திருமந்திரம் - ஆறாம் நூற்றாண்டு
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்
சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் திருமூலர்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே |
உடம்பு என்பது இழிவானதன்று. அது இறைவனுக்கு உரிய திருக்கோயில் என்பார் அவர்.
ஆசை அறுமின்
ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்பர். ஆசை அற்றால் அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும். எஞ்சி நிற்பது பேரானந்தமே.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே! |
ஒன்றே குலம் ஒருவனே கடவுள்
தமிழர் என்றும் எண்ணிப் பெருமைப்படத்தக்க பொதுமைத் தத்துவத்தை வழங்கியவர் திருமூலர். சாதி, மதம், நாடு, மொழி என்று பல தடைச் சுவர்களால் சிதறிக்கிடக்கும் மனித குலத்தை நோக்கி,
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை |
என முழங்கினார்.
என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம் என்று குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (85) ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் (250) உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் (1823) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமந்திரம் - Thirumanthiram - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருமந்திரம், ஆறாம், நூற்றாண்டு, அறுமின்கள், உடம்பை, வளர்த்தேன், தமிழ்நாட்டுத், தகவல்கள், தமிழ், நூல்கள், இலக்கிய, thirumanthiram, அவர், | , ஒன்றே, உடம்பு, ஒருவனே, என்றும், century, list, literatures, tamilnadu, information, உயிர், tamil, திருமூலர்