இயல்புதானே? - சிரிக்க-சிந்திக்க

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார்.
அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப் போனார்.
ஆதீனத் தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார்.
ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல், ''இயல்பாக என்ன இப்போது நடந்தது?'' என்று கேட்டார்.
கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார், ''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?
''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயல்புதானே? - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், இயல்புதானே, ஆதீனத், jokes, செட்டியார், நகைச்சுவை, சிரிக்க, தலைவர், சிந்திக்க, நடந்திருக்கிறது, இப்போது, கதிரேசன், சர்தார்ஜி, அவர், ஆதீனத்தை