கிருபானந்த வாரியார் - நடிகவேள் எம்.ஆர்.ராதா - சிரிக்க-சிந்திக்க
இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிருபானந்த வாரியார் - நடிகவேள் எம்.ஆர்.ராதா - சிரிக்க-சிந்திக்க, வாரியார், ஜோக்ஸ், நடிகவேள், கிருபானந்த, jokes, சிரிக்க, ராதா, சிந்திக்க, ", எப்படி, தூக்கம், சாமி, அனைவரும், நகைச்சுவை, சர்தார்ஜி, இருவரும், திருமண