எபிரேயருக்கு எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 3
2 இறைவனின் வீடு முழுவதையும் கண்காணிப்பதில் மோயீசன் உண்மையுள்ளவராக இருந்ததுபோல், இவரும் தம்மை ஏற்படுத்திய இறைவனுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்.
3 ஆனால், வீடு கட்டினவன் வீட்டைவிட எவ்வளவுக்கு மதிப்புப் பெறுகிறானோ, அவ்வளவுக்கு இவர் மோயீசனைவிட மகிமைக்குரியவர்.
4 ஒவ்வொரு வீட்டுக்கும் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும். உலகெல்லாம் கட்டி அமைத்தவர் கடவுளே.
5 மோயீசன் அவருடைய வீடு முழுவதையும் கண்காணிப்பதில் உண்மையுள்ளவராயிருந்தது ஊழியன் என்னும் முறையில்தான். இறைவன் அறிவித்தவற்றிற்குச் சாட்சியம் பகர்ந்ததே அவர் செய்த ஊழியம்.
6 கிறிஸ்துவோ தம் சொந்த வீட்டின்மேல் அதிகாரம் பெற்ற மகன் என்ற முறையில் உண்மையுள்ளவராய் இருந்தார். அவருடைய வீடு நாம்தாம்@ ஆனால். நம்பிக்கையில் ஊன்றிய மகிமையையும் துணிவையும் உறுதியாய்ப்பற்றி நிற்கவேண்டும்.
7 எனவே, பரிசுத்த ஆவி கூறுவதுபோல், ~இன்று நீங்கள் அவர்தம் குரலைக் கேட்பீர்களாகில்
8 பாலைவனத்தின்கண் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்தது போல் நீங்கள் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள்.
9 உங்கள் முன்னோர் அங்கே நாற்பது ஆண்டளவு என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10 அதனாலேயே அந்தத் தலைமுறைமீது சீற்றம் கொண்டு, ~எந்நாளும் தவறுகின்றது இவர்கள் உள்ளம். என் வழிகளையோ இவர்கள் அறியவில்லை~ என்றேன்.
11 ஆகவே நான் சினங்கொண்டு ~எனது இளைப்பாற்றியை அவர்கள் அடையவே மாட்டார்கள்~ என்று ஆணையிட்டேன்."
12 சகோதரரே, உயிருள்ள கடவுளை மறுதலிக்கச் செய்யும் அவிசுவாசமான தீய உள்ளம் உங்களுள் யாருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
13 உங்களுள் எவனும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு அடங்கா உள்ளத்தினன் ஆகாதவாறு ~இன்று~ எனக் குறிப்பிடும் காலம் நீடிக்கும் வரையில் நாடோறும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்.
14 ஏனெனில், நாம் கிறிஸ்துவோடு பங்கு பெற்றவர்களானோம்@ ஆனால் தொடக்கத்தில் நமக்கிருந்த நம்பிக்கையை இறுதிவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
15 "இன்று நீங்கள் அவர் தம் குரலைக் கேட்பீர்களாகில் கிளர்ச்சியின் போது இருந்ததுபோல் நீங்கள் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள் " என்ற பகுதியில்,
16 குரலைக் கேட்டும் ~கிளர்ச்சி~ செய்தவர்கள் யார்? மோயீசனின் தலைமையில் எகிப்தினின்று வெளியேறிய மக்கள் அனைவருந்தானே?
17 ~நாற்பது ஆண்டளவு கடவுள் சீற்றம் கொண்டது~ யார்மீது? பாவம் புரிந்தவர்கள் மீதன்றோ? அவர்களுடைய பிணங்களும் பாலைவனத்தில் விழுந்துகிடந்தன.
18 மீண்டும், ~எனது இளைப்பாற்றியை அடையவே மாட்டார்கள்~ என்று ஆணையிட்டுக் கூறியது யாருக்கு? கீழ்ப்படியாத மக்களுக்கு அன்றோ?
19 விசுவாசமின்மையால்தான் அவர்கள் அதை அடைய முடியவில்லை எனத் தெரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எபிரேயருக்கு எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு, ஏற்பாடு, நீங்கள், வீடு, எபிரேயருக்கு, நிருபம், குரலைக், எழுதிய, அடங்கா, ", ஆண்டளவு, உள்ளத்தினராய், சீற்றம், இராதீர்கள், உள்ளம், மாட்டார்கள்~, உங்களுள், அடையவே, இளைப்பாற்றியை, போது, ~எனது, இவர்கள், அவர், பங்கு, நாம், பரிசுத்த, அதிகாரம், திருவிவிலியம், ஆன்மிகம், முழுவதையும், கண்காணிப்பதில், அவருடைய, கேட்பீர்களாகில், இருந்ததுபோல், உண்மையுள்ளவராக, மோயீசன், கிளர்ச்சியின்