பாடல் 22 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் - 7 - கண்ட ஜாதி ரூபகம்
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2
தந்தன தனந்தனந் தனதனத் தந்தன தனந்தனந் தனதனத் தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான |
அந்தகன் வருந்தினம் பிறகிடச் சந்தத மும்வந்துகண் டரிவையர்க் கன்புரு குசங்கதந் தவிரமுக் ...... குணமாள அந்திப கலென்றிரண் டையுமொழித் திந்திரி யசஞ்சலங் களையறுத் தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச் செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக் கந்தனை யறிந்தறிந் தறிவினிற் சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் ...... தணியாத சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித் தென்செய லழிந்தழிந் தழியமெய்ச் சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ கொந்தவிழ் சரண்சரண் சரணெனக் கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக் குன்றிடி யஅம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக் குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத் தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான சங்கரி மனங்குழைந் துருகமுத் தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 22 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தனந், தந்தன, கிணின், தனதனத், நிலை, கிடக்கும், வரும், அழகிய, ஆன்மா, சரணம், நெகிழ்ந்து, சரவணப், கிண்கிணி, பெருமையைக், தண்டைகள், கலின்கலின், தகிட, சங்கரி, பெருமாளே