டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் - இந்திய குடியரசுத் தலைவர்கள்

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இவரே இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் ஆவார்.
இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள ஜெராடை என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் மகாவீர சாகி, தாயார் பெயர் கமலேஸ்வரி தேவி ஆகும். இவருடைய தந்தை பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். தாயார் மிகுந்த சமயப் பற்றுள்ளவர். சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார்.
படிப்பு
இராஜேந்திர பிரசாத்திற்கு ஐந்து வயதான போது ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் (tutelage of a Moulavi) பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் கற்க இவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். சாப்ரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் பிரசாத் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு பிரசாத் தனது தமையனார் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார்.
பின்னர் டி. கே கோஷ் அகாடமியில் இரண்டாண்டு பயின்றார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி மாதம் ரூ.30 உதவித் தொகைப் பெற்று தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இராசேந்திர பிரசாத் படிக்கும் காலத்தில் பீகார் மாணவர் அவையை உருவாக்கினார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் செயலாற்றினார். பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
விடுதலைப் போர்
மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் கருத்துக்களால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவரின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறை தண்டனை பெற்றார். சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் நாள் விடுதலையானார்.
பதவிகள்
1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக இவர் நியமிக்கப்பட்daar. 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்
இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவராvaar. 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.
இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி பீகாரில் உள்ள பாட்னா என்ற இடத்தில் காலமானார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் - Dr.Rajendra Prasad - Presidents of India, இந்திய குடியரசுத் தலைவர்கள், Government of India, இந்திய அரசாங்கம், [kyx]