காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
திரெளபதி ரதத்திற்கு தெற்கே உள்ள
கோயில் அர்ஜுனரதம். பழங்காலத்தில் செங்கல்லும் சுண்ணாம்பும்
கொண்டு செய்த கோயில்களின் அமைப்பையொட்டி இரண்டு நிலை
மாடத்துடன் செதுக்கப்பெற்றிருக்கிறது. முன்புறத்து அர்த்த
மண்டபத்தை சிங்கத் தூண்கள் தாங்கிநிற்கின்றன. இதன் வெளிப்புறச்
சுவரில் அழகான தூண்களும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களும்
அமைந்திருப்பதைக் காணலாம்.
முன்பாகம் தவிர மூன்று புறச் சுவர் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பெற்றுள்ளன. வடபுறம் மகா விஷ்ணுவையும் அவரருகில் கருடாழ்வானையும் பார்க்கலாம். இதையடுத்து ஓர் அரசனும் அரசியும் நிற்கிறார்கள். கிழக்குப்புறச் சுவரின் நடுவில் யானையின் மேல் அமர்ந்திருக்கும் இந்திரனையும், தெற்குச் சுவரில் ரிஷபத்துடன் சிவபிரானையும் காணலாம். அடுத்து நீண்ட சதுர வடிவில் அமைந்த கோயிலைப் பீமரதம் என்கிறார்கள். படகை கவிழ்த்து வைத்த மாதிரி மேல் பகுதி அமைப்பும், நாலுபக்கமும் சிங்கத் தூண்களும் தாழ்வாரங்களும் கொண்டது இது. இது திருமாலுக்காக ஏற்பட்ட ஆலயம்.
மகாபலிபுரம் |
கிழக்குக் கோடியில் அவரே அர்த்த நாரீசுவரராகவும் விளங்குகிறார். அவரருகில் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இப்படி சிறப்பான அமைப்புள்ள கற்கோயிலை வேறு எங்கும் காண முடியாது. மேல்பகுதி சிவபிரானுக்கும், நடுபகுதி விஷ்ணுவுக்கும் கீழ்ப்பகுதி பிரம்மாவுக்குமாக ஏற்பட்ட திமூர்த்தி கோயில் இது. மேற்கண்ட நான்கு ரதக் கோயில்களுக்கும் முன்னால் உள்ள சிறுகோயில் சகதேவ ரதம்.
இதன் வெளிப்புறத்தில சிற்பங்களே இல்லை. இது எந்த தெய்வத்துக்காகவும் அமைக்கப் பெற்றதில்லை. இந்திரன் இங்கிருந்து மும்மூர்த்திகளை வணங்குவதாக கொண்டு அமைத்த கோயிலாக இது இருக்க வேண்டும். அவனது வாகனம் ஐராவதம் என்ற யானை. அதுவும் பின்னால் இருக்கிறது. இந்த விமானத்தின் அமைப்பும் யானையின் பின்புறத்தை ஒத்தது.
தமிழில் இந்த வகை கோயில் அமைப்பை துங்கானை மாடம் என்றும், வடமொழியில் கஜ ப்ருஷ்டம் என்றும் சொல்வார்கள். இனி இந்த ஊரில் வந்த வழியே திரும்பிச் சென்றால் பார்க்க வேண்டியது புகழ் பெற்ற கடற்கரைக் கோயில். அலைமோதும் கடற்கரையில் கருங்கல்லினால் முதல் முதலாகக் கட்டியது இந்தக் கோயில்.
அலைகள் அடிப்பதாலும், உப்பங்காற்று வீசுவதாலும் இந்தக் கோயில் பழுது பட்டிருந்தாலும், இதன் அழகு சிறிதும் குன்றவில்லை. உயரமான விமானமும் அருகிலே சிறிய விமானமும் இரண்டு கோயில்களுக்கு ஏற்பட்டவை.
கடலை நோக்கியுள்ள கோயிலில் பெரிய லிங்கம் ஒன்றும், சோமாஸ்கந்தர் உருவமும் இக்கோயில் சிவபெருமானுக்காக அமைத்தது என்பதைக் காட்டும். இந்தக் கோயில்களின் முன்பக்கமும் பின்பக்கமும் பெரிய பிரகாரங்கள் இருந்தன.
கிழக்கே இருந்ததைக் கடல் கொண்டுவிட்டது. மேற்கே இருந்த பிரகாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மணல் மேடாக இருந்தது. மணலைத் தோண்டி மறைந்திருந்த சிற்பங்களைக் கண்டெடுத்து பல இடங்களில் வைத்து, ரிஷபங்களை வரிசையாக அமைத்து அழகு படுத்தியிருக்கிறார்கள், அரசாங்கத்தார்.
பழமையான பாடல் பெற்ற விஷ்ணுகோயிலில் வழிபாடு இல்லாத குறையை நீக்க, ஊர்நடுவில் ஸ்தலசயனப் பெருமாள் கோயில் ஒன்று அமைத்திருக்கிறார்கள். விருப்பம் உள்வர்கள் இங்கே வழிபாடு செய்து திரும்பலாம். இங்கிருந்து வடக்கே மூன்று மைல் தொலைவில் சளுவன்குப்பம் என்றொரு கிராமம்இருக்கிறது. அங்கே கடற்கரை யோரம் விசித்திரமான குகை ஒன்றைப் பார்க்கலாம். இதன் நடுவே ஒரு சிறு அறையுடன் மேடை ஒன்றும், அதற்கு மேல் அழகிய சிங்கச் சிற்ப வரிசையும் செதுக்கப் பெற்றிருக்கின்றன. இந்த மேடையில் அமர்ந்து பாடினாலும் பேசினாலும் நன்றாக ஒலிக்கிறது. இது பிரசங்க மேடையாக இருந்திருக்க வேண்டும். சிங்கச் சிற்பம் அமைந்த இக்குகைக்கு புலிக்குகை என்று தவறான பெயர் வழங்கி வருகிறது. மகாபலிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் முதலைப் பண்ணை இருக்கிறது. முதலைகளை இங்கு இனவிருத்தி செய்து வளர்க்கிறார்கள். எல்லா அளவிலும் முதலைகள் இங்கு இருக்கின்றன. புதுப்புது இன முதலைகளும் உள்ளன. மகாபலிபுரத்திலிருந்து சைக்கிளிலோ பஸ்சிலோ செல்லலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயில், இதன், காஞ்சிபுரம், tamilnadu, மேல், மாவட்டங்கள், தமிழக, ஒன்றும், மூன்று, இருக்கிறது, இந்தக், காணலாம், இரண்டு, செதுக்கப், தகவல்கள், தமிழ்நாட்டுத், பெற்ற, என்றும், இங்கிருந்து, பெற்றிருக்கின்றன, அழகிய, சிற்பம், வேண்டும், விமானமும், சிங்கச், மகாபலிபுரத்திலிருந்து, இங்கு, | , தொலைவில், செய்து, அதற்கு, பெரிய, வழிபாடு, அழகு, அமைப்பும், சிங்கத், சுவரில், தூண்களும், புடைப்புச், அர்த்த, கோயில்களின், information, உள்ள, கொண்டு, சிற்பங்களும், அமைக்கப், districts, கொண்டது, ஏற்பட்ட, அமைந்த, kancheepuram, அவரருகில், பார்க்கலாம், யானையின், கோடியில்