பாடல் 611 - ஊதிமலை - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து போகமுற வேவி ரும்பு ...... மடியேனை நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர நீலமயி லேறி வந்த ...... வடிவேலா ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே. |
* ஆவுடையாள் என்றால் பசு ஏறும் பிராட்டி - திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர் உண்டு.
** ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 611 - ஊதிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தானதன, பெயர், கடவுளே, எனக்கு, பெருமாளே, ரிந்து, தங்கள், தகிட, ஊதிமலை