனுடைய இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
3 அவர்கள் உங்களுக்குச் சொல்லுவதெல்லாம் கடைப்பிடித்து நடங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோலச் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள்@ செய்வதில்லை.
4 பளுவான சுமையைக் கட்டி மக்களுடைய தோள்மேல் வைக்கிறார்கள்@ தாங்களோ அதை ஒரு விரலாலும் அசைக்கமாட்டார்கள்.
5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டுமென்றே செய்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தம் சீட்டுப்பட்டங்களை அகலமாக்கிக் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.
6 விருந்துகளில் முதலிடங்களையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும் விரும்புகின்றனர்.
7 பொது இடங்களில் வணக்கம் பெறவும், மக்களால் ~ராபி~ எனப்படவும் ஆசிக்கின்றனர்.
8 நீங்களோ ~ராபி~ என்று அழைக்கப்படவேண்டாம். ஏனெனில், உங்கள் போதகர் ஒருவரே@ நீங்கள் அனைவரும் சகோதரர்.
9 மண்ணுலகில் ஒருவரையும் தந்தையென்று கூறவேண்டாம். ஏனெனில், விண்ணுலகிலுள்ளவர் ஒருவரே உங்கள் தந்தை.
10 குரு என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில், மெசியா ஒருவரே உங்கள் குரு.
11 உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.
12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்@ தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்.
13 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!
14 ஏனெனில், மனிதர் விண்ணரசில் நுழைகையில் வாயிலை அடைத்துவிடுகிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.
15 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஒருவனை மதத்தில் சேர்க்க நாடும் கடலும் சுற்றி அலைகிறீர்கள். அவன் சேர்ந்தபின் உங்களைவிட இரு மடங்கு அவனை நரகத்துக்கு உரியவனாக்குகிறீர்கள்.
16 குருட்டு வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆலயத்தின்மீது ஒருவன் ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை@ ஆனால், ஆலயத்தின் பொன்மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்களே.
17 மூடரே, குருடரே, எது பெரிது? பொன்னா? பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?
18 மேலும் ஒருவன் பீடத்தின்மீது ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை@ ஆனால், பீடத்தின் மேலுள்ள காணிக்கையின் மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்கள்.
19 குருடரே, எது பெரிது? காணிக்கையா? காணிக்கையைப் பரிசுத்தமாக்கும் பீடமா?
20 எனவே, பீடத்தின் மீது ஆணையிடுவோன் அதன் பெயராலும், அதன் மேலுள்ள அனைத்தின் பெயராலும் ஆணையிடுகிறான்.
21 ஆலயத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் அதன் பெயராலும், அதில் குடிகொண்டிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.
22 வானகத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் கடவுளுடைய அரியணையின் பெயராலும், அதன்மேல் வீற்றிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.
23 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதகுப்பி, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதி செலுத்துகிறீர்கள். ஆனால், திருச்சட்டத்தில் முக்கிய படிப்பினைகளான நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள். இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்@ அவற்றையும் விடலாகாது.
24 குருட்டு வழிகாட்டிகளே, கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறீர்கள்.
25 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன.
26 குருட்டுப் பரிசேயனே, கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு@ அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்.
27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை வெளியே மனிதருக்கு வனப்பாகத் தோன்றுகின்றன. உள்ளேயோ இறந்தோர் எலும்புகளும், எவ்வகை அசுத்தமும் நிறைந்துள்ளன.
28 அவ்வாறே நீங்களும் வெளியே மனிதருக்கு நீதிமான்களாகத் தோன்றுகிறீர்கள். உள்ளேயோ கள்ளத்தனத்தாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டி நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள்.
30 எங்கள் முன்னோர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால், அவர்கள் இறைவாக்கினர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு உடந்தையாய் இருந்திருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
31 இவ்வாறு, இறைவாக்கினர்களைக் கொன்றவர்களுடைய மக்கள் நீங்கள் என்பதற்கு, நீங்களே உங்களுக்கு எதிர்சாட்சிகள்.
32 எனவே, உங்கள் முன்னோர் தொடங்கியதை நீங்கள் முடித்துவிடுங்கள்.
33 பாம்புகளே, விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் நரகத் தீர்வைக்கு எப்படித் தப்பமுடியும்?
34 எனவே, இதோ! நான் இறைவாக்கினர்களையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரைக் கொல்வீர்கள், சிலுவையில் அறைவீர்கள்@ சிலரை உங்கள் செபக்கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்@ ஊர் ஊராய் விரட்டியடிப்பீர்கள்.
35 இவ்வாறு குற்றமற்ற ஆபேலுடைய இரத்தம்முதல், ஆலயத்திற்கும் பீடத்திற்கும் இடையே நீங்கள் கொன்றவரும், பரக்கியாவின் மகனுமான சக்கரியாசின் இரத்தம்வரை சிந்திய மாசற்ற இரத்தத்தின் பழி எல்லாம் உங்கள்மேல் வந்துவிழும்.
36 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இவையனைத்தும் இத்தலைமுறைமேல் வந்துவிழும்.
37 "யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன். நீயோ உடன்படவில்லை.
38 இதோ! உங்கள் வீடு குடியற்றுப்போகும்.
39 ஏனெனில், ~ ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி ~ என்று நீங்கள் கூறும்வரை இனி என்னைக் காணமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
மத்தேயு நற்செய்திகள் - புதிய ஏற்பாடு, ஏனெனில், நீங்கள், மறைநூல், உங்களுக்கு, கேடு, உங்கள், ", அறிஞரே, வெளிவேடக்கார, பெயராலும், பரிசேயரே, ஏற்பாடு, ஆணையிட்டால், அவன், மத்தேயு, ஆணையிடுகிறான், உங்களுக்குச், நற்செய்திகள், பெயரால், மேலுள்ள, மீது, என்கிறீர்கள், நிறைந்துள்ளன, ஆணையிடுகிறவன், மனிதருக்கு, வந்துவிழும், சொல்லுகிறேன், யெருசலேமே, இறைவாக்கினர்களைக், இவ்வாறு, பீடத்தின், உள்ளேயோ, முன்னோர், வெளியே, வழிகாட்டிகளே, செபக்கூடங்களில், ~ராபி~, ஒருவரே, மக்கள், கட்டி, திருவிவிலியம், ஆன்மிகம், குரு, நீங்களும், கடமைப்பட்டவன், குருடரே, பெரிது, ஆலயத்தின், ஒன்றுமில்லை@, குருட்டு, ஒருவன், பரிசுத்தமாக்கும்