சிவகங்கை - தமிழக மாவட்டங்கள்
இளையாத்தங்குடி:
காவிரி பூம்பட்டிணத்திலிருந்து நகரத்தார்கள் வெளியேறிய பொழுது, பாண்டிய மன்னர் அவர்களுக்கு அளித்த முதல் ஊர் இளையாத்தங்குடி எனக் கூறப்படுகிறது. நகரத்தார்களின் முதன்மையான முக்கியமான குலதெய்வக் கோவில் இங்குள்ளது. நகரத்தார்கள் இப்பகுதியில் கோயில் கட்டியும் குளம் வெட்டியும் பெரும் பொருள் செலவிட்டுள்ளனர்.
பூலாங்குறிச்சி:
நாயக்க மன்னர்களின் வேண்டுகோளை ஏற்று சேதுபதி மன்னர் இவ்வூர் மறவர்களைத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி, குதுப்கான் படைகளை விரட்டியதாக வரலாறு கூறுகிறது.
திருக்கோளக்குடி:
இங்குள்ள கோயில் கல்வெட்டால் மதுரையில் நடைபெற்ற முஸ்லீம் ஆட்சியைப் பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. இவ்வூர் கோயில்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.
வேலங்குடி:
காட்டு வளமும் மலைவளமும் உடைய இவ்வூர் வழியாகச் செல்லும் மதுரை-புதுக்கோட்டை சாலை ராணி மங்கம்மாளால் அமைக்கப் பட்டதாகும். நகரத்தார் வரலாறு பற்றிய பழமை யான கல்வெட்டு இவ்வூரில் உள்ளது.
பிள்ளையார்பட்டி:
இங்கு அமைந்துள்ள கற்பக வினாயகர் கோவில் தமிழ்நாட்டில் புகழ் பெற்றது. இவ்வூரின் பழைய பெயர் எருக்காட்டூர். மலையாள நாட்டு மருத்துவர்களால் நடத்தப்படும் நாராயண ஆசிரமம் பல நோய்களைத் தீர்த்து வைத்து பிரபலம் அடைந்துள்ளது. புறநானுற்றில் 397 ஆம் பாடலை எழுதிய தாயன் கண்ணனார் பிறந்த ஊர்.
திருக்கோட்டியூர்:
வைணவத் தலமான இவ்வூர் திருப்பத்தூருக்கு தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. நற்றிணை 21ஆம் பாடலை எழுதிய சங்கப் புலவரான நல்லாந்தையார் இவ்வூரைச் சேர்ந்தவர். சோழியர் என்ற வைணவ அந்தணர் இங்கு வாழ்கின்றனர். வைணவப் பெரியார் திருக்கோட்டியூர் நம்பி இவ்வினத்தினரே.
சிங்கம்புணரி:
மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேவக்கோட்டை முதலிய பெருநகரங்கள் இவ்வூருக்கு சுமார் 35 மைல் தொலைவில் உள்ளன. பருத்தி, தென்னை வேளாண்மையில் இவ்வூர் சிறப்புற்றுத் திகழ்கிறது. வேர்க்கடலை வணிகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்ததாக இவ்வூர் விளங்குகிறது. வியாழன்தோறும் சந்தை நடைபெறுகிறது. தச்சுத் தொழிற்சாலை, தென்னை நாற்றுப் பண்ணை, பனை ஓலையை கொண்டு பல்பொருள் செய்யும் நிலையங்கள், கடலை அரைக்கும் ஆலைகள், கயிறு பின்னும் தொழில் ஆகியவற்றால் இவ்வூர் பெயர் பெற்றுத் திகழ்கிறது.
பிரான்மலை:
பிரான்மலை |
சாக்கோட்டை:
இது புதுவயலிலிருந்து ஒரு கல் தொலைவிலுள்ள சிற்றுர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வூரில் உள்ளது. வீரசேகரர்- உமையாம்பிகை ஆலயம் இவ்வூருக்கு சிறப்பு தருவதாய் அமைந்துள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், உள்ளது, சிவகங்கை, தொலைவில், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், திகழ்கிறது, சுனை, தகவல்கள், தமிழ்நாட்டுத், இங்கு, பெயர், எழுதிய, பாடலை, திருக்கோட்டியூர், பிரான்மலை, சாக்கோட்டை, | , பாரி, பீரங்கி, தென்னை, இவ்வூருக்கு, பெற்றுத், நகரத்தார்கள், பொழுது, இளையாத்தங்குடி, information, sivaganga, districts, மன்னர், கோவில், மதுரை, புதுக்கோட்டை, பற்றிய, வரலாறு, கோயில், இவ்வூரில்