அருளப்பர் எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 2
2 நம் பாவங்களைப்போக்கும் பரிகாரப் பலி அவரே. நம் பாவங்களை மட்டுமன்று, உலகனைத்தின் பாவங்களையும் போக்கும் பரிகாரப் பலி அவரே.
3 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால் தான் நாம் அவரை அறிந்துள்ளோம் என உறுதி கொள்ளலாம்.
4 ~நான் அவரை அறிவேன்~ என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யன்@ உண்மை என்பது அவனிடம் இல்லை.
5 ஆனால் அவரது வார்த்தையை ஒருவன் கடைப்பிடித்தால், அவனிடம் கடவுளன்பு உண்மையாகவே நிறைவாகியுள்ளது. நாம் அவருள் இருக்கிறோம் என்பது இதனால் உறுதியாகும்.
6 ~அவருள் நிலைத்திருக்கிறேன்~ எனக் கூறுபவன் அவர் நடந்தது போல நடக்கவேண்டும்.
7 அன்புக்குரியவர்களே, நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளையன்று@ ஆதிமுதல் நீங்கள் பெற்றிருந்த பழைய கட்டளையே. நீங்கள் கேட்டுள்ள வார்த்தையே அப்பழைய கட்டளை.
8 இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளைதான். இது புதியது என்பது அவர் வாழ்க்கையில் விளங்கியதுபோல் உங்கள் வாழ்க்கையிலும் விளங்குகிறது. ஏனெனில், இருள் அகன்றுபோகிறது. உண்மையொளி இப்போதே ஒளிர்கின்றது.
9 ~நான் ஒளியில் இருக்கிறேன்~ என்று சொல்லிக்கொண்டு தன் சகோதரனை வெறுப்பவன் இன்னும் இருளிலேயே இருக்கிறான்.
10 தன் சகோதரனுக்கு அன்புசெய்பவனே ஒளியில் நிலைத்திருக்கிறான். அவனை இடறிவிழச் செய்வது எதுவுமில்லை.
11 தன் சகோதரனை வெறுப்பவனோ இருளிலே இருக்கிறான், இருளிலே நடக்கிறான், தான் செல்வதெங்கே என்றறியான்@ இருள் அவன் கண்களைக் குருடாக்கிவிட்டது.
12 அன்புக் குழந்தைகளே, அவர் பெயரின் பொருட்டு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன@ ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன்.
13 தந்தையரே, ஆதிமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்@ ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் தியோனை வென்றுவிட்டீர்கள்@ ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன்.
14 அன்புப் பிள்ளைகளே, பரம தந்தையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்@ ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். தந்தையரே, ஆதிமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்@ ஆகையால் நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். இளைஞரே, நீங்கள் வலிமை மிகுந்தவர்கள்@ கடவுளின் வாக்கு உங்களுள் நிலைத்து நிற்கிறது. தீயோனை நீங்கள் வென்றுவிட்டீர்கள்@ ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன்.
15 உலகின்மீதும் அதிலுள்ள எதன்மீதும் அன்பு வைக்காதீர்கள். உலகின்மீது ஒருவன் அன்பு வைத்தால், பரம தந்தையின் மீது அவனுக்கு அன்பு இல்லை.
16 ஊனியல்பு இச்சிப்பதும், கண்கள் காண இச்சிப்பதும், செல்வத்தில் செருக்கு கொள்வதுமாகிய இவ்வுலகிற்குரியவையெல்லாம் பரம தந்தையிடமிருந்து வரவில்லை@ உலகிலிருந்தே வருகின்றன.
17 உலகமோ மறைந்துபோகிறது@ அத்துடன், மனிதன் உலகில் இச்சிக்கும் அனைத்தும் மறைந்துபோகிறது. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவன் என்றும் நிலைத்திருப்பான்.
18 அன்புப் பிள்ளைகளே, இதுவே இறுதிக் காலம்@ எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே, இதோ, இப்போதே எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். இது இறுதிக் காலம் என இதனால் நாம் அறிகிறோம்.
