கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 9
2 மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாய் இராவிடினும், உங்களுக்காகவது நான் அப்போஸ்தலனே. ஏனெனில், என் அப்போஸ்தலப் பணிக்கு நீங்களே ஆண்டவருக்குள் அத்தாட்சியாய் இருக்கிறீர்கள்.
3 இதைக் குறித்து என்னிடம் கேள்வி கேட்போருக்கு நான் கூறும் மறுப்பு இதுவே:
4 உங்களிடம் இருந்து உணவும் பானமும் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?
5 மற்ற அப்போஸ்தலர்களும், ஆண்டவரின், சகோதரர்களும், கேபாவும் செய்வதுபோல ஒரு கிறிஸ்தவ மனைவியை எங்களோடு அழைத்துக்கொண்டு போக எங்களுக்கு உரிமை இல்லையா?
6 அல்லது பிழைப்புக்காக உழைக்காமலிருக்க எனக்கும் பர்னாவுக்கும் மட்டுந்தானா உரிமையில்லை?
7 எவனாவது தன் சொந்த செலவில் போர் வீரனாய் உழைப்பானா? திராட்சைத் தோட்டம் வைப்பவன் எவனாவது அதன் கனியை உண்ணாதிருப்பானா? ஆடு மாடு மேய்ப்பவன் எவனாவது அவற்றின் பாலைப் பருகாதிருப்பானா?
8 நான் இவ்வாறு குறிப்பிடுவது மனிதர் வழக்கமட்டுமன்று, திருச்சட்டமும் இதையே சாற்ற வில்லையா?
9 மோயீசனது சட்டத்தில், ~போரடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே~ என எழுதியிருக்கிறது. மாடுகளைப் பற்றிக் கடவுளுக்குக் கவலையா? எங்களுக்காகவே இதைச் சொல்லுகிறார் என்பதில் ஐயமென்ன? எங்களுக்காகவே இது எழுதியுள்ளது
10 அதாவது உழுகிறவன் நம்பிக்கையோடு உழவேண்டும், போரடிக்கிறவன் பலனில் பங்கு கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடு வேலை செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
11 உங்களுக்கென ஆவிக்குரிய நன்மைகளை விதைத்தபின் உடலுக்கு வேண்டியதை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றுக்கொண்டால், அது மிகையாகுமோ?
12 மற்றவர்களுக்கு உங்கள்மேல் இந்த உரிமையிருந்தால், அவர்களைவிட எங்களுக்கு அதிக உரிமையில்லையா? ஆயினும் இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை@ மாறாக, கிறிஸ்துவின் நற்செய்திக்கு எங்களால் எந்தத் தடையும் ஏற்படாதபடி எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளுகிறோம்.
13 கோயிலில் பணியாற்றுவோர் கோயில் காணிக்கையிலிருந்தே உணவு பெறுவர்@ பீடத்தில் ஊழியஞ் செய்வோர் பீடத்துப் பலிப்பொருளில் பங்குகொள்வர்.
14 இது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியாலேயே பிழைப்பு கிடைக்க வேண்டுமென்று ஆண்டவர் கட்டளையிட்டார்.
15 நானோ இவ்வுரிமைகளில் ஒன்றையேனும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வுரிமைகள் எனக்கு வேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. இப்படி உரிமை பாராட்டுவதை விடச் சாவதே எனக்கு நலம்,.
16 நான் பாராட்டக்கூடிய பெருமையை யாரும் வெறுமையாக்க விடமாட்டேன். நற்செய்தியை அறிவிப்பதுகூட நான் பெருமைப் படுவதற்குரியதன்று, அது என்மேல் சுமத்தப்பட்ட கடமையே. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ! எனக்குக் கேடு@
17 நானாகவே இந்த வேலையை மேற்கொண்டிருந்தால், அதற்குத் தக்க ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் அது என்மேல் சுமத்தப்பட்டதாயிருப்பதால், கண்காணிப்பாளன் என என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலையே செய்கிறேன்.
18 ஆகவே,. எனக்குரிய ஊதியம் எது? நற்செய்தியை நான் அறிவிக்கும்போது அந்த நற்செய்தி எனக்குத் தரும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளாமல், உங்களுக்கு எச்செலவுமின்றி, அந்நற்செய்தியை வழங்குவதே எனக்குரிய ஊதியம்.
19 இவ்வாறாக, நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும், மிகுதியான மக்களை வசமாக்க என்னையே எல்லார்க்கும் அடிமையாக்கினேன்.
20 யூதர்களை வசமாக்க, யூதருக்கு யூதனைப்போல் ஆனேன். யூத சட்டத்திற்குட்பட்டவர்களை வசமாக்க, நான் அதற்கு உட்படாதவனாயிருந்தும், அச்சட்டத்திற்குட்பட்டவர்களுக்கு அவர்களைப்போல் ஆனேன்.
21 திருச்சட்டத்தை அறியாதவர்களை வசமாக்க, அவர்களுக்காகச் சட்டம் அறியாதவனைப் போல் ஆனேன். நானோ கடவுளின் சட்டத்தை அறியாதவன் அல்லேன். ~கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவனே.
22 வலிமையற்றவர்களை வசமாக்க, வலிமையற்றவர்களுக்கு வலிமையற்றவன் ஆனேன். எப்படியேனும் ஒரு சிலரையாவது மீட்க, எல்லார்க்கும் எல்லாம் ஆனேன்.
23 நற்செய்தியின் பலனில், பங்குபெறவேண்டி நற்செய்திக்காகவே இவையெல்லாம் செய்கிறேன்.
24 பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் எல்லாரும் ஓடினாலும், பரிசு பெறுபவன் ஒருவனே என்பது உங்களுக்குத் தெரியாதா? பரிசு பெறுவதற்காக நீங்களும் அவர்களைப் போல் ஓடுங்கள்.
25 பந்தயத்தில் போட்டியிடுகிறவர்கள் எல்லாரும் தங்களை எல்லாவகையிலும் ஒடுக்குகிறார்கள்@ அவர்கள் அழிவுறும் வெற்றிவாகை பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள். நாமோ அழியாத வெற்றிவாகை அடைவதற்காக இப்படிச் செய்கிறோம்.
26 ஆகையால் நான் ஓடுவது குறிக்கோள் இல்லாமல், அன்று நான் மற்போர் புரிவது காற்றில் குத்துபவன்போல் அன்று.
27 பிறருக்கு நற்செய்தி அறிவித்தபின், நானே தகுதியற்றவன் என நீக்கப்படாதவாறு என் உடலை ஒறுத்து அடிமைப்படுத்துகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு, நான், ஏற்பாடு, வசமாக்க, ஆனேன், நற்செய்தியை, உரிமை, எவனாவது, ஊதியம், பயன்படுத்திக், முதலாவது, நிருபம், இல்லையா, எழுதிய, எனக்கு, கொரிந்தியருக்கு, எங்களுக்கு, நற்செய்தி, எனக்குரிய, செய்கிறேன், பரிசு, இப்படிச், அன்று, வெற்றிவாகை, பெறுவதற்காக, போல், எல்லாரும், எல்லார்க்கும், பலனில், ஆண்டவருக்குள், மற்றவர்களுக்கு, வில்லையா, செய்ய, திருவிவிலியம், ஆன்மிகம், என்னிடம், எங்களுக்காகவே, தெரியாதா, நானோ, உங்களுக்குத், வேண்டும், நம்பிக்கையோடு, என்மேல்