யாகப்பர் எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 4
2 பிறர் பொருள்மீது ஆசை வைக்கிறீர்கள்@ அதைப் பெறாததால், கொலை செய்கிறீர்கள்@ பேராசை கொள்கிறீர்கள்@ ஆசைப்படுவதை அடைய முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். ஆசைப்படுவதை ஏன் அடைய முடியவில்லை? இறைவனிடம் கேட்காததால் தான்.
3 கேட்டாலும் ஏன் அடைவதில்லை? தீய எண்ணத்தோடு கேட்பதாலே. கிடைப்பதைக் கீழ்த்தர ஆசைகளை நிறைவேற்றுவதில் செலவழிக்கவே கேட்கிறீர்கள்.
4 விபசாரிகள் போல் வாழ்பவர்களே, உலகத்தோடு நட்பு கொள்வது, கடவுளைப் பகைப்பது என அறியீர்களோ? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும், கடவுளுக்குப் பகைவனாகிறான்.
5 நம்முள் குடியிருக்கச் செய்த ஆன்மாவை இறைவன் பேராவலோடு நாடுகிறார் என மறைநூல் கூறுவது வீண் என எண்ணுகிறீர்களோ?
6 நாம் அதற்கேற்ப வாழ நமக்குத் தேவைக்கு மேலாகவே அருளையும் வழங்குகிறார்@ ஆகவேதான், " செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்@ தாழ்ச்சியுள்ளவர்களுக்கோ அருளை அளிக்கிறார்" என்று எழுதியுள்ளது.
7 ஆகவே கடவுளுக்குப் பணிந்து நடங்கள்.
8 அலகையை எதிர்த்து நில்லுங்கள், அது ஓடி விடும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்@ அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்@ இருமனத்தோரே, இதயங்களைப் புனிதப்படுத்துங்கள்.
9 உங்கள் இழி நிலையை உணர்ந்து புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு அழுகையாக மாறட்டும்@ மகிழ்ச்சி துயரமாகட்டும்.
10 ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்: அவர் உங்களை உயர்த்துவார்.
11 சகோதரர்களே, ஒருவரைப்பற்றியொருவர் அவதூறு பேசாதீர்கள். தன் சகோதரனுக்கு எதிராக அவதூறு பேசுபவன் அல்லது தீர்ப்பிடுகிறவன் திருச்சட்டத்திற்கு எதிராகவே பேசுகிறான். அச்சட்டத்திற்கே தீர்ப்பிடுகிறான். சட்டத்திற்கு நீ தீர்ப்பிட்டால், நீ அதை நிறைவேற்றுபவன் அல்ல@ தீர்ப்பிடுகிறவன் ஆகிறாய்.
12 திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பிடுகிறவரும் ஒருவரே. அவரே ஆக்கவும் அழிக்கவும் வல்லவர். அவ்வாறாயின் உன் அயலானுக்குத் தீர்ப்பிட நீ யார்?
13 "இன்றோ நாளையோ அந்த நகர்க்குச் செல்வோம், அங்கே ஓராண்டு தங்கி வியாபாரம் செய்வோம்@ பணம் சம்பாதிப்போம்" என்றெல்லாம் பேசுகிறீர்களே, சற்றுக் கேளுங்கள்.
14 நாளைக்கு உங்கள் வாழ்க்கை என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியாதே. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகையே நீங்கள்.
15 ஆகவே அப்படிப் பேசாமல், "ஆண்டவர்க்குத் திருவுளமானால் நாம் உயிர் வாழ்வோம், இன்னின்ன செய்வோம்" என்று சொல்வதே சரி.
16 நீங்கள் இப்போது வீம்பு பாராட்டித் தற்பெருமை கொள்ளுகிறீர்கள்.
17 இதுபோன்ற தற்புகழ்ச்சி நல்லதன்று. ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் அவனுக்கு அது பாவம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யாகப்பர் எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு, உங்கள், ஏற்பாடு, யாகப்பர், நிருபம், ", எழுதிய, ஆகவே, தீர்ப்பிடுகிறவன், நீங்கள், நாம், அவதூறு, உங்களை, கீழ்த்தர, ஆன்மிகம், திருவிவிலியம், சண்டை, என்ன, அடைய, ஆசைப்படுவதை, கடவுளுக்குப்