பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி। ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்॥ 18.54 ॥ |
சமகாட்சி நிலையில் உறுதிபெற்ற, தெளிந்த மனம் உடைய அவன் கவலைபடுவதில்லை, ஆசை கொள்வதில்லை. எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கின்ற அவன் என் மீது உயர்ந்த பக்தியை அடைகிறான்.
பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஷ்சாஸ்மி தத்த்வத:। ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநம்தரம்॥ 18.55 ॥ |
நான் யார், எப்படிபட்டவன் என்பதை உள்ளது உள்ளபடி பக்தியால் அவன் அறிகிறான். அவ்வாறு என்னை உள்ளபடி அறிந்த பிறகு விரைவில் என்னை அடைகிறான்.
ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஷ்ரய:। மத்ப்ரஸாதாதவாப்நோதி ஷாஷ்வதம் பதமவ்யயம்॥ 18.56 ॥ |
எப்போதும் என்னை சரணடைந்து, எல்லா வேலைகளையும் செய்பவன் நிலையான குறையற்ற நிலையை எனதருளால் அடைகிறான்.
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:। புத்தியோகமுபாஷ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ॥ 18.57 ॥ |
எல்லா வேலைகளையும் மனத்தால் என்னிடம் வைத்து, என்னையே கதியாக கொண்டு, புத்தி யோகத்தின் மூலம் எப்போதும் என்னில் நிலைபெற்றவனாக ஆவாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதினெட்டாவது, அவன், அடைகிறான், என்னை, எல்லா, ஸ்ரீமத், மோட்ச, அத்தியாயம், யோகம், சன்யாஸ, எப்போதும், வேலைகளையும், bhagavad, உள்ளபடி, இந்து, gita