பாடல் 181 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த ...... தனதான |
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும் இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள் செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர் பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே. |
* குபேரன் புத்திரர்களான நளகூபரன், மணிக்¡£வன் என்ற இருவரும் மது அருந்தி, ஜலக்¡£டை செய்து, நாரதர் முன் மரம் போல் நிற்க, அவர் நீங்கள் மரமாகவே நிற்பீர் என்று சபித்தார். ஆகவே இருவரும் மருத மரங்கள் ஆயினர். யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து மரங்களுக்கு இடையே செல்ல, மரங்கள் முறிந்து விழுந்து, சாபம் நீங்கினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 181 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதனன, மிகுந்த, நகரை, மருத, தவழ்ந்து, மரங்கள், இருவரும், வினை, இடையே, முன், வென்ற, வந்து, றந்து, வந்த, பெருமாளே, செய்த, வீற்றிருக்கும், போல்