19 இவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தனர், உண்மையில் இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர். உண்மையில் நம்மைச் சார்ந்தவர்களாய் இருந்திருப்பின், நம்மோடு நிலைத்திருப்பர். இவர்களுள் யாரும் உண்மையில் நம்மைச் சார்ந்திருக்கவில்லை என்பது தெளிவாகுமாறு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார்கள்.
20 நீங்கள் பரிசுத்தரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள்@ அதனால் அனைவரும் அறிவு பெற்றிருக்கிறீர்கள்.
21 நீங்கள் உண்மையை அறியவில்லை. என்பதால் நான் இதை உங்களுக்கு எழுதவில்லை@ அதை அறிந்திருக்கிறார்கள் என்பதாலும், பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே எழுதினேன்.
22 இயேசு தான் கிறிஸ்து என்பதை எவன் மறுக்கிறானோ அவன் பொய்யன்@ அவனே எதிர்க்கிறிஸ்து@ பரம தந்தையையும் அவர் மகனையும் அவன் மறுக்கிறான்.
23 மகனை மறுக்கிறவன் எவனும் தந்தையையும் வேண்டாமென்கிறான்@ மகனை ஏற்றுக்கொள்பவன் தந்தையையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
24 தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்@ தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால், தந்தைக்குள்ளும், அவர் மகனுக்குள்ளும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.
25 அவர் நமக்கு வாக்களித்தது முடிவில்லா வாழ்வாகும். அதை அவர் தாமே வாக்களித்தார்.
26 உங்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களைக் குறித்து இதை எழுதினேன்.
27 நீங்களோ அவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள்@ அந்த அபிஷேகம் உங்களில் நிலைத் திருக்கிறது@ ஆகவே ஒருவரும் உங்களுக்குக் கற்பிக்கத் தேவையில்லை@ அவரது அபிஷேகமே உங்களுக்கு எல்லாவற்றைக் குறித்தும் கற்பித்து வருகிறது. உண்மையைத்தான் கற்பித்து வருகிறது, பொய்யையன்று. எனவே, அது உங்களுக்குக் கற்பித்தது போல அவருள் நிலைத்திருங்கள்.
28 ஆகவே, அன்புக் குழந்தைகளே, அவர் வெளிப்படும்போது நாம் நம்பிக்கையோடிருக்கவும், அவரது வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும், அவருள் நிலைத்திருங்கள்.
29 இறைவன் நீதியுள்ளவர் என நீங்கள் அறிவீர்களாகில், நீதியைக் கடைப்பிடிப்பவன் எவனும் அவரிடமிருந்து பிறந்தவன் என ஒப்புக் கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அருளப்பர் எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு, நீங்கள், உங்களுக்கு, நான், அவர், இவ்வாறு, ஆகையால், ஏற்பாடு, எழுதினேன், எழுதுகிறேன், அவரை, நாம், என்பது, அபிஷேகம், தந்தையையும், அவரது, முதலாவது, உண்மையில், ஆதிமுதல், எழுதிய, தான், நம்மைச், அவருள், அன்பு, அவரே, அறிந்திருக்கிறீர்கள்@, ஒருவன், குழந்தைகளே, அன்புக், கிறிஸ்து, நிருபம், உங்களுள், அவன், அருளப்பர், எதிர்க், இச்சிப்பதும், பிள்ளைகளே, இறுதிக், கடவுளின், மகனை, உங்களுக்குக், ஆகவே, கற்பித்து, வருகிறது, நிலைத்திருங்கள், அவரிடமிருந்து, கேட்டறிந்தது, பெற்றிருக்கிறீர்கள்@, நம்மைவிட்டுப், அன்புப், எவனும், தொடக்கத்திலிருந்து, இவர்கள், இருள், கடைப்பிடித்தால், கட்டளைகளைக், ~நான், பொய்யன்@, அவனிடம், அவருடைய, பரிகாரப், பழைய, திருவிவிலியம், ஆன்மிகம், நமக்கு, இயேசு, இல்லை, இதனால், இருளிலே, இருக்கிறான், தந்தையரே, இருக்கும், இளைஞரே, சகோதரனை, ஒளியில், எழுதுவது, புதியதொரு, உங்கள், இப்போதே, வென்றுவிட்டீர்கள்@