பாடல் 939 - பட்டாலியூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தனனத் தான தானன தனதன தனனத் தான தானன தனதன தனனத் தான தானன ...... தனதான |
இருகுழை யிடறிக் காது மோதுவ பரிமள நளினத் தோடு சீறுவ இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர எமபடர் படைகெட் டோட நாடுவ அமுதுடன் விடமொத் தாளை யீருவ ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும் உருகிட விரகிற் பார்வை மேவுவ பொருளது திருடற் காசை கூறுவ யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல் உயிர்வதை நயனக் காதல் மாதர்கள் மயல்தரு கமரிற் போய்வி ழாவகை உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே முருகவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி மாமயில் முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே முரண்முடி யிரணச் சூலி மாலினி சரணெனு மவர்பற் றான சாதகி முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம் பருகினர் பரமப் போக மோகினி அரகர வெனும்வித் தாரி யாமளி பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும் பறையறை சுடலைக் கோயில் நாயகி இறையொடு மிடமிட் டாடு காரணி பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே. |
(இவர்களின் கண்கள்) காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை (எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பன. (பயன் தருவதில்) நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. ரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின் காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ? நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின* பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல், முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே, வலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள், கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி, அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள், சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி, சிவ பெருமானோடு, அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள், அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில்** வீற்றிருப்பவனுமான, பெருமாளே.
இப்பாடலின் முதல் 10 வரிகள் வேசையரின் கண்களைப் பற்றிய வர்ணனை.* மயிலாகி முருகவேளுக்கு வாகனமாகத் தன் முற்பிறப்பில் சூரன் விரும்பினான்.
** இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 939 - பட்டாலியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தானன, தனனத், தனதன, மாலையை, வாகனம், உனக்கு, கொண்ட, செய்பவள், உடையவள், வீசும், பச்சை, பொருட்டு, அரகர, தாவி, காளி, பெருமாளே, இருக்கும், மணம், வாழும்