தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
கி.பி. 1888-1970
சி.வி. இராமன்; ஆராய்ச்சியாளர். முதலாவதாக நோபல் பரிசு பெற்ற தமிழர்.
கி.பி. 1894
இந்தியர்களை வெளிநாடுகளுக்குக் கட்டாய வேலைக்காக அனுப்புவது நிறுத்த மகாத்மா செய்த மனு வெற்றியானது
கி.பி. 1893-1974
அறிவியல் அறிஞர் ஜி.டி நாயுடு காலம். தமிழ் நாட்டின் தொழில் நிறுவனர் ஆராய்ச்சியாளர்.
கி.பி. 1894-1977
தமிழீழத் தந்தை செல்வா காலம். வாழும் தமிழர் எங்கும் தன்னுரிமையுடன் இருக்க வேண்டும் என்று தன்னலமற்ற உழைப்பை நல்கியவர்.
கி.பி. 1897
சுவாமி விவேகானந்தா இராமகிருட்டிண மடத்தை நிறுவினார்.
கி.பி. 1898-1907
காலராவில் 370,000 மக்கள் உயிரிழ்ந்தனர். இருபதால் நூற்றாண்டில் தமிழ்நாடு. சென்னை மாநிலம் குமரிமுனை முதல் ஒரிசாவரையிலும், மலபார்கன்னடப்பகுதிகள், ஆந்திரதேசமும் இணைந்து விளங்கியது. இருபதாம் நூற்றாண்டு பிரச்சினைகளுடன் அடியேடுத்து வைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களிடையே பண்பாட்டுணர்வும், பண்பாட்டு முனைப்பும் மேலோங்கி இருந்தன. பாரதியாரின் புரட்சிக்குரலும், வ.உ.சிதம்பரனார் இயக்கங்களும் மக்களை இழுத்தன. உரிமைக்குரல் கொடுக்க இனவாரி அமைப்புகள் தோன்றின.
கி.பி. 1900
செப்டெம்பர் 10 ஆம் நாள் தஞ்சை, மன்னார்குடி, மயிலாடுதுறை இணைத்து தஞ்சை மாவட்டம் ஆக்கப்பட்டது.
1902-1981
மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் காலம். அவர் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்கள் பல.
1905-1912
தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் தலைமையிலும் 1913 முதல் 1919 வரை பல தலைவர்கள் தலைமையிலும் விடுதலை இயக்கம் புரட்சிப்பாதையில் முன்னேறியது.
1905
பாரதியார் பொது மேடைகள் வழியாகவும் மையூற்றி முனை மூலமாகவும் தேசிய உணர்ச்சியைத் தூண்டினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காலம், தஞ்சை, தலைமையிலும், சிதம்பரனார், தமிழ், தமிழர், ஆராய்ச்சியாளர், இருபதாம்