இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே। தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25 ॥ |
ஆன்மா காண முடியாதது. சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என்று சொல்லபடுகிறது. இதனை அறிந்துக்கொள் . துக்கம் உனக்கு தகாதது.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்। ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥ |
பெரும்தோல் உடையவனே ! மனிதன் பிறப்பும் இறப்பும் உடையவன் என்று ஒருவேளை நினைப்பாயானால் அப்போதும் வருந்துவது பொருந்தாது.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச। தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥ |
பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம், இறந்தவன் பிறப்பது உருதி, பரிகாரம் காண முடியாத இந்த விஷயத்தில் நீ கவலைப்படுவது பெருந்தாது.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத। அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥ |
அர்ஜுனா ! உயிரினங்கள் ஆரம்பத்தில் தென்படுவதில்லை, இடையில் தென்படுகின்றன. இறுதியில் தென்படாமல் போகின்றன. இவை பற்றி வருத்தம் எதற்கு ?
ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம் ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:। ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதி ஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥ |
இந்த ஆன்மாவை ஒருவன் ஆச்சரியமானது போல் பார்க்கின்றான், மற்றொருவன் ஆச்சரியமானது போல் பேசுகின்றான், இன்னொருவன் ஆச்சரியமானது போல் கேட்கிறான். கேட்டும் யாரும் இதனை அறிவதில்லை.
தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத। தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥ |
அர்ஜுனா ! எல்லா உடம்பிலும் இருக்கின்ற இந்த ஆன்மாவை ஒரு போதும் கொல்ல முடியாது.எனவே எந்த உயிரைபற்றியும் நீ வருந்துவது பொருந்தாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, இரண்டாவது, த்வம், ஷோசிதுமர்ஹஸி&, அத்தியாயம், ஸ்ரீமத், ஸாங்க்ய, யோகம், போல், ஆச்சரியமானது, பாரத&, அர்ஜுனா, பூதாநி, ஆன்மாவை, இதனை, bhagavad, gita, இந்து, வருந்துவது, பொருந்தாது