பாடல் 88 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தான தானன தந்தன தந்தன தான தானன தந்தன தந்தன தான தானன தந்தன தந்தன ...... தனதானா |
மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் மூடு சீலைதி றந்தம ழுங்கிகள் வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள் ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள் வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும் நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள் காசி லாதவர் தங்களை யன்பற நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ...... ளவர்தாய்மார் நீலி நாடக மும்பயில் மண்டைகள் பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள் நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ பாயு மாமத தந்திமு கம்பெறு மாதி பாரத மென்றபெ ருங்கதை பார மேருவி லன்றுவ ரைந்தவ ...... னிளையோனே பாவை யாள்குற மங்கைசெ ழுந்தன பார மீதில ணைந்துமு யங்கிய பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா சீய மாயுரு வங்கொடு வந்தசு ரேசன் மார்பையி டந்துப சுங்குடர் சேர வாரிய ணிந்தநெ டும்புயன் ...... மருகோனே தேனு லாவுக டம்பம ணிந்தகி ¡£ட சேகர சங்கரர் தந்தருள் தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 88 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தானன, கொண்ட, நேசத்தை, மீது, உள்ள, சங்கரர், நீலி, சந்தன, பெருமாளே