பாடல் 857 - திருப்பனந்தாள் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தா தத்தன தந்தா தத்தன தந்தா தத்தன ...... தனதான |
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை யென்றே செப்பிய ...... மொழிமாதர் கொங்கார் முத்துவ டந்தா னிட்டத னந்தா னித்தரை ...... மலைபோலே வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம னந்தா னிப்படி ...... யுழலாமல் மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம் என்றே யிப்படி ...... அருள்வாயே இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட மண்டா நற்றவர் ...... குடியோட எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி யென்றே திக்கென ...... வருசூரைப் பந்தா டித்தலை விண்டோ டக்களம் வந்தோ ரைச்சில ...... ரணகாளிப் பங்கா கத்தரு கந்தா மிக்கப னந்தா ளுற்றருள் ...... பெருமாளே. |
* திருப்பனந்தாள் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 857 - திருப்பனந்தாள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எங்கே, தந்தா, னந்தா, தத்தன, மலையில், வந்த, பெருமாளே, யென்றே, என்றே, சர்க்கரை