தீத்துவுக்கு எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 3
2 அவர்கள் எந்த நற்செயலுக்கும் தயாராயிருக்கவும், பழிச்சொல்லும் வீண் சண்டையும் விலக்கி, அமைதியுடன் எல்லாரிடமும் நிறைவான சாந்தத்தோடு பழகவும் வேண்டும்.
3 நாமும் ஒருகாலத்தில் மதிகேடராய் யாருக்கும் அடங்காமல் நெறி தவறியிருந்தோம்@ பல்வேறான இச்சைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டு, பொறாமையும் தீய மனமும் கொண்டவர்களாய் வாழ்ந்தோம்@ வெறுப்புக்குரியோராய்ப் பிறரையும் வெறுத்து வந்தோம்.
4 நம் மீட்பராகிய கடவுளின் பரிவும் நேயமும் பிரசன்னமானபோது,
5 நீதிநெறியைப் பின்பற்றி நாமே செய்த நற்செயல்களை முன்னிட்டன்று, தம் இரக்கத்தை முன்னிட்டே புதுப்பிறப்பைத் தரும் முழுக்கினாலும், புத்துயிர் அளிக்கும் பரிசுத்த ஆவியாலும் இறைவன் நம்மை மீட்டார்.
6 இந்த ஆவியை அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மீது நிரம்பப் பொழிந்தார்.
7 கிறிஸ்துவின் அருளினால் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி நமக்குள்ள நம்பிக்கையால் முடிவில்லா வாழ்வுக்கு உரிமையாளராவதற்கே இவ்வாறு செய்தார்.
8 இது உண்மையான வார்த்தை. ஆகவே, கடவுள்மேல் விசுவாசமுள்ளவர்கள் நற்செயல்களில் ஈடுபடக் கருத்தாயிருக்கும்படி நீர் வற்புறுத்தவேண்டும் என்பது என் விருப்பம். இவை நல்லவை, மக்களுக்குப் பயன்படுபவை
9 ஆனால், மூட ஆராய்ச்சிகள், தலைமுறைகளைப் பற்றிய ஆய்வுகள், சண்டை சச்சரவுகள், சட்டத்தைப்பற்றிய வாக்குவாதங்கள் இவற்றை விலக்கும். இவை பயனற்றவை@ வீணானவை.
10 கட்சி விளைவிப்பவனை இரு முறை எச்சரித்தபின் விட்டு விலகும்.
11 அப்படிப்பட்டவன் நெறி பிறழ்ந்தவன்@ தனக்குத் தானே தீர்ப்பைத் தேடிக்கொண்ட பாவி. இது உமக்குத் தெரிந்ததே.
12 உம்மிடம் அர்த்தெமாவையோ, தீக்கிக்குவையோ நான் அனுப்பும்பொழுது நீர் நிக்கொப்போலி நகருக்கு என்னிடம் விரைவில் வந்துசேரும். அங்கேதான் குளிர்காலத்துக்குத் தங்கத் தீர்மானித்திருக்கிறேன்.
13 அப்பொல்லோவையும் வழக்கறிஞரான சேனாவையும் வழிகூட்டி அனுப்பிவையும். அவர்களுக்கு எவ்விதக் குறையும் ஏற்படாதபடி அக்கறையோடு பார்த்துக்கொள்ளும்.
14 நம்மவர்களும் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்யும்படி கண்ணியமான வேலைகளில் ஈடுபடக் கற்றுக்கொள்வார்களாக. அவர்கள் பயனற்றவர்களாயிருத்தலாகாது.
15 என்னோடு இருக்கும் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை நேசிக்கிறவர்களுக்கு என் வாழ்த்துக்களைக் கூறும். இறை அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தீத்துவுக்கு எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு, ஏற்பாடு, தீத்துவுக்கு, நிருபம், எழுதிய, கிறிஸ்துவின், ஈடுபடக், நீர், நம்மை, ஆன்மிகம், திருவிவிலியம், நெறி, மீட்பராகிய