பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே। ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா॥ 18.50 ॥ |
குந்தியின் மகனே ! ( செயலில் செயலின்மை காண்கின்ற ) உயர் நிலையை அடைந்தவன் ஞானத்தின் மேலான முடிவாகிய இறைவனை எப்படி அடைகிறானோ அதை சுருக்கமாக கூறுகிறேன்.
புத்த்யா விஷுத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச। ஷப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச॥ 18.51 ॥ விவிக்தஸேவீ லக்வாஷீ யதவாக்காயமாநஸ:। த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஷ்ரித:॥ 18.52 ॥ அஹம்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்। விமுச்ய நிர்மம: ஷாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 18.53 ॥ |
தூய புத்தியுடன், உறுதியாக தன்னை அடக்கி, ஒளி முதலான விஷயங்களை விட்டு, விருப்பு வெறுப்பை நீக்கி, தனிமையில் இருந்து, மிதமாக உண்டு, சொல் செயல் மனம் இவற்றை கட்டுபடுத்தி, எப்போதும் தியான யோகத்தில் திளைத்திருந்து காமம் கோபம் உடைமை இவற்றை விட்டு எனதென்பது இல்லாமல் சாந்தமாக இருப்பவன் சமகாட்சி நிலையை அடைவதற்கு தகுதி உடையவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பதினெட்டாவது, யோகம், அத்தியாயம், மோட்ச, சன்யாஸ, விட்டு, இவற்றை, காமம், gita, bhagavad, இந்து, நிலையை