பாடல் 935 - ரா.புரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன தந்த தானன தத்தன ...... தனதான |
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப் பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான் பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற் கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே. |
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
(*2) ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
(*3) கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிரம் முதலிய உலோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தார். எனவே இங்ஙனம் கூறப்பட்டுள்ளது.
(*4) 'ராஜபுரம்' இப்போது 'ராசிபுரம்' என வழங்கப்படுகிறது. இது சேலம் ரயில் நிலையத்திலிருந்து 20 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 935 - ரா.புரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொங்கு, என்ன, தானன, தந்த, தத்தன, வல்லவன், உள்ள, ராவஅ, யானை, போற்றவும், மிக்கது, வீசும், மணம், நாட்டில், பொன், உடையவன், பெற்றவன், சங்கு, கற்றவன், சங்க, அழகிய, பெருமாளே, நான்கு