பாடல் 312 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- ....
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன் றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங் கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும் பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங் கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதை புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும் புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும் புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப் புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும் பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும் பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோ அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும் பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம் பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாக அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன் றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன் றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந் தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ் சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன் தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந் தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ் சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந் தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 312 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அவன், நிற்கும், தத்தத், உடைய, இருக்கும், தனதனந், தத்தன, தத்தம், ஒப்பற்ற, பற்றி, வீசும், தனது, அந்த, கற்பக, பெருமாளே, முன்பு