பாடல் 91 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் -
செஞ்சுருட்டி; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான ...... தனதானா |
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே திந்திதிமி தோதி தீதித் தீதி தந்ததன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான சிந்துரமின் மேவு போகக் கார விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான செஞ்சமரை மாயு மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 91 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், தந்ததன, அழகிய, அன்பு, கொண்டவனே, உடையதும், அழகு, பெருமாளே, தேடித், தேடி, தகிட, ஓடிப்போக