இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம் உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥ |
ஆன்மாவை கொலையாளி என்றும் கொலை செய்யப்பட்டது என்றும் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். ஆன்மா கொல்லபடுவதுமில்லை கொல்வதுமில்லை.
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:। அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥ |
இந்த ஆன்மா ஒரு போதும் பிறந்ததில்லை, இறந்ததுமில்லை, உண்டாகி மீண்டும் இல்லாமல் போவதும் இல்லை. இது பிறப்பற்றது இறப்பற்றது நிலையானது பழமையானது. ஆதலால் உடம்பு கொல்லப்பட்டாலும் ஆன்மா கொள்ளப்படுவதில்லை.
வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்। கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥ |
அர்ஜுனா ! இந்த ஆன்மாவை அழிவற்றதாக என்றென்றும் இருப்பதாக ,பிறப்பற்றதாக, குறைவற்றதாக யார் அறிகிறானோ அவன் யாரை எப்படி கொல்வான் ? யாரை எப்படி கொல்ல செய்வான்.
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி। ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥ |
பழைய உடைகளை களைந்துவிட்டு புதிய உடைகளை மனிதன் அணிந்துகொள்வது போல் ஆன்மா பழைய உடம்புகளை விட்டுவிட்டு புதிய உடம்புகளை ஏற்று கொள்கிறது.
நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:। ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥ |
ஆன்மாவை ஆயுதங்கள் வெட்டாது. தீ எரிக்காது. தண்ணீர் நனைக்காது, காற்று உலர்த்தாது.
அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச। நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥ |
ஆன்மாவை வெட்ட முடியாது,எரிக்க முடியாது.நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது .
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, ஆன்மாவை, முடியாது, பகவத்கீதை, ஆன்மா, இரண்டாவது, ஸ்ரீமத், யோகம், ஸாங்க்ய, அத்தியாயம், நவாநி, எப்படி, ஜீர்ணாநி, விஹாய, உடைகளை, நைநம், உடம்புகளை, யாரை, பழைய, அயம், நாயம், இந்து, gita, ஹந்தி, என்றும், நிலையானது, bhagavad, நித்ய, என்றென்றும்